படகோட்டி படத்தில் இடம்பெற்ற கொடுத்தெல்லாம் கொடுத்தான் என்ற பாடல் மிகப்பெரிய வெற்றி பெற்ற பாடலாக இருந்து வரும் நிலையில், இந்த பாடல் எம்.ஜி.ஆருக்கான எழுதப்பட்டது அல்ல என்று தற்போது தெரியவந்துள்ளது.
Advertisment
1964-ம் ஆண்டு டி.பிரகாஷ் ராவ் இயக்கத்தில் வெளியான படம் படகோட்டி. 2 மீனவ கிராமங்களுக்கு இடையில் நடக்கும் மோதலை அடிப்படையாக வைத்து திரைக்கதை அமைக்கப்பட்டிருந்த இந்த படத்தில், சரோஜா தேவி, நம்பியார், நாகேஷ், மனோரமா உள்ளிட்ட பலர் முக்கிய கேரக்டரில் நடித்துள்ளனர். எம்.எஸ்.வி – ராமமூர்த்தி இசையில் வெளியான இந்த படத்தின் பாடல்கள் அனைத்தும் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றிருந்தது.
படத்தில் இடம் பெற்ற அத்தனை பாடல்களையும் கவிஞர் வாலி எழுதியிருப்பார். இந்த படத்திற்கு பிறகுதான் வாலி இனி தன் படங்களின் பாடல்களை எழுதுவார் என்று எம்.ஜி.ஆர் அறிவித்திருந்தார். அனைத்து பாடல்களும் ரசிகர்கள் மத்தியில் வரவேற்பை பெற்றிருந்தாலும் ‘’கொடுத்தெலலாம் கொடுத்தான்’’ என்ற பாடல் இன்றைய காலக்கட்டத்திற்கும் பொருந்தும் வகையில் வரிகள் அமைந்திருக்கும்.
அதேபோல் இந்த பாடல் எம்.ஜி.ஆருக்காவே எழுதிய பாடலாக அமைந்திருக்கும். ஆனால் இந்த பாடல் எம்.ஜி.ஆரை மனதில் வைத்து எழுதிய பாடல் அல்ல. 1959-ம் ஆண்டு வெளியான அழகர்மலை கள்வன் என்ற படத்தின் மூலம் பாடல் ஆசிரியராக அறிமுகமான வாலி, அதற்கு முன்பே தனக்கு தோற்றும் எண்ணங்களை பாடலாக எழுதி அதை ஒரு கட்டுரை போன்று கையில் வைத்திருந்துள்ளார்.
தான் வாய்ப்பு தேடி செல்லும் இடங்களில் எல்லாம் இதனை காட்டி வாய்ப்பு கேட்டுள்ளார். அப்படி எழுதிய பாடல் தான் ‘’கொடுத்தெலலாம் கொடுத்தான்’’. இந்த பாடல் முதலில் இசையமைப்பாளர் எம்.பி. ஸ்ரீனிவாஸிடம் சென்றுள்ளது. பொதுவுடைமைவாதியான அவர் இந்த பாடலை பிடிக்கவில்லை என்று நிராகரித்துள்ளார். அதன்பிறகு படகோட்டி படத்தில் கமிட் ஆன வாலி, இந்த மாதிரி ஒரு சுட்சிவேஷனுக்கு பாடல் கேட்கும்போது இந்த பாடலை கொடுத்துள்ளார்.
பாடலை படித்த எம்.ஜி.ஆருக்கு மிகவும் பிடித்திருந்தால் படத்தில் பயன்படுத்தப்பட்டது. எம்.எஸ்.விஸ்வநாதன் – ராமமூர்த்தி இசையில் வெளியான இந்த பாடல் இன்றைய காலக்கட்டத்திற்கும் பொருந்தும் வகையில் உள்ளது.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“