Advertisment

நள்ளிரவில் போன் செய்த எஸ்.பி.பி... கோபத்தில் கண்ணதாசன் சொன்ன வார்த்தைகள்!

தமிழ் சினிமாவின் முன்னணி பாடகர்களில் ஒருவரான எஸ்.பி.பி ஒரு கட்டத்தில் தமிழ், தெலுங்கு, மலையாளம் இந்தி என ஓய்வில்லாமல் அனைத்து மொழிகளிலும் பாடல்கள் பாடிக்கொண்டிருந்துள்ளார்.

author-image
WebDesk
New Update
SBP Kanadasan

எஸ்.பி.பி - கண்ணதாசன்

தமிழ் சினிமாவில் தனது இனிமையான குரல் மூலம் பல ஹிட் பாடல்களை கொடுத்தவர் எஸ்.பி.பாலசுப்ரமணியன். 1966-ம் ஆண்டு தெலுங்கில் வெளியான ஸ்ரீ ஸ்ரீ ஸ்ரீ மரியாதை ராமண்ணா என்ற படத்தின் மூலம் பாடகராக அறிமுகமான எஸ்.பி.பி 1969-ம் ஆண்டு தமிழில் ஹோட்டல் ரம்பா என்ற படத்தின் மூலம் அறிமுகமானார். ஆனால் இந்த படம் கைவிடப்பட்டது.

Advertisment

அதனைத் தொடர்ந்து தமிழில், சாந்தி நிலையம் என்ற படத்தில் இடம்பெற்ற இயற்கை என்னும் இளையகன்னி என்ற பாடல் மூலம் மீண்டும் தமிழ் சினிமாவில் பாடகராக அறிமுகமானார். இந்த பாடல் எஸ்.பி.பி.க்கு பெரிய வெற்றியை கொடுத்த நிலையில், அடுத்தடுத்து படங்களில் ஹிட் பாடல்களை பாடியிருந்தார். இந்திய சினிமாவின் முன்னணி இசையமைப்பாளர்களின் இசையில் பாடல்களை கொடுத்தள்ளார்.

ஒரு கட்டத்தில் எஸ்.பி.பி தமிழ், தெலுங்கு, மலையாளம் இந்தி என ஓய்வில்லாமல் அனைத்து மொழிகளிலும் பாடல்கள் பாடிக்கொண்டிருந்துள்ளார். 3 நாள், ஆந்திரா, 3 நாள் மும்பை, 3 நாள் கேரளா, அடுத்து தமிழ்நாடு என்று இருந்த அவர் ஒருமுறை இளையராஜா இசையில் ஒரு படத்திற்கான பாடல் ரெக்கார்டிங்கில் இருந்துள்ளார். அப்போது பாடிக்கொண்டிருந்த எஸ்.பி.பி-க்கு ஒரு சந்தேகம் வருகிறது.

இப்போது விட்டால் எஸ்.பி.பி இன்னும் சில நாட்கள் பிஸியாக இருப்பார் பிடிக்க முடியாது என்று யோசித்த கங்கை அமரன், நீ கவிஞரி்டம் போன் செய்து வரிகளை மாற்றி தரும்படி சொல்கிறாயா என்று கேட்டுள்ளார். இதில் விபரீதம் புரியாத எஸ்.பி.பி மணி என்ன என்று யோசிக்காமல் ஆம் அதுக்கென்ன கேட்கலாமே என்று சொல்லிவிட்டு கவிஞர் கண்ணாசன் வீட்டுக்கு போன் செய்துள்ளார். அப்போது கண்ணதாசனே போனை எடுத்துள்ளார்.

அண்ணே நான் எஸ்.பி.பாலசுப்பிரமணியன் பேசுறேன். ரெக்கார்டிங்கல இருக்கேன் இங்க ஒரு வரியில் சில வார்த்தைகள் புரியவில்லை. அதை மாற்றித்தர வேண்டும் என்று கூறியுள்ளார் சில வினாடிகள் அமைதியாக இருந்த கண்ணதாசன் எங்கே சந்தேகம் அந்த வரியை பாடுங்கள் என்று சொல்ல, எஸ்.பி.பி பாடியுள்ளார். இதில் எங்கே மாற்ற வேண்டும் என்றும் கூறியுள்ளார். அதன்பிறகு அதற்கு புதிய வரிகளை கண்ணதாசன் சொல்ல, மீண்டும் அதை பாடிய எஸ்.பி.பி இப்போது சரியாக இருக்கிறது நன்றி என்று கூறியுள்ளார்.

அதன்பிறகு பேசிய கண்ணதாசன் இப்போ மணி என்ன என்று கேட்டுள்ளார் மணி 11.30 ஆகுது என்று எஸ்.பி.பி சொல்ல, இந்த நேரத்தில் போன் செய்யலாமா? நீங்கள் பேசியதால் தான் நான் இப்படி பேசுகிறேன். திரும்பவும் இப்படி ஒரு வேலையை செய்யாதீர்கள். இதுவே கடைசியாக இருக்கட்டும் என்று சொல்ல, எஸ்.பி.பி சரிங்கண்ணே என்று சொல்லிவிட்டு போனை வைத்துள்ளார். இதை கண்ணதாசனின் பேரனிடம் எஸ்.பி.பி சொன்னதாக கண்ணதாசனின் மகன் கூறியுள்ளார்.

Spb Kannadasan
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment