திட்டமிட்டு ஒதுக்கப்பட்ட டி.எம்.எஸ்... எஸ்.பி.பி.க்கு வாய்ப்பு : இளையராஜா இப்படி செய்தாரா?

1979-ம் ஆண்டு யோகானந்த் இயக்கத்தில் வெளியான படம் நான் வாழவைப்பேன். சிவாஜி, ரஜினிகாந்த், கே.ஆர்.விஜயா ஆகியோர் முக்கிய கேரக்டரில் நடித்திருந்த இந்த படத்திற்கு இளையராஜா இசையமைத்திருந்தார்

1979-ம் ஆண்டு யோகானந்த் இயக்கத்தில் வெளியான படம் நான் வாழவைப்பேன். சிவாஜி, ரஜினிகாந்த், கே.ஆர்.விஜயா ஆகியோர் முக்கிய கேரக்டரில் நடித்திருந்த இந்த படத்திற்கு இளையராஜா இசையமைத்திருந்தார்

author-image
WebDesk
New Update
SPB TMS ILAYARAJA

டி.எம்.எஸ். - இளையராஜா - எஸ்.பி.பி

இந்திய சினிமாவின் முன்னணி இசையமைப்பாளராக வலம் வரும் இளையராஜா 5 தலைமுறை நடிகர்களுக்கு தனது இசையால் பல வெற்றிகளை கொடுத்துள்ளார். அதே சமயம் தான் வளர்ந்து வந்த காலக்கட்டத்தில பிரபலமாக பாடகராக இருந்த டி.எம்.சௌந்திரராஜனை ஒதுக்கிவிட்டு அதிகமாக எஸ்.பி.பாலசுப்பிரமணியனுக்கு வாய்ப்பு கொடுத்ததாக அதிகமாக தகவல்கள் வெளியாகி வந்தது. இதற்கு சான்றாக சிவாஜி நடிப்பில் வெளியான நான் வாழவைப்பேன் என்ற படததை சொல்கிறார்கள்.

Advertisment

1979-ம் ஆண்டு யோகானந்த் இயக்கத்தில் வெளியான படம் நான் வாழவைப்பேன். சிவாஜி, ரஜினிகாந்த், கே.ஆர்.விஜயா ஆகியோர் முக்கிய கேரக்டரில் நடித்திருந்த இந்த படத்தில் கே.ஆர்.விஜயாவின் பிறந்த நாளில், சிவாஜி கணேசன் பாடுவது போல் ஒரு பாடல் அமைந்திருக்கும். சிவாஜிக்கு ஒரு நோய் இருக்கும். அதற்கு ஆப்ரேஷன் செய்ய வேண்டும் என்று டாக்டர்கள் சொல்லிவிட்டதால், இவளுக்கு நாம் கணவர் ஆவோமா என்ற ஏக்கத்துடனும் பிறந்த நாளுக்கு வாழ்த்து சொல்லும் விதமாகவும் இந்த பாடல் அமைந்திருக்கும்.

இளையராஜா இசையமைத்திருந்த இந்த படத்தில் இடம் பெற்ற என்னோடு பாடுங்கள, நல்வாழ்த்து பாடுங்கள் என்ற வரிகளுடன் தொடங்கும் இந்த பாடலை வாலி எழுதியுள்ளார். இந்த பாடலை சினிமாவுக்காக எஸ்.பி.பாலசுப்பிரமணியன் பாடியிருப்பார். ஆனால் உண்மையாக இந்த பாடலை முதலில் பாடியவர் டி.எம்.சௌந்திரராஜன் தான். தெய்வீக பாடகர் என்று பெயர் பெற்ற டி.எம்.சௌந்திரராஜன் குரலில் இந்த பாடல் முதலில் பதிவு செய்யப்பட்டுள்ளது.

அவரது குரலில் இந்த பாடலை கேட்ட இசையமைப்பாளர் இளையராஜா தனக்கு இந்த பாடல் பிடிக்கவில்லை திருப்திகரமாக இல்லை என்று ஒதுக்கிவிட்டு அடுத்து எஸ்.பி.பாலசுப்பிரமணியன் குரலில் பதிவு செய்திருப்பார். இதில் எஸ்.பி.பி குரலில் இந்த பாடல் மென்மையாகவும், டி.எம்.எஸ்.குரலில் இந்த பாடல் சிறிது நடுக்கத்துடன் கணீர் குரலில் அமைந்திருக்கும். இதன் காரணமாகத்தான் இளையராஜா டி.எம்.எஸ் குரலில் பதிவான பாடலை ஒதுக்கவிட்டு எஸ்.பி.பி குரலில் பாட வைத்திருப்பார்.

Advertisment
Advertisements

இளையராஜாவின் இந்த மாற்றத்தை பலரும் விமர்சித்தனர். மேலும் டி.எம்.எஸை வேண்டுமென்றே இளையராஜா ஒதுக்கவிட்டார் என்றும் தகவல்கள் வெளியாக தொடங்கியது. இன்றுவரை அந்த விமர்சனங்கள் தொடர்ந்து வருவது குறிப்பிடத்தக்கது.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Singer Sp Balasubramaniam Ilayaraja

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us: