Advertisment

வாலி எழுதிய பாடலில், கடைசி 2 வரிகளை திருத்திய கங்கை அமரன்: அஜித்தின் இந்த பாட்டு சூப்பர் ஹிட்டு!

அஜித் படத்திற்காக வாலி எழுதிய பாடலில் கடைசி 2 வரிகளை கங்கை அமரன் திருத்தி எழுதியுள்ளார். அந்த பாடல் பெரிய ஹிட்டனது.

author-image
WebDesk
New Update
kavignar Vaali ajith

அஜித் நடிப்பில் வெளியான மங்காத்த படத்திற்கு பாடல்கள் எழுதிய கவிஞர் வாலி, ஒரு பெரிய ஹிட் பாடலை கொடுத்தபோதும் அந்த பாடலின் கடைசி 2 வரிகளை கங்கை அமரன் எழுதி பாடலை முடித்து வைத்துள்ளார் என்பது பலரும் அறியாத ஒரு தகவல்.

Advertisment

2007-ம் ஆண்டு வெளியான சென்னை 28 படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமானவர் வெங்கட் பிரபு. தொடர்ந்து, சரோஜா, கோவா என ஹாட்ரிக் வெற்றிப்படங்களை கொடுத்த இவர், கடந்த 2011-ம் ஆண்டு அஜித் நடிப்பில் வெளியான மங்காத்தா படத்தை இயக்கி இருந்தார். அஜித்தின் வாழ்க்கையில் பெரிய வெற்றிப்படங்களில் ஒன்றாக இருக்கும் மங்காத்தா படத்தில் அஜித்துடன் இணைந்து அர்ஜூன் முக்கிய கேரக்டரில் நடித்திருந்தார்.

மேலும், த்ரிஷா, வைபவ், அஞ்சலி, ஆண்ட்ரியா, உள்ளிட்ட பல முன்னணி நட்சத்திரங்கள் நடித்திருந்த இந்த படத்திற்கு, யுவன் சங்கர் ராஜா இசையமைத்திருந்தார். இந்த படத்தில் அனைத்து பாடல்களும் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றிருந்தது. குறிப்பாக, வாலி எழுதிய வாடா பின்லேடா என்ற பாடல் இளைஞர்களின் கவனத்தை ஈர்த்தது என்று சொல்லலாம். இந்த பாடல் பதிவின்போது நடிந்த சுவாரஸ்யமாக அனுபவத்தை இந்த பாடலை பாடிய பாடகர் க்ரிஷ் ஒரு ஒரு பேட்டியில் கூறியுள்ளார்.

வாடா பின்லேடா பாடலின் கடைசி வரிகள் ஆண் பாடுவது போன்று வேண்டும். அஜித் சார் பாடு முடிப்பது போல் இருந்தால் சிறப்பாக இருக்கும் என்று யுவன் சொல்ல, இயக்குனர் வெங்கட் பிரபு, யுவன் இருவரும் க்ரிஷிடம் சொல்லி கவிஞர் வாலிக்கு போன் செய்யுமாறு கூறியுள்ளனர். வாலி 8 மணிக்கு போன் செய்தாலே கோபப்படும் சுபாவம் கொண்டவர். ஆனால் இவர் 9 மணிக்கு போன் செய்ய, போனை எடுத்த அவர், என்னயா இந்த நேரத்தில் போன் பண்ணிருக்க, என்று கேட்க, பாடல் வரிகளை மாற்ற வேண்டும் என்று க்ரிஷ் கூறியுள்ளார்.

Advertisment
Advertisement

நான் ஹஸ்பிட்டல்ல இருக்கேன்யா என்று வாலி சொல்ல, சாரி அங்கிள் ஹாஸ்பிட்டலில் இருந்து எதுக்காக போனை எடுத்தீங்க என்று க்ரிஷ் கேட்க, கையில் இருந்தது எடுத்தேன். ஒன்னு பண்ணு, பாடலை அமரிடம் கொடு (கங்கை அமரன்) அதற்கு ஏற்றபடி கடைசி வரியை அவன் மாற்றி கொடுப்பான் என்று வாலி கூறியுள்ளார். அதன்பிறகு வெங்கட் பிரபு தனது அப்பா கங்கை அமரனுக்கு போன் செய்து சொல்ல, கடைசி 2 வரிகளை கங்கை அமரன் மாற்றி கொடுத்துள்ளார். 

Actor Ajith Ajithkumar
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment