கமல்ஹாசன் படம் அல்ல... டிஜிட்டல் முறையில் முதல் வெற்றி என் படம் தான்: இயக்குனர் சேரன் ஆதங்கம்!

டிஜிட்டல் முறையில் எடுக்கப்பட்ட முதல் படமான மும்பை எக்ஸ் பிரஸ் படத்தை விடவும் என் படம் பெரிய வெற்றியை பெற்றது. டிஜிட்டல் முறையில் முதல் வெற்றி என் படம் தான் என சேரன் கூறியுள்ளார்.

டிஜிட்டல் முறையில் எடுக்கப்பட்ட முதல் படமான மும்பை எக்ஸ் பிரஸ் படத்தை விடவும் என் படம் பெரிய வெற்றியை பெற்றது. டிஜிட்டல் முறையில் முதல் வெற்றி என் படம் தான் என சேரன் கூறியுள்ளார்.

author-image
WebDesk
New Update
Kamal Cheran

ஃபிலிமில் படமாக்கப்பட்டு வந்த தமிழ் சினிமாவை டிஜிட்டல் முறைக்கு கொண்டு வந்த பெருமைக்கு சொந்தக்காரர் கமல்ஹாசன். ஆனால் அவர் முதல் முறையாக டிஜிட்டல் முறையில் எடுக்கப்பட்ட படத்தை விட, தனது படம் தான் தியேட்டர்களில் பெரிய வெற்றியை பெற்றது. ஆனால் அதை யாரும் இப்போது பேசுவதில்லை என்று இயக்குனர் சேரன் கூறியுள்ளார்.

Advertisment

தமிழ் சினிமாவில் 1997-ம் ஆண்டு வெளியான பாரதி கண்ணம்மா என்ற படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமானவர் சேரன். இந்த படம் பெரிய வெற்றிப்படமாக அமைந்ததை தொடர்ந்து அடுத்து, பொற்காலம், தேசிய கீதம், வெற்றிக்கொடி கட்டு, பாண்டிவர் பூமி உள்ளிட்ட தொடர் வெற்றிப்படங்களை கொடுத்தவர் சேரன். இதில், வெளிநாடு செல்வதற்காக பணம் கட்டி ஏமாற்றம் அடைந்தவர்களின் வாழ்க்கையை அடிப்படையாக வைத்த வெற்றிக்கொடி கட்டு பலரின் பாராட்டுக்களை பெற்றது. 

அதேபோல், கூட்’டு குடும்பத்தின் அவசியத்தை வலியுறுத்தும் பாண்டவர் பூமி, சாதி கடந்த காதலை மையப்படுத்திய பாரதி கண்ணம்மா, மாற்றுத்திறனாளி பெண்ணின் வாழ்வியலை சொல்லும் பொற்காலம் என சேரன் இயக்கிய அனைத்து படங்களிலும் எதாவது ஒரு வகையில், சமூகத்திற்கு கருத்துக்களை வலியுறுத்தும் படமாக அமைந்தது. அந்த வகையில் ஒரு தந்தையின் வலி நிரம்பிய வாழ்க்கையை அடிப்படையாக வைத்து சேரன் இயக்கிய படம் தான் தவமாய் தவமிருந்து.

ராஜ்கிரன், சரண்யா ஆகியோர் தாய் தந்தையாக நடித்த இந்த படத்தில் சேரன், பத்மபிரியா, மிர்ச்சி செந்தில், இளவரசு உள்ளிட்ட பலர் நடித்திருந்தனர். 8 மணி நேரம் எடுக்கப்பட்ட இந்த படத்தை எடிட் செய்து 5 மணி நேரமாக கொண்டு வந்த சேரன், அடுத்து எப்படி படத்தின் நீளத்தை குறைப்பது என்று தெரியாமல் அப்போது முன்னணி எடிட்டராக இருந்த பி.லெனினிடம் சென்று இது பற்றி கூறியுள்ளார். அதன்பிறகு, படத்தின் எடிட்டிங் பணிகளை மேற்கொண்ட லெனின் 10 நாட்களில் படத்தின் நீளத்தை 3 மணி நேரம் 20 நிமிடங்களாக சுருக்கியுள்ளார்.

Advertisment
Advertisements

அதே சமயம், படம் 3.20 மணி நேரம் இருக்கிறது இதில் முக்கால் மணி நேரத்தை குறைக்குமாறு விநியோகஸ்தர்கள் சொல்ல, முடியாது என்று சொன்ன சேரன், ஒவ்வொரு ரீலிலும், இந்த படத்தை எக்காரணத்தை கொண்டும் கட் செய்ய கூடாது. அப்படி செய்தால், வழக்கு தொடர்வேன் என்று எல்லா தியேட்டருக்கு சென்ற பெட்டிகளிலும் எழுதி வைத்துள்ளார். இப்படி வெளியான இந்த படம் பெரிய வெற்றிப்படமாக அமைந்த நிலையில், பாரதிராஜா, பாலச்சந்தர், மகேந்திரன், பாலு மகேந்திரா என முன்னணி இயக்குனர்கள் பலரும் இந்த படத்தை பார்த்துவிட்டு பாராட்டியுள்ளனர்.

இந்த படம் குறித்து லிட்டில் டாக்கீஸ் சேனலுக்கு அளித்த பேட்டியில், டிஜிட்டல் முறையில் எடுக்கப்பட்டு பெரிய வெற்றியை பெற்ற முதல் படம் தவமாய் தவமிருந்து தான். கமல்ஹாசன் சார் எடுத்த மும்பை எக்ஸ்பிரஸ் படம் தான் டிஜிட்டலில் எடுக்கப்பட்ட முதல் படம் அந்த படத்தை விடவும் தியேட்டர்களில், தவமாய் தவமிருந்து படம் அதிக நாட்கள் திரையரங்குகளில் ஓடியது. அதனால் டிஜிட்டலில் எடுக்கப்பட்டு வெற்றி பெற்ற முதல் படம் இதுதான். ஆனால் இதை யாரும் பேசமாட்டேன்கிறார்கள்.

பெரிய இயக்குனர்கள், நடிகர்கள் செய்தால், அதைப்பற்றி பேசுகிறார்கள். ஆனால் சிறியவர்கள் செய்யும்போது அதை பாராட்டுவதற்கு ஆள் இல்லை. இதை பற்றி யாரும் பேசாதது வருத்தமாக இருக்கிறது என்று சேரன் வெளிப்படையாக பேசியுள்ளார்.

Cheran

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us: