வாலிப கவிஞர் என்று போற்றப்படும் வாலி இயக்குனர் சிகரம் கே.பாலச்சந்தரின் பல படங்களுக்கு பாடல்கள் எழுதி இருந்தாலும், இருவருக்கும் இடையே சிறு உரசல் இருந்துள்ளது.
க்ளாசிக் சினிமவில் எம்.ஜி.ஆர் தொடங்கி இன்றைய டிஜிட்டல் சினிமாவின் சிம்பு வை 3 4 தலைமுறை நடிகர்களுக்கு பாடல்கள் எழுதிய பெருமைக்கு சொந்தக்காரர் கவிஞர் வாலி. கண்ணதாசன் எம்.ஜி.ஆரின் அஸ்தான பாடல் ஆசிரியாக இருந்தபோது தமிழ் சினிமாவின் என்டரி ஆன வாலி, எம்.ஜி.ஆர் கண்ணதாசன் இடையே ஏற்பட்ட மோதல் காரணமாக எம்.ஜி.ஆர் படங்களுக்கு பாடல் எழுத தொடங்கினார்.
அந்த வகையில் தனது வரிகள் மூலம் எம்.ஜி.ஆருக்கு பல ஹிட் பாடல்களை கொடுத்த வாலி தொடர்ந்து சிவாஜி உள்ளிட்ட முன்னணி நடிகர்களின் படங்களிலும் பாடல்கள் எழுத தொடங்கினார். அப்படித்தான் இயக்குனர் சிகரம் கே.பாலச்சந்தரின் பல படங்களுக்கு வாலி பாடல்கள் எழுதியுள்ளார். 1966-ம் ஆண்டு கே.பாலச்சந்தர் இயக்கததில் வெளியான மேஜர் சந்திரகாந்த் என்ற படத்தின் மூலம் வாலி பாலச்சந்தர் கூட்டணி உருவானது.
இந்த கூட்டணியில் அடுத்தடுத்து உருவான பல படங்களில் பாடல்கள் வெற்றி பெற்றிருந்த நிலையில், ஒரு கட்டத்தில் கே.பாலச்சந்தரின் பத்திரிக்கை பேட்டி ஒன்று வாலியின் மனதில் கோபத்தை ஏற்படுத்தியது. இந்த பத்திரிக்கை பேட்டியில், வாலி காட்சிக்கு பொருத்தமான பாடல்களை எழுதுவதை விட பாப்பிரட்டியை மனதில் வைத்து பாடல்கள் எழுதுவதே அதிகம் என்று குறிப்பிட்டிருந்தார். அவரின் இந்த கருத்து வாலிக்கு பெரிய காயத்தை ஏற்படுத்தியது.
காட்சிக்கு பொருத்தமான நான் பாடல்கள் எழுதவில்லை என்றால் இத்தனை ஆண்டுகாலமாக இந்த தமிழ் சினிமா என்னை ஏற்றுக்கொண்டிருக்காது. ஆனால் பாலச்சந்தர் இப்படி ஒரு கருத்தை ஏன் பதிவு செய்தார் என்பது எனக்கு தெரியவில்லை என்று கவிஞர் வாலி பல பத்திரிக்கை பேட்டிகளில் குறிப்பிட்டிருந்தார். இதனிடையே1983-ம் ஆண்டு தனது 50-வது படமாக பொய்கால் குதிரை என்ற படத்தை இயக்கினார் கே.பாலச்சந்தர்.
கே.பாலச்சந்தர் வாலி குறித்து பேசிய கருத்து இருவருக்குள்ளும் ஒரு உரசலை ஏற்படுத்தி இருந்தாலும், தனது பொய்கால் குதிரை படத்தில் நடிப்பதற்காக பாலச்சந்தர் வாலியை அனுகியபோது எந்தவித தயக்கத்தையும் காட்டாமல் ஒப்புக்கொண்ட வாலி, முதல் நான் படப்பிடிப்பில் பாலச்சந்தரின் காலில் விழுந்து ஆசீர்வாதம் வாங்கியுள்ளார்.
இது பற்றி ஒரு கட்டுரையில் குறிப்பிட்ட வாலி நான் கே.பாலச்சந்தர் என்ற ஒரு மகா இயக்குனரின் காலில் ஒரு கவிஞராக விழவில்லை. ஒரு கத்துக்குட்டி நடிகனாக விழுந்தேன் என்று வாலி குறிப்பிட்டிருந்தார். இருவருக்கும் இடையே கருத்து வேறுபாடு இருந்தாலும் அவர்கள் உறவில் எந்த மாற்றத்தையும் ஏற்படுத்தவில்லை என்று பத்திரக்கையாளர் இயக்குனர் நடிகர் சித்ரா லட்சுமணன் தெரிவித்துள்ளார்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“