செய்யதா தவறுக்கு மன்னிப்பு கேட்க சொன்னதால், சிவாஜி படத்தின் ஷூட்டிங்கில் இருந்து நடிகை வென்னிற ஆடை நிர்மலா பாதி மேக்கப்புடன் வெளியேறியுள்ளார். இது குறித்து அவரே ஒரு பேட்டியில் கூறியுள்ளார்.
ஸ்ரீதர் இயக்கத்தில் வெளியான வென்னிற ஆடை என்ற படத்தின் மூலம் அறிமுகமான நடிகை நிர்மலா, அதன்பிறகு எம்.ஜி.ஆர், சிவாஜி, ஜெய்சங்கர், ஜெமினி கணேசன், முத்துராமன் உள்ளிட்ட பல முன்னணி நடிகர்களுடன் இணைந்து பல வெற்றிப்படங்களை கொடுத்துள்ளார். சிவாஜியுடன் லட்சுமி கல்யாணம் என்ற படத்தின் மூலம் இணைந்து நடித்திருந்தார் வென்னிற ஆடை நிர்மலா. இந்த படத்தில் சிவாஜி வேடத்தல் முதலில் நாகேஷ் நடிப்பதாக இருந்தது. ஆனால் கடைசி நேரத்தில் சிவாஜி கமிட் ஆகியுள்ளார்.
1974-ம் ஆண்டு சிவாஜி - லதா நடிப்பில் வெளியான படம் சிவகாமியின் செல்வன். சி.வி.ராஜேந்தர் இயக்கிய இந்த படத்தில், வாணிஸ்ரீ, முக்கிய கேரக்டரில் நடித்திருந்தார். எம்.எஸ்.விஸ்வநாதன் இசையமைக்க, கண்ணதாசன், புலமை பித்தன், வாலி ஆகியோர் பாடல்களை எழுதியிருந்தனர். இந்த படத்தை தயாரித்த நிறுவனம் இதே நேரத்தில், அன்புச்சகோதரர்கள் என்ற இன்றொரு படத்தையும் தயாரித்துள்ளார். இந்த இரு படங்களின் படப்பிடிப்பும் மாறி மாறி நடந்துள்ளது.
சிவகாமியின் செல்வன் படத்தின் ஷூட்டிங் தொடங்கும்போது ஊட்டிக்கு வேறொரு படத்தின் படப்பிடிப்புக்காக சென்ற, வென்னிற ஆடை நிர்மலா, இங்கிருந்து கிளம்பும்போது அவரது காரில் பெட்ரோல் இல்லை. அப்போது பெட்ரோல் தட்டுப்பாடு இருந்த காலக்கட்டம் என்பதால், எளிதாக பெட்ரோல் கிடைக்கவில்லை. ஒருவழியாக தேடி கண்டுபிடித்து பெட்ரோல் போட்டுக்கொண்டு ஊட்டியில் இருந்து கீழே இறங்கியபோது டிரெய்ன் அதற்குள் கிளம்பியுள்ளது.
இதன் காரணமாக வென்னிற ஆடை நிர்மலா காரிலேயே சென்னை நோக்கி வந்துள்ளார். இடையில் ஓரிடத்தில் இருந்து போன் செய்து தான் டிரெய்ன் மிஸ் செய்துவிட்டதாகவும், காரில் வந்துகொண்டு இருப்பதாகவும் கூறியுள்ளார். மறுநாள் சிவகாமியின் செல்வன் ஷூட்டிங்கிற்கு, வந்து பிரசாத் ஸ்டூடியோவில் மேக்கப் போட்டுக்கொண்டு இருந்துள்ளார். அப்போது சிவாஜி அவர் மன்னிப்பு கேட்டால் தான் என்னுடன் நடிக்கலாம் என்று கூறியுள்ளார். தப்பு செய்திருந்தால் நான் மன்னிப்பு கேட்பேன். தப்பே செய்யாத நான் எதற்காக மன்னிப்பு கேட்க வேண்டும் என்று சொல்லிவிட்டு பாதி மேக்கப்புடன் அங்கிருந்து சென்றுள்ளார். அதன்பிறகு அந்த படத்தில் லதா கமிட் ஆகி நடித்துள்ளார்.
அடுத்து சில வருடங்கள் கழித்து ஒருமுறை மலையாள படத்திற்காக தேசிய விருது வாங்க சென்ற, வென்னிற ஆடை நிர்மலாவை டெல்லியில் சந்தித்த சிவாஜி அவரிடம் பேசியுள்ளார். இந்த தகவலை அவள் விகடன் நேர்காணலில் வென்னிற ஆடை நிர்மலா கூறியுள்ளார்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“