Advertisment

பாக்யராஜ் எதிர்பார்ப்பை விட 'செக்ஸியாக' பாடிய இளையராஜா: அது இந்த பாட்டு தான்!

தமிழ் மட்டுமல்லாமல் இந்தி சினமாவிலும் அமிதாப் பச்சனை வைத்து படங்களை இயக்கியுள்ள பாக்யராஜ் தற்போது தமிழ் சினிமாவில் முக்கிய கேரக்டர்களில் நடித்து வருகிறார்.

author-image
WebDesk
New Update
Ilayaraja Bhagyaraja
Listen to this article
0.75x 1x 1.5x
00:00 / 00:00

பாக்யாராஜ் இயக்கத்தில் உருவான ஒரு பாடலை மாலை போட்டிருப்பதை காரணம் காட்டி பாட மறுத்த இசையமைப்பாளர் இளைராஜா பின்னர் பாட தொடங்கிய நிலையில், இறுதியில் பாடலை முடிவுக்கும்போது பாக்யராஜே எதிர்பாராத வகையில் செக்ஸியாக பாடியுள்ளார்.

Advertisment

தமிழ் சினிமாவின் திரைக்கதை மன்னன் என்று அழைக்கப்படுபவர் பாக்யராஜ். இயக்குனர், தயாரிப்பாளர் நடிகர், இசையமைப்பாளர், பாடல் ஆசிரியர் என பன்முக திறமை கொண்ட பாக்யராஜ் பெரும்பாலும் தான் இயக்கிய படங்களில் தானே நாயகனாக நடித்துள்ளார். அதேபோல் தமிழ் மட்டுமல்லாமல் இந்தி சினமாவிலும் அமிதாப் பச்சனை வைத்து படங்களை இயக்கியுள்ளார். தற்போது தமிழ் சினிமாவில் முக்கிய கேரக்டர்களில் நடித்து வருகிறார்.

இந்நிலையில், பாக்யராஜ் இயக்கி நாயகனாக நடித்து கடந்த 1983-ம் ஆண்டு வெளியான படம் முந்தானை முடிச்சு. ஊர்வசி, கோவை சரளா ஆகியோர் முக்கிய கேரக்டரில் நடித்த இந்த படத்தில் இளையராஜா இசையமைத்திருந்தார். கங்கை அமரன், முத்துலிங்கம், புலமைபித்தன் உள்ளிட்டோர் பாடல்கள் எழுதியிருந்தனர். இந்த படத்தின் தொடக்கத்தில் வரும் ‘’விளக்கு வச்ச நேரத்திலே’’ என்ற பாடல் இன்றும் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது.

இந்த பாடலை நா.குமரேசன் என்பவர் எழுதியுள்ளார். இந்த பாடலை இளையராஜா தான் பாட வேண்டும் என்று இயக்குனர் பாக்யராஜ் கூறியுள்ளார். இவ்வளவு செக்ஸியாக இருக்கிறது நான் எப்படி பாட முடியும் என்று இளையராஜா கேட்க, அதெல்லாம் முடியாது நீங்கள் தான் பாட வேண்டும் என்று பாக்யராஜ் கூறியுள்ளார். ஆனாலும் நான் மாலை போட்டிருக்கிறேன் பாட முடியாது என்று சொன்னாலும் இறுதியில் பாட ஒப்புக்கொண்டு பாடியுள்ளார்.

‘’விளக்கு வச்ச நேரத்திலே மாமன் வந்தான் என்று நன்றாக பாடலை தொடங்கிய இளையராஜா இறுதியில் பாடலை முடிக்கும்போது ‘’விளக்கு வச்ச நேரத்திலே தந்தானனானா’’ என்று பாடியுள்ளார். அவரையும் அறியாமல் இதை பாடிய நிலையில் பின்னர் சுதாரித்துக்கொண்டு நான் கடைசி வரியை மீண்டும் பாடுகிறேன் என்று சொல்ல, பாக்யராஜ் கட் சொல்லிவிட்டார். இதை பார்த்த இளைரயாஜா நான் கடைசி வரி பாடவே இல்லையே என்று கேட்டுள்ளார்.

இந்த பாடலை தொடங்குபோது பாடவே மாட்டேன் என்று அடம் பிடித்தீர்கள் ஆனால் இப்போது ‘’விளக்கு வச்ச நேரத்திலே தந்தானனானா’’ என்று முடித்து வைச்சிட்டீங்க. நான் எதிர்பார்த்ததை விட நல்லா பாடிட்டீங்க இது போதும் என்று கூறியுள்ளார். ஆனாலும் இளைராஜா மீண்டும் பாடுகிறேன் என்று சொல்ல, பாக்யாராஜ் விடாபிடியாக மறுத்து அதையே பயன்படுத்தியுள்ளார். இந்த சம்பவத்தை ஒரு பேட்டியில் பாக்யராஜே குறிப்பிட்டுள்ளார்.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Isaignani Ilayaraja
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment