Advertisment

அண்ணன் - தங்கை செண்டிமெண்ட்... இன்று வரை பாராட்டப்படும் பாசமலர் வெற்றிக்கு காரணம் என்ன?

சிவாஜி - சாவித்ரி அண்ணன் தங்கையாக நடித்து பெரிய வெற்றி பெற்ற பாசமலர் படத்தின் பிரம்மாண்ட வெற்றிக்கு காரணம் என்ன தெரியுமா?

author-image
WebDesk
New Update
Pasamalar Sivaji Savitri

பாசமலர் படத்தில் சிவாஜி - சாவித்ரி

தமிழ் சினிமாவில் அண்ணன் தங்கை பாசத்தை அடிப்படையாக கொண்ட படங்களை வரிசைப்படுத்தினால் இந்த படங்கள் அனைத்திற்கும் முன்னோடியக பாசமலர் படம் இருக்கும். இன்றுவரை பலரின் பாராட்டுக்களை பெற்று வரும் இந்த படத்தின் வெற்றிக்கு காரணம் என்ன தெரியுமா?

Advertisment

சிவாஜி கணேசன் நடிப்பில் ‘’’’ வரிசை படங்களை இயக்கி வெற்றி கண்டவர் தான் இயக்குனர் பீம்சிங். இவரது இயக்கத்தில், 1961-ம் ஆண்டு வெளியான படம் தான் பாசமலர். ஏ.பி.கொட்டாரக்கரா என்பவர் கதை எழுதிய இந்த படத்தில், சிவாஜி கணேசன், சாவித்ரி அண்ணன் தங்கையாக நடித்திருந்தனர். மேலும் ஜெமினி கணேசன், கே.ஏ.தங்கவேலு, நம்பியார், எம்.என்.ராஜம் உள்ளிட்ட பல முன்னணி நட்சத்திரங்கள் நடித்திருந்தனர்.

விஸ்வநாதன் ராமமூர்த்தி இணைந்து இசையமைத்திருந்த இந்த படத்திற்கு கவியரசர் கண்ணதாசன் பாடல்கள் எழுதியிருந்தார். இந்த படத்தில் இடம்பெற்ற அனைத்து பாடல்களுமே ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றிருந்தது. குறிப்பாக, ‘மலர்களை போல் தங்கை, மலர்ந்து மலராத பாதி மலர் போல, வாராயன் தோழி வாராயோ உள்ளிட்ட பாடல்கள் ரசிகர்கள் மத்தியில் இன்றும் நல்ல வரவேற்பை பெற்ற வருகிறது.

இன்றைக்கும் திருமண வீடுகளில் பெண் அழைப்பின்போதும், திருமணம் முடிந்து தம்பதி வீட்டுக்கு வரும்போதும், வாராயன் தோழி வாராயோ பாடல் ஒலிக்காமல் இருக்காது. அந்த அளவிற்கு இந்த படத்தின் பாடல்கள், இசை, நடிகர் நடிகைகளின் நடிப்பு என அனைத்துமே பாராட்டுக்களை பெற்று வருகிறது. இன்றைய காலக்கட்டத்தில் அண்ணன் தங்கை செண்டிமெண்ட் படங்கள் அதிகம் வருகிறது என்றால் அதற்கு முன்னோடி இந்த பாசமலர் தான்.

அதே சமயம் இந்த படத்தின் பிரம்மாண்ட வெற்றிக்கு காரணம் என்ன என்பது குறித்து படத்தின் இயக்குனர் பீம்சிங், தனது மகன் எடிட்டர் லெனினிடம் கூறியுள்ளார். அதில், பாசமலர் படத்தில் சிவாஜி கணேசன், சாவித்ரி நடித்திருக்காவிட்டாலும் படம் நிச்சயமாக வெற்றி பெற்றிருக்கும். படத்தை நான் இயக்கவில்லை என்றாலும், எம்.எஸ்.வி இசையமைக்கவில்லை என்றாலும், கண்ணதாசன் பாடல்கள் எழுதவில்லை என்றாலும், அந்த படத்தின் வெற்றியை யாராலும் தடுத்திருக்க முடியாது.

ஏனென்றால் அதற்கு முக்கிய காரணம் பாசமலர் படத்தின் கதை தான். கதை சரியாக இல்லை என்றால் யார் நடித்திருந்தாலும் படம் வெற்றி பெறாது. அதனால் படத்தின் வெற்றியை முடிவு செய்வது கதை தான் என்று கூறியுள்ளார். இதன் மூலம் அந்த காலத்தில் இயக்குனர்கள் கதைக்கு எவ்வளவு முக்கியத்துவம் கொடுத்தார்கள் என்பது நன்றாக புரியும். ஆனால் இன்றைய இயக்குனர்கள் படங்களில் கதைக்கு முக்கியத்துவம் இருக்கிறதா?

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Sivaji Ganesan
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment