Advertisment

''அனுபவம் புதுமை''... ஒற்றை பாடலில் தமிழ் சினிமாவின் போக்கை மாற்றிய கண்ணதாசன் : எந்த பாட்டு தெரியுமா?

பல வெற்றிப்படங்களை கொடுத்த நடிகர் ரவிச்சந்திரன் நாயகனாக அறிமுகமான இந்த படத்தில் முத்துராமன், காஞ்சனா, ராஜாஸ்ரீ, சச்சு, நாகேஷ், பாலையா உள்ளிட்ட பல முன்னணி நட்சத்திரங்கள் நடித்திருந்தனர்.

author-image
WebDesk
New Update
Kannadasan MSV KN Movie

கண்ணதாசன் - எம்.ஸ்.விஸ்வாதன்

தமிழ் சினிமாவில் புதுமை இயக்குனர் என்று போற்றப்படும் ஸ்ரீதர் இயக்கத்தில் வெளியான காதலிக்க நேரமில்லை திரைப்படம் இன்றைய காலக்கட்டத்திலும், காதல் காமெடி என அனைத்து தரப்பு ரசிகர்களையும் ஈர்த்து வருகிறது. இந்த படத்தில் ஒரு பாடல் தமிழ் சினிமாவில் போக்கை மாற்றியது என்று சொல்லலாம்.

Advertisment

1959-ம் ஆண்டு வெளியாக காதல் பரிசு என்ற படத்தின் மூலம் சினிமாவில் இயக்குனராக அறிமுகமானவர் ஸ்ரீதர். அப்போது முன்னணி நடிகர்களாக இருந்த எம.ஜி.ஆர் சிவாஜி ஆகியோரை வைத்து அதிக படங்களை இயக்காத இயக்குனராக ஸ்ரீதர் புதுமுகங்களை வைத்தே பல வெற்றிப்படங்களை கொடுத்துள்ளார். இந்த வகையில் ஸ்ரீதர் இயக்கத்தில் கடந்த 1964-ம் ஆண்டு வெளியான படம் தான் காதலிக்க நேரமில்லை.

பல வெற்றிப்படங்களை கொடுத்த நடிகர் ரவிச்சந்திரன் நாயகனாக அறிமுகமான இந்த படத்தில் முத்துராமன், காஞ்சனா, ராஜாஸ்ரீ, சச்சு, நாகேஷ், பாலையா உள்ளிட்ட பல முன்னணி நட்சத்திரங்கள் நடித்திருந்தனர். எம்.எஸ்.விஸ்வநாதன் – டி.கே.ராமமூர்த்தி ஆகியோர் இணைந்து இசையமைத்த இந்த படத்திற்கு, கண்ணதாசன் பாடல்கள் எழுதியிருந்தார். இந்த படத்தின் அனைத்து பாடல்களும் ரசிகர்கள் மத்தியில் வரவேற்பை பெற்றிருந்தது.

அந்த வகையில், ‘’அனுபவம் புதுமை அவளிடம் கண்டேன்’’ என்ற பாடல் இன்றும் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. 1964-ம் ஆண்டு இந்த படம் வெளியாகி இருந்தாலும், படத்தின் படப்பிடிப்பு 1963-ம் ஆண்டுகளில் நடந்தது. 1950-களில் வெளியாக படங்களின் காதலன் உயர்ந்த இடத்திலும், காதலி அவனுக்கு சேவை செய்வது போல், அத்தான் நாதா என்ற வார்த்தைகளுடன் தான் பாடல்கள் வந்திருக்கும்.

அடுத்த 10 ஆண்டுகளில், காதலன் – காதலி இருவருமே சமம் என்பதை உணர்த்தும் வகையில் இந்த பாடலை கண்ணதாசன் எழுதியிருப்பார். சினிமா 10 ஆண்டுகளில் எவ்வளவு மாறி இருக்கிறது என்பதை இந்த பாடலின் மூலம் தெரிந்துகொள்ளலாம். அனுபவம் புதுமை அவனிடம் கண்டேன் என்பது வழக்கமாக இருந்தபோதும், அனுபவம் புதுமை அவளிடம் கண்டேன் என்று ஒரு பெண்னே பாடுவது போன் எழுதியிருப்பார்.

இந்த பாடல் இன்றும் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. காதலன் – காதலி இருவரும் தனித்தனியாக தங்களது அறையில் காதல் ததும்ப பாடும் இந்த பாடலின் ஒரு இடத்தில் கூட முகம் சுழிக்கும் அளவிலான வார்த்தைகள் இருக்காது என்று ஆலங்குடி வெள்ளைச்சாமி தனது யூடியூப் சேனலில் தெரிவித்துள்ளார்.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Kannadasan M S Viswanathan
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment