Advertisment

நாட்டுப்புற பாட்டுக்கு மறுவடிவம்... வானொலியில் சாதனை படைத்த வாலியின் பாடல்

தமிழ் சினிமாவின் புதுமை இயக்குனர் என்று அழைக்கப்படும் இயக்குனர் ஸ்ரீதர் கடந்த 1979-ம் ஆண்டு இயக்கிய படம் அழகே என்னை ஆராதிக்கிறேன்.

author-image
WebDesk
New Update
Vaali Songs

வாலியின் பாடல்கள்

Listen to this article
0.75x 1x 1.5x
00:00 / 00:00

தமிழ் சினிமாவில் தனது வாழ்நாளின் கடைசி வரை வாலிப கவிஞர் என்று போற்றப்பட்டவர் தான் வாலி. எம.ஜி.ஆர் சிவாஜி தொடங்கி, ரஜினி கமல், விஜயகாந்த், சூர்யா சிம்பு வரை 5 தலைமுறை நடிகர்களுக்கு தனது வரிகள் மூலம் பல ஹிட் பாடல்களை கொடுத்த வாலி, கவியரசர் கண்ணதாசன் உச்சத்தில் இருந்த காலக்கட்டத்தில் அவருக்கு போட்டியாக வந்தவர்.

Advertisment

இருவருக்கும் இடையில் போட்டி இருந்தாலும், தனிப்பட்ட முறையில் நெருங்கிய நண்பர்களாகவும் இருந்துள்ளனர். இதை வாலியே பல பேட்டிகளில் குறிப்பிட்டுள்னார். அதேபோல், எம்.எஸ். விஸ்வநாதன் தொடங்கி பல இசையமைப்பாளர்களின் இசையில் பாடல்கள் எழுதியுள்ள வாலி, இளையராஜா இசையிலும் பல ஹிட் பாடல்களை கொடுத்துள்ளார். அந்த வகையில் இளையராஜா இசையமைத்த மெட்டையே பாட்டாக மாறிய தகவல் பலரும் அறியாத ஒன்று.

தமிழ் சினிமாவின் புதுமை இயக்குனர் என்று அழைக்கப்படும் இயக்குனர் ஸ்ரீதர் கடந்த 1979-ம் ஆண்டு இயக்கிய படம் அழகே என்னை ஆராதிக்கிறேன். விஜயகுமார் லதா ஜெய்கணேஷ் உள்ளிட்ட முக்கிய பிரபலங்கள் பலர் நடித்த இந்த படத்திற்கு, இளையராஜா இசையமைத்திருந்தார். ஒரே நேரத்தில் தமிழ் தெலுங்கு, கன்னடம் ஆகிய 3 மொழிகளில் இந்த படம் தயாரிக்கப்பட்டது.

தெலுங்கில் முரளி மோகன் மற்றும் கன்னடத்தில் ஸ்ரீகாந்த் ஆகியோர் நடித்திருந்தனர். இந்த படத்தில் முதல்முறையாக மது குடிக்கும் கிராமத்து பெண் பாடுவது போன்ற ஒரு பாடல் கேட்டு கவிஞர் வாலிக்கு அழைப்பு வருகிறது. பாடல் எழுத வந்த வாலி, டியூன் ஏதாவது இருக்கிறதா என்று கேட்டுள்ளார். இருக்கிறது என்று என்று கூறிய இசையமைப்பாளர் இளைரயாஜா அதை வாசித்தும் காட்டியுள்ளார்.

இந்த டியூனை கேட்ட, வாலி, அதையே பாட்டாக தனது முதல் வரியில் எழுதியுள்ளார். அந்த பாடல் தான் ‘’நானே நானா யாரோ தானா’’ லதா விஜயககுமார் நடிப்பில் வெளியான இந்த பாடலை வாணி ஜெயராம் பாடியிருந்தார். இந்த பாடல் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது.

அதேபோல், 1978-ம் ஆண்டு ஸ்ரீதர் இயக்கத்தில் வெளியான இளமை ஊஞ்சலாடுகிறது என்ற படத்திலும் ஒரு சம்பவம் நடந்துள்ளது. இந்த படத்தில் ஹீரோவும், ஹீரோயின் தோழியும் ஒரு இடத்தில் சந்திக்கின்றனர். அப்போது அவர்களுக்கு இடையில் ரொமான்ஸ் ஏற்படுகிறது. இதற்கு ஒரு பாடல் எழுத வேண்டும். இந்த பாடல் நாட்டுப்புற நடையில் இருந்தால் சரியாக இருக்கும் என்று இளையராஜா கூறியுள்ளார்.

இதை கேட்ட வாலி, இதற்கு டியூன் ஏதாவது இருக்கா என்று கேட்க, இளையராஜா தனது ஊர் பக்கத்தில் நாற்று நடும் பெண்கள் பாடும் ஒரு பாடலை பாடி காட்டியுள்ளார். அதில் தண்ணி கருத்திருக்கு தவளை சத்தம் கேட்டுருச்சி, பிள்ளை அழுதுருச்சி புண்ணியரே வேலை விடு என்று பாடி இந்த பாடலுக்கு மறு வடிவம் கொடுக்க வேண்டும் இல்லை என்றால் பாடல் அழிந்து விடும் என்று இளைரயாஜா கூறியுள்ளார்.

இதை கேட்ட வாலி, பாடல் ரொம்ப நல்லாருக்கே, என்று கூறி அதில் இருந்து முதல் 2 வரிகளை மட்டும் எடுத்துக்கொண்டு ஒரு ஹிட் பாடலை கொடுத்துள்ளார். அந்த பாடல் தான் தண்ணி கருத்துருச்சி தவளை சத்தம் கேட்டுருச்சி ஊரும் உறங்கிடுச்சி நாம ஒதுங்க இடம் கிடைச்சிருச்சி என்ற பாடல். இந்த பாடல் வெளியாகி பெரிய வரவேற்பை பெற்ற நிலையில், அந்த ஆண்டில் இலங்கை வாணொலியில் அதிகம் கேட்கப்பட்ட டாப் 10 பாடல்கள் வரிசையில் முதலிடம் பிடித்துள்ளது.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Tamil Cinema News
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment