Advertisment

கேமரா கோணத்தை மாற்ற சொன்ன எம்.ஜி.ஆர்... படப்பிடிப்பு தளத்தை விட்டு வெளியேறிய இயக்குனர் : என்ன நடந்தது?

எம்.ஜி.ஆர். நடிப்பில் 17 படங்களை இயக்கியுள்ள இயக்குனர் பா.நீலகண்டன், எம்.ஜி.ஆர் இயக்கத்தில் வெளியான மதுரையை மீட் சுந்தரபாண்டியன் திரைப்படத்தில் வசனம் எழுதியுள்ளார்.

author-image
WebDesk
New Update
MGR Chakravarthi thirumagal

சக்ரவர்த்தி திருமகள் படத்தில் எம்.ஜி.ஆர்

Listen to this article
0.75x 1x 1.5x
00:00 / 00:00

தமிழ் சினிமாவிலும் அரசியலிலும் தனக்கென தனி இடத்தை பிடித்துள்ள எம.ஜி.ஆர் கேமரா கோணத்தை மாற்ற சொன்னதால், ஒரு இயக்குனர் படப்பிடிப்பு தளத்தில் இருந்து வெளியேறியதும், பின்னாளில் அந்த இயக்குனரே எம்.ஜி.ஆர் நடிப்பில் பல படங்களை இயக்கியதும் பலரும் அறியாத ஒரு தகவல்.

Advertisment

சிறுவயது முதல் நாடக நடிகராக இருந்து பின்னாளில் சினிமாவில் அறிமுகமான எம்.ஜி.ஆர் 10 வருட போராட்டத்திற்கு பின் நாயகனாக உயர்ந்தார். அதன்பிறகும் அவருக்கு பல தடைகள் வந்தாலும், அதனை கடந்து முன்னணி ஹீரோவாக தமிழ் சினிமாவில் தனக்கென நிலையான இடத்தை பிடித்திருந்தார். நடிகராக மட்டுமல்லாமல் இயக்குனர், தயாரிப்பாளர் என பன்முக திறமையுடன் வலம் வந்த எம்.ஜி.ஆர் தொழில்நுட்பத்திலும் சிறந்து விளங்கினார்

தனது தொழில்நுட்ப அனுபவத்தை வைத்து, ஒரு முறை படப்பிடிப்பின்போது எம்.ஜி.ஆர் கேமரா கோணத்தை மாற்ற சொன்னதால் அப்படத்தின் இயக்குனர் படப்பிடிப்பு தளத்தை விட்டு வெளியேறிய சம்பவமும் நடந்துள்ளது. இந்த இயக்குனர் பா.நீலகண்டன். எம்.ஜி.ஆர். நடிப்பில் 17 படங்களை இயக்கியுள்ள இவர், எம்.ஜி.ஆர் இயக்கத்தில் வெளியான மதுரையை மீட் சுந்தரபாண்டியன் திரைப்படத்தில் வசனம் எழுதியுள்ளார்.

1947-ம் ஆண்டு வெளியான நாம் இருவர் என்ற படத்தின் மூலம் சினிமாவில் அறிமுகமான நீலகண்டன், 1951-ம் ஆண்டு வெளியான ஓர் இரவு என்ற படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமானார். அதனைத் தொடர்ந்து ஒரு சில படங்களை இயக்கி வெற்றி கண்ட நீலகண்டனுக்கு எம்.ஜி.ஆர் படத்தை இயக்கும் வாய்ப்பு கிடைத்துள்ளது. இந்த வாய்ப்பை பயன்படுத்திக்கொள்ளும் வகையில் அவரும் சம்மதம் தெரிவித்துள்ளார்.

முதல் நாள் படப்பிடிப்பு தொடங்க இருந்தது. அப்போது கேமரா மற்றும் லைட்டிங் செட்டப் எல்லாம் சரியாக வைத்துவிட்டு, படப்பிடிப்பை தொடங்க எம்.ஜி.ஆர் வரவுக்காக காத்திருந்துள்ளார். மேக்கப்புடன் படப்பிடிப்பு தளத்திற்கு வந்த எம்.ஜி.ஆர், கேமரா இருந்த இடத்திற்கு எதிர் திசையில் கேமராவை வைத்துவிட்டு லைட்டிங் செட்டப்பை மாற்றிவிட்டு கூப்பிடுங்கள் என்று சொல்லிவிட்டு கிளம்பியுள்ளார்.

இதனால் கோபமான நீலகண்டன், நான் எல்லாம் சரியாக செய்து வைத்திருக்கிறேன். இவர் என்ன இப்படி சொல்லிவிட்டு போகிறார். இந்த படத்தில் இருந்து நாள் விலகிக்கொள்கிறேன் என்று கூறி அங்கிருந்து வெளியேறியுள்ளார். ஆனால் அவரது கார் டிரைவர் வெளியில் சென்றதால், படப்பிடிப்பு தளத்தில் இருந்து அவர் செல்வதற்கு தாமதமாகியுள்ளது.

அப்போது அவரிடம் வந்த அவரின் உதவியாளர், எம்.ஜி.ஆர் ஒன்றும் தெரியாதவர் அல்ல, அவர் சொல்வது போல் செய்து விடுங்கள். இல்லை என்றால் இந்த பட வாய்ப்பு போய்விடும். உங்களுக்கு வெளியில் பெயரும் கெட்டுவிடும். குடும்பத்தை பற்றி யோசித்துப்பாருங்கள். எம்.ஜி.ஆர் காரணம் இல்லாமல் எதையும் சொல்லமாட்டார் என்று கூறியுள்ளார். அதன்பிறகு நீலகண்டன் படப்பிடிப்பு தளத்திற்கு சென்று அனைத்தையும் மாற்றியுள்ளார்.

அந்த படம் முடிந்து வெளியான பிறகு எம்.ஜி.ஆர் நடிப்பில் அடுத்து 16 படங்களை இயக்கிய நீலகண்டன், எம்.ஜி.ஆர் நடிப்பில் அதிக படங்களை இயக்கிய இயக்குனர்கள் பட்டியலில் ஒருவராக இடம்பெற்றுள்ளார். 1957-ம் ஆண்டு வெளியான சக்ரவர்த்தி திருமகள் படம் தான் இவர்கள் இருவரும் இணைந்த முதல் படம் என்பது குறிப்பிடத்தக்கது.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Tamil Cinema News
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment