தமிழ் சினிமாவில் 5 தலைமுறை நடிகர்களுக்கு தனது பாடல்கள் மூலம் ஹிட் கொடுத்த கவிஞர் வாலி, ஆரம்பத்தில், பல இசையமைப்பாளர்களால் விரட்டி அடிக்கப்பட்டுள்ளார். அதையெல்லாம் தாங்கிக்கொண்டு சாதித்த அவர், தன்னை விரட்டியடித்த இசையமைப்பாளரின் இசையில் பல பாடல்களை எழுதியுள்ளார் என்பது பலரும் அறியாத ஒரு தகவல்.
தமிழ் சினிமாவில் வாலிப கவிஞர் என்று அழைக்கப்பட்ட வாலி, திருச்சி வானொலியில், நாடகங்கள் எழுதி வந்த நிலையில், பாடல் ஆசிரியர் ஆக வேண்டும் என்ற நோக்கத்தோடு சென்னை வந்துள்ளார். தனக்கு தெரிந்த சினிமா பிரபலங்களை வைத்து பல இசையமைப்பாளர்களிடம், வாய்ப்புக்காக அலைந்த வாலிக்கு ஏமாற்றமே மிஞ்சியுள்ளது. ஒரு கட்டத்தில் விரக்தியான கவிஞர் வாலி. இனிமேல் வேண்டாம் என்று முடிவு எடுத்து சொந்த ஊருக்கு திரும்ப தயாராகியுள்ளார்.
அப்போது அவரை சந்தித்த பிரபல பாடகரும் அவரது நெருங்கிய நண்பருமான பி.பி.ஸ்ரீனிவாஸ், தான் இப்போது பாடிய ஒரு பாடலை பாடிக்காட்டியுள்ளார். இந்த பாடலை கேட்ட வாலி, இனிமேல், ஒரு சிறந்த பாடல் ஆசிரியர் ஆகிவிட்டு தான் சென்னையில் இருந்து புறப்பட வேண்டும் என்று முடிவு செய்து மீண்டும் முயற்சி செய்துள்ளார். அந்த பாடல் கண்ணதாசன் எழுதிய மயக்கமா கலக்கமா என்ற பாடல். அதன்பிறகு பல மீண்டும் தனது முயற்சியை தொடங்கிய வாலிக்கு, 1963-ம் ஆண்டு வெளியான நீங்காத நினைவுகள் படத்தில் வாய்ப்பு கிடைத்துள்ளது.
எஸ்.எஸ்.ராஜேந்திரன், கல்யாண்குமார், விஜயகுமாரி ஆகியோர் நடித்திருந்த இந்த படத்திற்கு கே.வி.மகாதேவன் இசையமைத்திருந்தார், படத்தின் பாடல்கள் பெரிய வெற்றியை பெற்றிருந்துது. குறிப்பாக, வாலி இந்த படத்தில் 3 பாடல்களை எழுதியிருந்தார். இந்த படத்திற்காக நண்பரின், உதவியுடன் பாடல் எழுத வந்த வாலியை கே.வி.மகாதேவனுக்கு பிடிக்கவில்லை. ஆனாலும் தயாரிப்பாளர் தரப்பில் கூறிவிட்டதால் வேறு வழி இல்லாமல், அவரது பாடல்களுக்கு இசையமைத்துள்ளார்.
ஒரு கட்டத்தில் வாலியிடம் எதுவும் பேசாமல், அவரது பாடல்களுக்கு இசையமைப்பதை மட்டும் கவனித்த கே.வி.மகாதேவன், தனது முகத்தை இருக்கமாக வைத்துக்கொண்டுள்ளார். இதை கவனித்த வாலி, அவர் எதுவாக இருந்தாலும் என் முகத்திற்கு நேராக சொல்லியிருக்கலாம். அல்லது தயாரிப்பாளரிடமாவது சொல்லி இருக்கலாம். ஆனால் எதுவும் பேசாமல் இருந்தது தான் ஒரு மாதிரியாக இருந்துது என்று கூறியுள்ளார். முதல் சந்திப்பு இப்படி இருந்தாலும், பின்னாளில் வாலியின் பல பாடல்களுக்கு கே.வி.மகாதேவன் இசையமைத்துள்ளார்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“