Advertisment
Presenting Partner
Desktop GIF

உன் இஷ்டத்துக்கு வசனத்தை மாற்றதே... எம்.ஜி.ஆரை அவமதித்த இயக்குனர் : என்ன நடந்தது?

1918-ம் ஆண்டு பிறந்த எம்.ஜி.ஆர் 1936-ம் ஆண்டு வெளியான சதி லீலாவதி என்ற படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானார்.

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
MGR

எம்.ஜி.ஆர்

தமிழ் சினிமாவிலும் அரசியலிலும் தனக்கென தனி ஆளுமையை வளர்த்தக்கொண்டு இன்றும் பலராலும் கொண்டாப்படக்கூடிய ஒரு தலைவராக இருப்பவர் எம்.ஜி.ஆர். தமிழகத்தில் தொடர்ந்து 3 முறை முதல்வர், ஹாஸ்பிடலில் படுத்துக்கொண்டே வெற்றி பெற்றவர், மக்களுக்காக பல நலத்திட்டங்களை கொண்டுவந்தவர் என்று பலரும் போற்றப்படும் எம்.ஜி.ஆர் சினிமாவில் இருந்து அரசியலில் வெற்றி பெற்ற முதல் தலைவர்.

Advertisment

1918-ம் ஆண்டு பிறந்த எம்.ஜி.ஆர் 1936-ம் ஆண்டு வெளியான சதி லீலாவதி என்ற படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானார். அதற்கு முன்பே பல நாடகங்களில் நாயகனாக நடித்திருந்தாலும் அவருக்கு சினிமாவில் ஹீரோவாகும் வாய்ப்பு எளிதில் கிடைத்துவிடவில்லை. அதே சமயம் கிடைத்த வேடங்களில் நடித்து வந்த எம்.ஜி.ஆர், பல சமயங்களில், பசி பட்டினியை அனுபவித்தவர் என்பது பலரும் அறிந்திராத ஒரு உண்மை.

சினிமாவிலும் அரசியலிலும் ஆளுமை மக்களுக்கு அள்ளி கொடுத்த தலைவர் என்பதை மட்டுமே பலரும் அறிந்திருகிறார்கள் ஆனால் எம்.ஜி.ஆர் இந்த நிலைக்கு வருவதற்கு முன் பல துயரங்கள், அவமானங்கள் கேலி கிண்டல்களை சந்தித்துள்ளார். 1936-ம் ஆண்டு சினிமாவில் அறிமுகமாகி இருந்தாலும் 10 வருடங்கள் கழித்தே அவருக்கு நாயகனாக வாய்ப்பு கிடைத்துள்ளது.

1947-ம் ஆண்டு வெளியான ராஜகுமாரி என்ற படத்தில் தான் எம்.ஜி.ஆர் தனி நாயகனாக நடித்திருந்தார். அதன்பிறகு பல படங்களில் நாயகனாக நடித்திருந்தாலும் ஆரம்பகாலத்தில் இவருடன் நடிக்க பல நடிகைகள் மறுத்ததாகவும், பிரபல இயக்குனர் படத்தில் நடித்தபோது எம்.ஜி.ஆர் பலமுறை அவமானங்களை சந்தித்திருப்பதாகவும் கூறப்படுகிறது. அப்படி ஒரு சம்பவம் தான் அலிபாபாவும் 40 திருடர்களும் படத்தில் நடந்துள்ளது.

1956-ம் ஆண்டு மாடர்ன் தியேட்டர் நிறுவனம் தயாரித்திருந்த இந்த படத்தில், எம்.ஜி.ஆர் பானுமதி இணைந்து நடித்திருந்தனர். மாடர்ன் தியேட்டர் சார்பில் டி.ஆர்.சுந்தரம் இந்த படத்தை தயாரித்து இயக்கியிருந்தார். நடிகர் நடிகைகளிடம் கண்டிப்பாக இருக்கும் டி.ஆர் சுந்தரம், நடிகர் நடிகைகள் மட்டுமல்லாமல் படக்குழுவினரிடம் அதட்டி வேலை வாங்குவதில் ரொம்பவும் கராராக நடந்துகொள்வார். அவர் முன்பு யாரும் அமர்ந்து கூட பேசமாட்டார்கள். நடிகர்களை அடக்கி ஆளும் குணம் கொண்ட இவர் கராராக வேலை வாங்குவார்.

இந்த படத்தின் படப்பிடிப்பின்போது ஒரு காட்சியில், அல்லா மீது ஆணையாக என்று சொல்ல வேண்டும். ஆனால் அப்போது எம்.ஜி.ஆர் திமுகவில் இருந்ததால், தனது பகுத்தறிவு சிந்தனையின் காரணமாக அந்த வசனத்தை அம்மாவின் மீது ஆணையாக என்று மாற்றி கூறியுள்ளார். உடனே கோபப்பட்ட டி.ஆர் சுந்தரம், கட் என்று சொல்லிவிட்டு அலிபாபாவுக்கு எல்லாமே அல்லாதான் என் இஷ்டத்துக்கு வசனத்தை மாற்ற கூடாது என்று கூறியுள்ளார். அதன்பிறகு அவர் சொன்னபடியோ பேசி நடித்துள்ளார் எம்.ஜி.ஆர்.

அதனைத் தொடர்ந்து படத்தின் படப்பிடிப்பு முடிந்து ரப்பாக போட்டு பார்க்க முடிவு செய்திருக்கிறார்கள். அப்போது எம்.ஜி.ஆர் தனது நண்பர்களுடன் பார்க்க சென்றிருக்கிறார். ஆனால் டி.ஆர்.சுந்தரம் நீ மட்டும் வா.. உன்னுடன் வர வேறு யாருக்கும் அனுமதி இல்லை என்று கூறியுள்ளார். அப்போது தர்மசங்கடமான நிலைக்கு தள்ளப்பட்ட எம்.ஜி.ஆர், அலிபாபாவும் 40 திருடர்களும் படம் வெளியாகி வெற்றி பெற்றிருந்த நிலையிலும், அடுத்து டி,ஆர். சுந்தரம் மற்றும் மாடர்ன் தியேட்டர் பேனரில் ஒரு படத்தில் கூட நடிக்கவில்லை.  

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Mgr
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment