Advertisment

வாலி பாடல் வரிகளுக்காக 3 நாள் ஜெய்ப்பூரில் காத்திருந்த 100 டான்ஸர்கள்: கமல்ஹாசன் ஹிட் பாட்டு பின்னணி

வாலி எழுதிக்கொடுக்கும் பாடலுக்காக 3 நாட்கள் வரை ஜெய்பூரில் நடன கலைஞர்களுடன் காத்திருந்துள்ளார் இயக்குனர் ஷங்கர்

author-image
WebDesk
New Update
Vaali Poet

தமிழ் சினிமாவின் முன்னணி பாடல் ஆசிரியராக இருந்த கவிஞர் வாலி, இயக்குனர் ஷங்கர் படத்தில் பாடல்கள் சிறப்பாக அமைவதற்காக முக்கிய காரணம் குறித்து பேசியுள்ளார்.

Advertisment

தமிழ் சினிமாவில் எம்.ஜி.ஆர் சிவாஜி உட்பட 5 தலைமுறை நடிகர்களுக்கு தனது வரிகள் மூலம் ஹிட் பாடல்களை கொடுத்தவர் கவிஞர் வாலி. தன் வாழ்நாளின் இறுதிவரை வாலிப கவிஞர் என்று அழைக்கப்பட்ட அவர்தற்போதைய முன்னணி நடிகரான சிம்பு வரை பல முன்னணி நடிகர்களுக்கு ஹிட் பாடல்களை கொடுத்துள்ளார். அதேபோல் எம்.எஸ்.விகே.வி.மகாதேவன் தொடங்கிய இன்றைய ஏ.ஆர்.ரஹ்மான் வரை பல இசையமைப்பாளர்களுடன் பணியாற்றியுள்ளார்.

எம்.ஜி.ஆர் படங்களுக்கு தொடர்ந்து பாடல்கள் எழுதி வந்த கண்ணதாசன்ஒரு கட்டத்தில் கருத்து மோதல் காரணமாக எம்.ஜி.ஆரை பிரிந்தபோதுஎம்.ஜி.ஆர் படங்களுக்கு தொடர்ந்து ஹிட் பாடல்களை கொடுத்த வாலிஅவருக்கானள ஏராளமான ஹிட் பாடல்களை கொடுத்து இன்று வரை அந்த பாடல்கள் ரசிகர்கள் மனதில் இடம்பெறும் வகையில், அமைத்துள்ளார். அதேபோல் சிவாஜி தொடங்கி இன்றைய முன்னணி நடிகரான சிம்பு வரை பல நடிகர்களுக்கு ஹிட் பாடல்களை கொடுத் வாலி, இயக்குனர் ஷங்கரின் படங்களில் பாடல்கள் வரவேற்பை பெறுவதற்கான காரணத்தை பற்றி கூறியுள்ளார்.

தமிழ் சினிமாவில் ஜென்டில்மேன் தொடங்கி தற்போது வரவிருக்கும் இந்தியன் 2 படம் வரை பல பிரம்மாண்ட வெற்றிப்படங்களை கொடுத்த இயக்குனர் ஷங்கரின் படங்களில் பாடல்கள் தனி இடத்தை பிடித்துள்ளனர். பெரும்பாலும் இவரது படங்களுக்கு ஏ.ஆர்.ரஹ்மான் தான் இசையமைப்பார். அதேபோல் ஹரிஸ்ஜெயராஜூடன் சில படங்களில் இணைந்த ஷங்கர் தற்போது அனிருத்துடன் இணைந்துள்ளார். இவர்கள் கூட்டணியில் உருவாகியுள்ள இந்தியன் 2 படம் அடுத்த வாரம் வெளியாக உள்ளது

தனது படங்களில் பாடல்கள் சிறப்பாக அமைய வேண்டும் என்று விரும்பும் ஷங்கர் அதற்காக எந்த் எல்லைக்கும் போகக்கூடியவது. பாடல் காட்சிக்காக பிரம்மாண்ட செட் அமைத்து டான்சர்ஸ் எல்லாம் இருந்தாலும், பாடல் வர தாமதமானால், அவர்களை காக்க வைப்பாதே தவிர, அவசர காதியில் ஒரு பாடலை எழுதி கொடுக்க சொல்லவே மாட்டார். ஒருமுறை ராஜஸ்தான் மாநிலம் ஜெய்பூரில் ஷூட்டிங் தொடங்க இருந்தது. மும்பையில் இருந்து 100 டான்சர்ஸ் ஜெய்பூர் ஹோட்டலில் தங்கியிருக்கின்றனர். இங்கு நான் எழுதிய பல்லவியை ஷங்கர் ஓகே செய்தால், பாடலை ஏ,ஆர்.ரஹ்மான் பதிவு செய்து ஷூட்டிங்கிற்காக ஜெய்பூர் அனுப்பிவிடுவார்.

ஷங்கர் என் வீட்டுக்கு பாடல் வாங்க வந்தபோது, பல்லவி சரியாக வரவில்லை. அவங்கள் ஷூட்டிங்கிற்கு வெயிட் செய்கிறார்கள் என்றால் எனக்கு பாட்டு வராது என்று வாலி சொல்ல, 3 நாள் ஆனாலும் பரவாயில்லை என்று ஷங்கர் சொல்ல, 3-வது நாள் மாலையில், சுவற்றில் உடுப்பு போவது போல் காட்சி எடுக்க போகிறேன் என்று ஷங்கர் சொல்ல, அதை வைத்து பாடலை எழுதியுள்ளார் வாலி. அந்த பாடல் தான் இந்தியன் படத்தில் இடம்பெற்ற ‘’மாயா மச்சிந்திரா’’ என்ற பாடல். இந்த தகவலை கவிஞர் வாலி கூறியுள்ளார். 

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil
kavignar vaali
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment