பார்த்திபனை ஹீரோவா போடுங்க; சிபாரிசு செய்த விஜயகாந்த்; இயக்குனர் சொன்ன சீக்ரெட்!

1989-ம் ஆண்டு வெளியான புதிய பாதை படத்தின் மூலம் இயக்குனர் மற்றும் ஹீரோவாக அறிமுகமானார். இந்த படம் அவருக்கு பெரிய அடையாளமாகவும் மாறியது.

1989-ம் ஆண்டு வெளியான புதிய பாதை படத்தின் மூலம் இயக்குனர் மற்றும் ஹீரோவாக அறிமுகமானார். இந்த படம் அவருக்கு பெரிய அடையாளமாகவும் மாறியது.

author-image
WebDesk
New Update
Parthiban Newws

தமிழ் சினிமாவில் வித்தியாசமான பல படங்களை இயக்கி வெற்றி கண்ட நடிகர் பார்த்திபன், முதன் முதலில் நடிகராக அறிமுகமான படம் புதிய பாதை. இந்த படத்தின் கதையை அவரே இயக்கி நாயகனாக நடித்திருந்தார். இந்த படத்தில் அவர் நாயகனாக நடிக்க, கேப்டன் விஜயகாந்த் தான் காரணம் என்று இயக்குனர் செந்தில்நாதன் ஒரு பேட்டியில் கூறியுள்ளார்.

Advertisment

தமிழ் சினிமாவில், வித்தியாசமான படங்களை இயக்கி வெற்றி கண்டவர் பார்த்திபன். நடிகராக வேண்டும் என்று முயற்சி செய்து ஒரு சில படங்களில், சிறிய வேடங்களில் நடித்து வந்த இவர், இயக்குனரும் நடிகருமான பாக்யராஜ் இயக்கத்தில் வெளியான தாவனி கனவுகள் படத்தில் உதவி இயக்குனராகவும், அந்த படத்தில் ஒரு முக்கிய கேரக்டரிலும் நடித்திருந்தார். இந்த படம் பெரிய வெற்றிப்படமாகவும் அமைந்தது.

1984-ம் ஆண்டு வெளியான தாவனி கனவுகள் படத்தில், நடித்திருந்தாலும், அதன்பிறகு 5 வருடங்கள், பட வாய்ப்பு இல்லாமல் இருந்த பார்த்திபன், இயக்குனர் ஆக வேண்டும் என்ற முயற்சியில், பல தயாரிப்பாளர்களிடம் கதை கூறியுள்ளார். ஆனாலும் அவர் இயக்குனர் ஆக யாரும் வாய்ப்பு கொடுக்கவில்லை. வாய்ப்பு கிடைத்தாலும், அந்த வாய்ப்புகள் பாதியில் நின்றுபோகம் நிலையே நீடித்துள்ளது. அதன்பிறகு, 1989-ம் ஆண்டு வெளியான புதிய பாதை படத்தின் மூலம் இயக்குனர் மற்றும் ஹீரோவாக அறிமுகமானார்.

நடிகை சீதா நாயகியாக நடித்த இந்த படத்தில் மனோரமா, நாசர், எஸ்.எஸ்.சந்திரன், வி.கே.ராமசாமி உள்ளிட்ட பலர் நடித்திருந்தனர். ஒரு ரவுடியை திருத்தும் மனைவியின் வாழ்க்கையை அடிப்படையாக வைத்து திரைக்கதை அமைக்கப்பட்ட இந்த படம் பெரிய வெற்றிப்படமாக அமைந்தது. பார்த்திபனுக்கும் பெரிய பாராட்டுக்களை பெற்று தந்தது. இந்த படத்தின் கதையில் தான் விஜயகாந்த் நடிக்க அசைப்பட்டுள்ளார். ஆனால் அவரது ஆசை நிராசையாக போனது.

Advertisment
Advertisements

இயக்குனர் ஆக வேண்டும் என்ற முயற்சியில் இருந்த பார்த்திபன், பல தயாரிப்பாளர்களிடம், கதையை கூறியுள்ளார். இந்த கதையை கேட்டு பிடித்துபோன சுந்தரம் என்ற தயாரிப்பாளர், விஜயகாந்திடம் சொல்ல, சொல்லி, பார்த்திபனை அனுப்பியுள்ளார். இந்த கதையை கேட்ட விஜயகாந்துக்கு மிகவும் பிடித்து போக நானே நடிக்கிறேன் என்று கூறியுள்ளார். மேலும், வில்லனிசம் இருக்கிறது. கடைசியில் திருந்துவது போலரும் உள்ளது அதனால் இந்த படம் செட் ஆகும் என்றும் விஜயகாந்த் கூறியுள்ளார்.

விஜயகாந்த் ஆர்வத்தை தடுத்த அவரது நெருங்கிய நண்பர் ராவுத்தர், இந்த படத்தில் நீ நடிப்பதை விடவும், இந்த கதையை சொன்ன மூர்த்தியே (பார்த்திபன்) நாயகனாக நடித்தால் சிறப்பாக இருக்கும் என்று சொல்ல, சற்று யோசித்த விஜயகாந்த், இந்த படத்தின் தயாரிப்பாளர் சுந்தரத்திற்கு போன் செய்து மூர்த்தியையே இந்த படத்தின் நாயகனாக போடுங்கள். படம் நல்லா வரும் என்று கூறி ரெக்கமண்ட் செய்துள்ளார். அதன்பிறகு வெளியான புதிய பாதை திரைப்படம் பார்த்திபனுக்கு பெரிய அடையாளமாக மாறியது குறிப்பிடத்தக்கது. 

R Parthipen

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us: