40 ஆண்டுகளுக்கு பிறகு ரஜினிகாந்த் – சத்யராஜ் கூட்டணி லோகேஷ் கனகராஜ் இயக்கும் கூலி படத்தில் இணைந்துள்ள நிலையில், இந்த படத்தில் சத்யராஜ் கேரக்டர் தொடர்பான அப்டேட் தற்போது வெளியாகியுள்ளது.
மாநகரம் படத்தின் மூலம் தமிழ் சினிமாவில், இயக்குனராக அறிமுகமான லோகேஷ் கனகராஜ், அடுத்து கைதி, மாஸ்டர், விக்ரம், லியோ என தொடர் வெற்றிப்படங்களை கொடுத்த நிலையில், தற்போது ரஜினிகாந்த் நடிப்பில் கூலி என்ற படத்தை இயக்கி வருகிறார். கடந்த சில மாதங்களுக்கு முன்பு வெளியான இந்த படத்தின் டைட்டில டீசர் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றிருந்த நிலையில், தங்கம் கடத்தலை மையமாக வைத்து இந்த படத்திற்கு திரைக்கதை அமைக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.
கூலி படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வரும் நிலையில், கடந்த சில தினங்களாக இந்த படத்தில் நடித்து வரும் நட்சத்திரங்களின் கேரக்டர்கள் அறிமுகம் செய்யப்பட்டு வருகிறது. அந்த வகையில், இன்று நடிகர் சத்யராஜ் கேரக்டர் அறிமுகம் செய்யபட்டுள்ளது. கடைசியாக மிஸ்டர் பாரத் என்ற படத்தில் ரஜினிகாந்த் – சத்யராஜ் கூட்டணி இணைந்த நிலையில், தற்போது 40 ஆண்டுகளுக்கு பிறகு இந்த கூட்டணி மீண்டும் இணைந்துள்ளதால் இந்த படத்தின் மீதான எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.
இதனிடையே கூலி படத்தில் நடிகர் சத்யராஜ் ராஜசேகர் என்ற கேரக்டரில் நடிக்க உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. பான் இந்தியா பாடமாக வெளியாகும் கூலி படத்தில் ஏற்கனவே மலையாளத்தில் மஞ்சுமல் பாய்ஸ் படத்தில் நடித்த சௌபின், தயால் என்ற கேரக்டரிலும், தெலுங்கு நடிகர் நாகர்ஜூனா, சைமன் என்ற கேரக்டரிலும், நடிகை ஸ்ருதி ஹாசன் பரீத்தி என்ற கேரக்டரிலும் நடிக்க உள்ளதாக அறிவிக்கப்பட்டது. அந்த வகையில் தற்போது சத்யராஜ் கேரக்டர் அறிமுகம் செய்யப்பட்டடுள்ளது.
கையில் வயருடன், மொட்டை தலையுடன் இருக்கும் சத்யராஜ் இந்த படத்தில் வில்லனா அல்லது கேரக்டர் ரோலில் நடிக்கிறாரா என்பது கேள்விக்குறியாக உள்ளது. மேலும் இந்த படத்தில் கன்னட நடிகரு உபேந்திரா முக்கிய கேரக்டரில் நடிக்க உள்ளதாக அறிவிக்கப்பட்ட நிலையில், அவரது கேரக்டர் அறிமுகம் அடுத்தடுத்து நாட்களில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“