Advertisment

வன விலங்குகளுக்கு பிரச்னை... படப்பிடிப்புக்கு அனுமதி உள்ளதா? புதிய சிக்கலில் கேப்டன் மில்லர்

தனுஷின் கேப்டன் மில்லர் படத்தின் படப்பிடிப்பிற்காக வனப்பகுதியில் பிரமாண்டமான செட் அமைக்கப்படவுள்ளது.

author-image
WebDesk
New Update
Dhanush

கேப்டன் மில்லர் தனுஷ்

தனுஷின் கேப்டன் மில்லர் படத்தின் படப்பிடிப்பு காரணமாக வனவிலங்குகள் பாதிக்கப்படுவதாக சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் படப்பிடிப்புக்கு எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.

Advertisment

திருச்சிற்றம்பலம், வாத்தி ஆகிய படங்களின் வெற்றிக்கு பிறகு தனுஷ் தற்போது கேப்டன் மில்லர் என்ற படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தின் படப்பிடிப்பு, தமிழ்நாட்டின் களக்காடு முண்டந்துறை புலிகள் காப்பகத்திற்கு (கேடிஎம்ஆர்) அருகில் நடைபெற்று வரும் நிலையில், படப்பிடிப்பு காரணமாக வன விலங்குகளுக்கு பிரச்சனை ஏற்படுவதாக சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.

சென்னையைச் சேர்ந்த ஒரு சிந்தனைக் குழுவான கொள்கை மற்றும் மேம்பாட்டு ஆய்வு மையத்தின் இயக்குநர் சி.ராஜீவ் இது குறித்து கூறுகையில், இடையக மண்டலம் அருகே “கேப்டன் மில்லர் படத்தின் படப்பிடிப்பு நடத்த முறையாக அனுமதி பெறப்பட்டுள்ளதா என்பதை முறையாக ஆய்வு செய்ய வேண்டும். கேடிஎம்ஆர்  (KTMR) புலிகள் காப்பகத்திற்கு அருகில். உயர் பீம் விளக்குகளால் யானை, புலி உள்ளிட்ட வனவிலங்குகள் பாதிக்கப்படுவதாக அப்பகுதி மக்கள் புகார் தெரிவித்துள்ளனர்.

அனுமதி வழங்கப்பட்டுள்ளதா?  அப்படி அனுமதி வழங்கப்பட்டிருந்தால் இருந்தால் எப்படி என சுற்றுச்சூழல் அமைச்சகம் முறையான விசாரணை நடத்த வேண்டும். ம.தி.மு.க., பிரமுகரும், கீழவப்பூர் ஒன்றிய கவுன்சிலர், படக்குழு மீது நடவடிக்கை எடுக்கக்கோரி, மாவட்ட நிர்வாகத்திடம் ஏற்கனவே மனு அளித்துள்ளனர்.

கேடிஎம்ஆர் (KTMR) காப்புக்காட்டை ஒட்டிய தனியார் நிலத்தில் பெரிய செட் ஒன்று அமைக்கப்பட்டு, மின்விளக்குகளும், பட்டாசுகளும் பயன்படுத்தப்படுகின்றன. சத்ய ஜோதி பிலிம்ஸ் தயாரிக்கும் கேப்டன் மில்லர் படத்தின் படப்பிடிப்பு ஏப்ரல் மத்தியில் முடிவடையும் எனத் தெரிகிறது. இதுகுறித்து கவுன்சிலர் ராம உதயகுமாரை தொடர்பு கொண்டு கேட்டபோது, படக்குழுவினர் செங்குளம் கால்வாய் கரையை சேதப்படுத்தி மண் எடுத்துள்ளதாக கூறியுள்ளார். மேலும் கோட்டுலம் அருவிகளில் இருந்து இந்த குளங்களுக்கு தண்ணீர் வருவதால், 15 தண்ணீர் தொட்டிகளின் உயிர்நாடியாக இந்த கால்வாய் உள்ளது.

இது குறித்து வனத்துறையினர் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும். படக்குழுவினர் ஆளும் ஆட்சிக்கு நெருக்கமானவர்கள் என்று கூறி வருகின்றனர். விவசாய நிலத்தில் ஒற்றை யானை இருப்பது குறித்து அப்பகுதி மக்கள் மாவட்ட வனத்துறை அதிகாரிகளிடம் புகார் அளித்து, வனவிலங்குகளை அவற்றின் இருப்பிடங்களில் இருந்து விரட்டும் வகையில், கொளுத்தும் பட்டாசு வெடிப்பதால் யானைகள் வனப்பகுதிக்கு செல்லவில்லை என தெரிவித்துள்ளனர்.

இந்த விவகாரம் குறித்து விசாரித்து வருவதாகவும், வனத்துறை அதிகாரிகளிடம் இருந்து கருத்துகளைப் பெற்ற பிறகு செய்தியாளர்களிடம் தெரிவிப்போம் என்றும் தமிழக வனத்துறை அமைச்சர் அலுவலகம் ஐஏஎன்எஸ் செய்தி நிறுவனத்திடம் கூறினார். இது குறித்து சத்ய ஜோதி பிலிம்ஸ் அதிகாரிகள் கருத்து தெரிவிக்கவில்லை.

தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil/

Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment