உங்க பாட்டால் தான் படம் ரிலீஸ் ஆகல: வாலியிடம் சண்டைக்கு போன எம்.ஜி.ஆர்; என்ன நடந்தது?

அறச்சொல்லுடன் நீங்கள் எழுதிய பாடலால் தான் படம் வெளியாகவில்லை என்று எம்.ஜி.ஆர் வாலியிடம் சண்டைக்கு போயிருக்கிறார்.

அறச்சொல்லுடன் நீங்கள் எழுதிய பாடலால் தான் படம் வெளியாகவில்லை என்று எம்.ஜி.ஆர் வாலியிடம் சண்டைக்கு போயிருக்கிறார்.

author-image
WebDesk
New Update
Vaali MGR Classic

வாலி - எம்.ஜி.ஆர்

தமிழ் சினிமாவில் 5 தலைமுறை நடிகர்களுக்கு ஹிட் பாடல்களை கொடுத்த கவிஞர் வாலி, தனது படத்தில் எழுதிய ஒரு பாடல் காரணமாகத்தான் படம் வெளியாகா தாமதமாகி வருகிறது என்று எம்.ஜி.ஆர் சண்டை போட்டுள்ளார். 
தமிழ் சினிமாவில் கண்ணதாசன் உச்சக்கட்டத்தில் இருந்து காலத்தில் அவருக்கு போட்டியாக தமிழ் சினிமாவில, கவிஞராக உருவானவர் வாலி.

Advertisment

முதலில் கண்ணதாசனுக்கு போட்டி என்றாலும் பின்னாளில் இருவருக்கும் இடையே நெருங்கிய நட்பு உருவானது. அதே சமயம், கண்ணதாசன் எம்.ஜி.ஆ மோதல் காரணமாக தொடர்ந்து எம்.ஜி.ஆர் படங்களுக்கு பாடல் எழுதும் வாய்ப்பினை பெற்ற வாலி, பல ஹிட் பாடல்களை கொடுத்துள்ளார். அதே சமயம் தனது படத்திற்காக அறச்சொல்லுடன் நீங்கள் எழுதிய பாடலால் தான் படம் வெளியாக தாமதமாகி வருகிறது என்று எம்.ஜி.ஆர் வாலியிடம் சண்டைபோட, அதற்கு வாலி, தனது குறும்புத்தனத்தின் மூலம் பதில் அளித்துள்ளார்.

1970-ம் ஆண்டு, பி.ஏ.தாமஸ் இயக்கம் மற்றும் தயாரிப்பில் வெளியான படம் தலைவன். எம்.ஜி.ஆர்,  வானிஸ்ரீ, அசோகன், உள்ளிட்ட பலர் நடித்த இந்த படத்திற்கு எஸ்.எம்.சுப்யைா நாயுடு இசையமைத்திருந்தார். 
படத்திற்கான பாடல்கள் அனைத்தும், கவிஞர் வாலி எழுதியிருந்தார். 1968-ம் ஆண்டு தொடங்கப்பட்ட இந்த படம் பல்வேறு தடைகள் காரணமாக நீண்டகாலமாக தயாரிப்பில் இருந்துள்ளது.

ஒரு கட்டத்தில் தயாரிப்பாளர் தாமஸ் பண நெருக்கடியில் இருந்தபோது எம்.ஜி.ஆர் பண உதவி செய்துள்ளார். ஆனாலும் படப்பிடிப்பு நடத்துவதில் தொடந்து தாமதம் நீடித்து வந்துள்ளது. இதற்கு காரணம் என்ன என்று யோசித்த எம்.ஜி.ஆர் படத்தின் பாடல்களை கேட்டுள்ளார். அப்போது ஒரு பாடலில், ‘’நீராவி மண்டபத்தில் தென்றல் நீந்தி வரும் நள்ளிரவில், தலைவன் வாராமல் காத்திருந்தாள்’’ என்று வாலி எழுதியிருந்தார்.

Advertisment
Advertisements

இந்த பாடலை கேட்ட எம்.ஜி.ஆர், பாடல் எழுதும்போது பார்த்து எழுதுங்கள். ஒரு சொல் வெல்லும் ஒரு சொல் கொள்ளும். படத்தின் பெயர் தலைவன் ஆனால் நீங்கள் தலைவன் வாராமல் காத்திருந்தாள என்று எழுதி இருக்கிறீர்கள். அதனால் தான் படம் வெளியீடு தாமதமாகி கொண்டே போகிறது என்று கூறியுள்ளார். இதை கேட்க வாலி, படம் என்னால் தாமதமாகவில்லை.

படத்தின் தயாரிப்பு நிறுவனம் தாமஸ் பிச்சர்ஸ், தாமஸ் பிச்சர்ஸ் என்று சொல்லி படம் தாமதமாகிவிட்டது அதற்கு என்னை ஏன் குறை சொல்கிறீர்கள் என்று கேட்டுள்ளார்.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

kavignar vaali Mgr

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us: