எம்.ஜி.ஆர் முதல்வராக இருந்தபோது அவர் தயாரித்த ஒரு நிகழ்ச்சியை கவிஞர் வாலி மாற்றியமைதததாக கூறி கோபப்பட்டுள்ளார். அதன்பிறகு என்ன நடந்துத என்பது பலரும் அறிந்திடாத ஒரு தகவலாக உள்ளது.
1981-ம் ஆண்டு தமிழகத்தின் முதல்வராக எம்.ஜி.ஆர் இருந்த காலக்கட்டம். அப்போது 5-வது உலக தமிழ் மாநாடு மதுரையில் நடத்த திட்டமிட்ட எம்.ஜி.ஆர் இந்த மாநாட்டில் என்னென்ன நிகழ்ச்சிகள் நடத்தலாம் என்று பல தமிழ் அறிஞர்களை அழைத்து ஆலோசனை நடத்தியுள்ளார். இந்த ஆலோசனையில், மாநாட்டில் 3 கவியரங்கம் நடத்த திட்டமிடப்படுகிறது.
இதில் ஒரு கவியரங்கம், கண்ணதாசன் தலைமையிலும், 2-வது சுரதா தலைமையிலும், 3-வது புலமை பித்தன் தலைமையிலும் நடத்த முடிவு செய்யப்படுகிறது. இதற்கான நிகழ்ச்சி நிரலை அவ்வை நடராஜன் என்பவர் தயாரித்துள்ளார். அப்போது வாலிக்கு போன் செய்த எம்.ஜி.ஆர், உலக தமிழ் மாநாட்டில், கவியரங்கம் குறித்து சொல்லிவிட்டு, கண்ணதாசன் தலைமையிலான கவியரங்கத்தை நீங்கள் தொடங்கி வையுங்கள் என்று கூறியுள்ளார்.
எம்.ஜி.ஆரே இப்படி சொல்லிவிட்டாரே என்பதால் மறுத்து பேச முடியாமல் நீங்கள் எது செய்தாலும் சரிதாண்ணே என்று கூறியுள்ளார். அதன்பிறகு அவ்வை நடராஜனுக்கு போன் செய்த வாலி, கவியரங்கத்தை தொடங்கி வைக்க வேண்டுமானால், அந்த கவியரங்கத்திற்கு தலைமை தாங்கும் நபரை விட நான் வயதில் மூத்தவனாக இருக்க வேண்டும். ஆனால் கண்ணதாசனை விட நான் இளையவன். அதனால் அவரது கவியரங்கத்தை நான் திறந்து வைப்பது சரியாக இருக்காது. என்று கூறியுள்ளர்.
மேலும் இதற்கு பதிலாக என்னுடைய தலைமையில் ஒரு கவியரங்கம் நடத்தினால் கூட நன்றாக இருக்கும் என்று சொல்ல, அவ்வை நடராஜனும், அப்படியே செய்யலாமே நீங்கள் தலைப்பு கொடுங்கள் நான் நிகழ்ச்சி திட்டமிட்டுவி்ட்டு எம்.ஜி.ஆரிடம் சொல்கிறேன் என்று கூறியுள்ளார். அதன்பிறகு வாலி தலைப்பு சொல்ல, நிகழ்ச்சியை தயார் செய்த அவ்வை நடராஜன் எம்.ஜி.ஆரிடம் கொண்டு சென்று காட்டியுள்ளார்.
வாலி, கண்ணதாசன் கவியரங்கத்தை தொடங்கி வைக்க விரும்பவில்லை என்று சொல்லி, தனது தலைமையில் ஒரு கவியரங்கம் ஏற்பாடு செய்ய சொல்லி தலைப்பு கொடுத்துள்ளார் என்று சொல்ல, எம்.ஜி.ஆர் கோபமடைந்துள்ளார். உடனடியாக வாலிக்கு போன் செய்து, எதுவாக இருந்தாலும், என்னிடம் நேரடியாக சொல்லியிருக்கலாமே, இதை விட்டுவிட்டு நான் ஒரு திட்டமிட்டால் நீங்கள் ஒரு திட்டமிடுகிறீர்கள். தமிழ்நாட்டுக்கு நான் முதல்வரா இல்ல நீங்க முதல்வரா என்று கேட்டுவிட்டு கோபமாக போனை கட் செய்துள்ளார்.
அதன்பிறகு சினிமா பாடல் எழுதும் வாலி எப்படி கவியரங்க கவிதைகளை எழுதுவார் என்று கேட்க, அவ்வை நடராஜன் வாலியின் கவிதைகள் குறித்து எம்.ஜி.ஆரிடம் கூறியுள்ளார். இதை கேட்ட எம்.ஜி.ஆர் வாலியை அழைத்து இதை ஏன் முன்பே என்னிடம் சொல்லவில்லை. உங்கள் திறமைக்கான அங்கீகாரம் உங்களுக்கு கிடைக்கும் என்று சொல்லி, வாலி தலைமையில் ஒரு கவியரங்கத்தை ஏற்பாடு செய்துள்ளார். இந்த கவியரங்கத்தில் வாலி வாசித்த கவிதையின் ஒவ்வொரு வரிக்கும் கைத்தட்டல் கிடைத்து குறிப்பிடத்தகக்து.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“