Advertisment

மன்னிப்பு கேட்கச் சொன்ன சிவாஜி; அரைகுறை மேக்கப்புடன் வெளியேறிய நடிகை

தமிழ் மட்டுமல்லாமல் தெலுங்கிலும் சில படங்களில் நடித்துள்ள சிவாஜி கணேசன், சாவித்ரி, பத்மினி, சரோஜா தேவி முன்னணி நடிகைகள் பலருடன் இணைந்து நடித்துள்ளார்.

author-image
WebDesk
New Update
Venniradai Nirmala Sivaji Ganesan

சிவாஜி கணேசன் - வென்னிற ஆடை நிர்மலா

படப்பிடிப்புக்கு தாமதமாக வந்த நடிகை தன்னிடம் மன்னிப்பு கேட்க வேண்டும் என்று நடிகர் திலகம் சிவாஜி கணேசன் நினைத்ததால் அந்த நடிகை படப்பிடிப்பில் இருந்து வெளியேறிய சம்பவம் பலரும் அறிந்திடாத ஒரு தகவலாக உள்ளது.

Advertisment

நடக நடிகராக இருந்து சினிமாவிற்கு வந்த நடிகர்களில் முக்கியமானவர் சிவாஜி கணேசன். தனது நடிப்பின் மூலம் தற்போதைய நடிகர்களுக்கு இன்ஸ்பிரேஷனாக இருக்கும் இவர்1952-ம் ஆண்டு வெளியான பராசக்தி என்ற படத்தின் மூலம் சினிமாவில் அறிமுகமானார். இந்த படத்தில் அவர் பேசிய வசனங்கள்ஒரு அறிமுக நடிகரை போல் இல்லாமல்கைதேர்ந்த நடிகர் என்று ரசிகர்கள் நினைக்கும் அளவுக்கு நடிப்பில் முதிர்ச்சியை கட்டியிருந்தார்.

அதனைத் தொடர்ந்து பல படங்களில் தனது நடிப்பின் மூலம் முத்திரை பதித்த சிவராஜி கணேசன்ஒவ்வொரு படத்திற்கு வித்தியாசத்தையும் காட்டியிருந்தார். தமிழ் மட்டுமல்லாமல் தெலுங்கிலும் சில படங்களில் நடித்துள்ள சிவாஜி கணேசன்சாவித்ரிபத்மினிசரோஜா தேவி என க்ளாசிக் சினிமாவின் முன்னணி நடிகைகளாக இருந்த பலருடன் ஜோடியாக நடித்துள்ள நிலையில்80-களில் முன்னணி நடிகைகளாக இருந்த ராதா அம்பிகாவுடனும் இணைந்து நடித்துள்ளார்.

அந்த வகையில் சிவாஜியுடன் பல படங்களில் இணைந்து நடித்துள்ளவர் வென்னிறஆடை நிர்மலா. 1965-ம் ஆண்டு ஸ்ரீதரின் இயக்கத்தில் வெளியான வென்னிற ஆடை என்ற படத்தின் மூலம் அறிமுகமான இவர், 1968-ம் ஆண்டு வெளியான லட்சுமி கல்யாணம் என்ற படத்தின் மூலம் முதல்முறையாக சிவாஜியுடன் இணைந்து நடித்திருந்தார். அதன்பிறகு தங்க சுரங்கம், எங்க மாமா என சில படங்களில் இணைந்து நடித்தார்.

இதில் 1974-ம் ஆண்டு வெளியான படம் சிவகாமியின் செல்வன். சிவாஜி கணேசன், வாணிஸ்ரீ லதா ஆகியோர் இந்த நடித்திருந்த இந்த படத்தில், முக்கிய கேரக்டரில் நடிக்க வென்னிற ஆடை நர்மலா கமிட் ஆகி இருந்துள்ளார். அப்போது முதல் நாள் படப்பிடிப்புக்கான ஏற்பாடுகள் தீவிரமாக நடைபெற்ற போது ஊட்டியில் மற்றொரு படத்தின் படப்பிடிப்பில் இருந்த நிர்மலா ரயிலை தவறிவிட்டதால், குறிப்பிட்ட நேரத்தில் சிவகாமியின் செல்வன் படப்பிடிப்பில் கலந்துகொள்ள முடியவில்லை.

அதன்பிறகு மேட்டுப்பாளையத்தில் இருந்து, வாடகை கார் பிடித்து சென்னை வந்து சேர்ந்த வென்னிற ஆடை நிர்மலா, சிவகாமியின் செல்வன் படப்பிடிப்புக்காக மேக்கப் போட்டுக்கொண்டு இருந்துள்ளார். அப்போது உள்ளே வந்த ஒரு உதவியாளர் சிவாஜி ரொம்ப கோபமா இருக்காரு. நீங்க படப்பிடிப்புக்கு லேட்டா வந்துட்டீங்க, அதனால நீங்க மன்னிப்பு கேட்க வேண்டும் என்று சிவாஜி நினைக்கிறார் என்று கூறியுள்ளார்.

இதனால் கடுப்பான நிர்மலா உடனடியாக தனது டிரைவரை அழைத்து காரை எடுத்துக்கொண்டு புறப்பட்டு சென்றுள்ளார். அதன்பிறகு சிவகாமியின் செல்வன் படத்தில் வேறு நடிகை நடித்துள்ளார். இந்த சம்வத்திற்கு பிறகு சிவாஜியை ஒரு விருது வழங்கும் விழாவில் பார்த்த நிர்மலா அவரிடம் பேச தயங்கிய நிலையில், சிவாஜியே வந்து அவரிடம் பேசி நலம் விசாரித்துள்ளார். அப்போ தான் தனது தவறை உணர்ந்ததாக நர்மலா ஒரு பேட்டியில் தெரிவித்துள்ளார்.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Tamil Cinema News
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment