Advertisment
Presenting Partner
Desktop GIF

'சொன்னது நீதானா?..' இயக்குனரிடம் போட்டுக் கொடுத்த எம்.எஸ்.வி-ஐ பாட்டில் வறுத்த கண்ணதாசன்!

கண்ணதாசனை இயக்குனர் ஸ்ரீதரிடம் போட்டு கொடுத்த எம்.எஸ்.வியை கேள்வி கேட்கும் விதமாக கண்ணதாசன் எழுதிய ஒரு ஹிட் பாடல்

author-image
WebDesk
New Update
MSV and Kannadasan

கண்ணதாசன் மது அருந்தியதை இயக்குனரிடம் போட்டுகொடுத்த எம்.எஸ்.வியை பார்த்து கண்ணதாசன் எழுதிய ஒரு ஹிட் பாடல் இன்றும் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. இந்த பாடல் என்ன? எந்த படம் என்பது தெரியுமா?

Advertisment

1950 தொடங்கி 70களின் இறுதிவரை தனது பாடல்கள் மூலம் பல அரிய தத்துவங்களை சொல்லிக்கொடுத்த கண்ணதாசன், நடிகர், பாடல் ஆசிரியர், திரைக்கதை எழுத்தாளர் வசனகர்த்தா, தயாரிப்பாளர் என சினிமாவில் பன்முக திறமை கொண்ட முக்கிய பிரபலங்களில் ஒருவர் சிவாஜி உள்ளிட்ட முன்னணி நடிகர்களின் படங்களை தயாரித்தோடு மட்டுமல்லாமல் அவர்களுக்கு தனது எழுத்தின் மூலம்  ஹிட் பாடல்களையும் கொடுத்துள்ளார்.

அதேபோல் மெல்லிசை மன்னர் எம்.எஸ்.விஸ்வநாதனுடன் கண்ணதாசன் இணைந்தால் நிச்சயம் அந்த பாடல் ஹிட் தான் என்று சொல்லும் அளவுக்கு இருவருக்கும் இடையே அவ்வளவு புரிதலும் நெருக்கமும் இருந்தது. அதேபோல் இவர்களுக்கு இடையே அவ்வப்போது மோதல் ஏற்படுவதும், ஒருவர் மீது ஒருவர் கோபப்படுவதும் நிகழ்ந்துள்ளது. அந்த வகையில், எம்.எஸ்.வி கோபப்பட்டதால் கண்ணதாசன் ஒரு ஹிட் பாடலையே கொடுத்துள்ளார்.

1962-ம் ஆண்டு ஸ்ரீதர் தயாரிப்பு மற்றும் இயக்கத்தில் வெளியான படம் நெஞ்சில் ஓர் ஆலையம். முத்துராமன் தேவிகா இணைந்து நடித்த இந்த படத்தில், நோயால் பாதிக்கப்பட்ட முத்துராமன் தனது மனைவி தேவிகாவிடம் நான் இறந்த பிறகு நீ மருமணம் செய்துகொள்ள வேண்டும் என்று சொல்வார். அந்த இடத்தில் தேவிகா ஒரு பாடலை பாடுவார். இந்த சுட்சிவேஷனுக்கு பாடல் எழுதுவதற்காக எம்.எஸ்.வி கண்ணதாசன் இருவரும் பெங்களூர் ஹோட்டலில் தங்கியுள்ளனர்.

மதுபழக்கம் இருந்த கண்ணதாசன் முதல் நாள் இரவு குடித்துவிட்டு தனது தோழர் மற்றும் தோழிகளுடன் பாடலை போட்டு நடனமாடியள்ளார். இதை பக்கத்து அறையில் இருந்து கேட்ட எம்.எஸ்.வி, கண்ணதாசனிடம் வந்து, கவிஞரே காலையில் கம்போசிங் இருக்கு இப்போ இப்படி பண்ணா எப்படி என்று கேட்க, நீ போடா, காலையில் நான் டைம்க்கு வரலனா கேளு என்று சொல்ல, அதன்பிறகு எம்.எம்.எஸ்.வி தனது அறைக்கு சென்றுள்ளார்.

இரவு 2 மணிக்கு, கண்ணதாசன், தனது விருந்தினர்களை அனுப்பி வைத்துவிட்டு, மது கோப்பையுடன் வந்து எம்.எஸ்.வி அறையில் அமர்ந்துள்ளார். இதை பார்த்த எம்.எஸ்.வி, ஸ்ரீதருக்கு தெரிந்தால் பிரச்னை ஆகிவிடும் என்று சொல்ல, அவருக்கு எப்படி தெரியும். நீ சொன்னால் தான் தெரியும். நீ போய் எதுவும் உளறி வைத்துவிடாதே என்று சொல்லிவிட்டு தனது அறைக்கு சென்று தூங்கியுள்ளார். மறுநாள் காலை 7 மணிக்கு எம்.எஸ்.வி கம்போசிங் வந்துவிட, கண்ணதாசன் வரவில்லை.

9 மணி ஆகியும் கண்ணதாசன், வரவில்லை என்பதால், ஸ்ரீதர் கோபத்தில் கொந்தளிக்க, எம்.எஸ்.வி முதல் நாள் இரவில் என்ன நடந்தது என்பதை அவரிடம் கூறியள்ளார். அப்போது தனது அறையில் இருந்து என்ட்ரி கொடுத்த கண்ணதாசன் தான் ரெடி நீங்க ரெடியா என்று கேட்டுள்ளார். இதை கேட்டு கடுப்பான இயக்குனர் ஸ்ரீதர், நாங்கள் 7 மணிகே ரெடி, காலையில் சீக்கிரம் இந்த பாடலை முடிக்க வேண்டும் என்று சொன்னே அப்போவும் நீங்கள் லேட்டா வந்த எப்படி என்று கேட்டுள்ளார்.

இதை கேட்ட கண்ணதாசன், கொஞ்சம் அசந்து தூங்கிவிட்டேன் என்று சொல்ல, ராத்திரி முழுக்க நீங்கள் தூங்கவே இல்லையாம் இரவு முழுவதும் கையில் பாட்டிலுடன் இருந்துள்ளீர்கள் நேற்று நடந்தது எல்லாம் எனக்கு நல்லா தெரியும் என்று சொல்ல, உடனே கண்ணதாசன் எம்.எஸ்.வியை திரும்பி பார்க்க, எம்.எஸ்.வி கண்ணதாசன் பக்கமே திரும்பவில்லை. சிறிது நேரத்தில் கம்போசிங் தொடங்க, நீங்கள் பாட்டு எழுதுங்கள் அதற்கே நாள் இசைமைக்கிறேன் என்று எம்.எஸ்.வி கூறியுள்ளார்.

அப்போது நீ மெட்டை போடு, நான் பாட்டு எழுதுகிறேன் என்று சொல்ல, எம்.எஸ்.வி மெட்டை அமைக்கிறார். மெட்டை கேட்ட கண்ணதாசன், சொன்னது நீதானா என்று பல்லவியை சொல்ல, எம்.எஸ்.வி முகம் சுறுங்கிப்போனது. ஆனாலும் சமாளித்துக்கொண்டு அடுத்த டியூனை வாசிக்க, சொல் சொல் சொல் என் உயிரே என்று கண்ணாசன் கூறியுள்ளார். அதனைத் தொடர்ந்து கண்ணதாசன், அந்த பாடலை எழுதி முடித்தபோது எம்.எஸ்.வி முகத்தில் மகிழ்ச்சியே இல்லாமல் இருந்துள்ளார். அடுத்த 2 மணி நேரத்தில் அந்த பாடல் கம்போசிங் முடிந்துள்ளது.  

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற  https://t.me/ietamil“

M S Viswanathan
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment