கமல்ஹாசன் அறிமுகமான முதல் படத்தில் சாவித்ரி ஆசையாக அவருக்கு சாப்பாடு ஊட்டியபோது கமல்ஹாசன் அதை சாப்பிட மறுத்துள்ளார். அதற்கு காரணம் என்ன என்பது குறித்து அப்போது உதவி இயக்குனராக இருந்த எஸ்.பி முத்துராமனிடம் கூறியுள்ளார் கமல்ஹாசன்.
தமிழ் சினிமாவில் புது டெக்னாலஜிகளை அறிமுகம் செய்து வைத்தவர் கமல்ஹாசன். சினிமாவில், அவருக்கு தெரியாத துறைகளே இல்லை என்று சொல்லும் அளவுக்கு, நடிகர், இயக்குனர், தயாரிப்பாளர், பாடகர், பாடல் ஆசிரியர் என பன்முக திறமைகளுடன் வலம் வரும் கமல்ஹாசன், 1954-ம் பிறந்த நிலையில், 1960-ம் ஆண்டு வெளியான களத்தூர் கண்ணம்மா படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானார்.
அதனைத் தொடர்ந்து, பல படங்களில் குழந்தை நட்சத்திரமாக நடித்திருந்த கமல்ஹாசன், இன்று தமிழ் சினிமாவில் அடையளமாக திகழ்கிறார். பீம்சிங் இயக்கத்தில், வெளியான இந்த படத்தில், ஜெமினி கணேசன், சாவித்ரி இணைந்து நடித்திருந்த நிலையில், ஜெமினிணேசனின் மகனாக கமல்ஹாசன் நடித்திருந்தார். இந்த படத்தில் ‘’அம்மாவும் நீயே அப்பாவும் நீயே’’ என்று கமல்ஹாசன் பாடுவது போன்று வரும் ஒரு பாடல் இன்றும் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது.
இந்த படம் பல திரையரங்குகளில் 100 நாட்கள் ஓடிய நிலையில், படத்தில் நடித்த நட்சத்திரங்களுடன் திரையரங்குகளுக்கு சென்று வெற்றி விழாவை கொண்டா முடிவு செய்த ஏ.வி.எம். நிறுவனம் அதற்கான ஏற்பாடுகளை செய்திருந்தது. சொன்னபடி அனைத்து நட்சத்திரங்களும் பங்கேற்றனர். இந்த விழாவில் நாயகன் ஜெமினி கணேசனை விடவும் கமல்ஹாசனுக்கு அதிக முக்கியத்துவம் கொடுக்கப்பட்டதால், ஜெமினி கணேசன் இன்சல்ட் ஆகியுள்ளார்.
அதேபோல் படப்பிடிப்பின்போது, நடிகை சாவித்ரி, கமல்ஹாசனுக்கு உப்புமா ஊட்ட வேண்டிய காட்சி. இந்த காட்சியில், உப்புமா எடுத்து அவருக்கு ஊட்ட, கம்ல்ஹாசன், அதனை சாப்பிட மறுத்துள்ளார். இதனால் படக்குழுவினர் அதிர்ச்சியடைந்த நிலையில், பக்கத்தில் இருந்த அனைவரும் சாப்பிடு சாப்பிடு என்று கூறியுள்ளனர். ஆனால் கமல்ஹாசன் உறுதியாக இருக்க, உதவி இயக்குனர் எஸ்.பி முத்துராமனட கமல்ஹாசனனை தனியாக அழைத்து சென்று என்ன என்று கேட்டுள்ளார்.
அங்கே மாம்பழம் இருந்தது அதுவும், டம்மியா இருக்கு, இங்கு புடவை இருக்கிறது இதுவும் உண்மையானது இல்லை. அதுபோல் இந்த சாப்பாடும் உண்மையாக சாப்பாடு என்று எப்படி நம்புவது என்று கேட்டுள்ளார். இதை கேட்ட சிரித்த எஸ்.பி.முத்துராமன், அது உண்மையான சாப்பாடு தான் என்று சொன்ன பிறகு சாப்பிட்டுள்ளார்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“