வெண்டைக்காய் vs காலிஃபிளவர்; காய்கறிகள் மூலம் காதலை சொன்ன விசு: நடிகர் மணிகண்டன் பகிர்ந்த சுவாரசியம்

எனக்கு காலிஃபிளவர் ரொம்ப பிடிக்கும் என்று மகள் சொல்ல, சுட்டுடுவேன் எனக்கு தெரியாமல் காலிஃபிளவர் இந்த வீட்டுக்குள் வந்தால் சுட்டுடுவென் என்று சொல்லிவிட்டு, காலிஃபிளவர் பார்க்கத்தான் அழகா இருக்கும் ஆனா உள்ளே எல்லாம் புழு என்று சொல்வார்.

எனக்கு காலிஃபிளவர் ரொம்ப பிடிக்கும் என்று மகள் சொல்ல, சுட்டுடுவேன் எனக்கு தெரியாமல் காலிஃபிளவர் இந்த வீட்டுக்குள் வந்தால் சுட்டுடுவென் என்று சொல்லிவிட்டு, காலிஃபிளவர் பார்க்கத்தான் அழகா இருக்கும் ஆனா உள்ளே எல்லாம் புழு என்று சொல்வார்.

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
Rajinikanth Thengai

தமிழ் சினிமாவில் குடும்பங்கள் கொண்டாடும் பல வெற்றிப்படங்களை கொடுத்தவர் இயக்குனர் விசு. குடும்ப உறவுகள், அவருகளுக்குள் ஏற்படும் சிக்கல்கள் உள்ளிட்ட பல பிரச்சனைகளை மையப்படுத்தி திரைக்கதை அமைத்து அதை வெற்றிப்பமாக மாற்றும் விசு, இயக்குனர் கே.பாலச்சந்திரிடம் உதவியாளாக இருந்தவர்.

Advertisment

ஒய்.ஜி.பார்த்தசாரதியின் நாடக குழுவில் இருந்த விசு, 1977-ம் ஆண்டு கே.பாலச்சந்தர் இயக்கிய பட்டின பிரவேசம் என்ற படத்தின் மூலம் எழுத்தாளராக அறிமுகமானார். அதன்பிறகு தில்லு முள்ளு, நெற்றிக்கண், மழலை பட்டாளம் உள்ளிட்ட சில படங்களில் எழுத்தாளராக பணியாற்றிய விசு, 1981-ம் ஆண்டு வெளியான குடும்பம் ஒரு கதம்பம் என்ற படத்திற்கு கதை திரைக்கதை வசனம் எழுதியிருந்தார்.

எஸ்.பி.முத்துராமன் இயக்கிய இந்த படத்தில் ஒரே வீட்டில் இருக்கும் 4 வெவ்வேறு குடும்பங்கள் சந்திக்கும் முக்கிய பிரச்சனைகளை மையப்படுத்தி திரைக்கதை எழுதியிருப்பார். இந்த படம் தமிழ் சினிமாவில் குடும்ப படங்கள் அதிகம் வருவதற்கு ஒரு தொடக்கமாக அமைந்தது. இந்த படத்திற்கு முன்னதாக, விசு தனது வசனத்தின் மூலம் ரசிகர்கள் மத்தியில் பெயர் பெற்றவர். அதற்கு முக்கிய உதாரணம் தில்லு முல்லு படத்தில் இடம் பெற்ற ஒரு காட்சிக்கு அவர் எழுதிய வசனம் தான்.

கே.பாலச்சந்தர் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடித்த தில்லு முல்லு படத்திற்கு, விசு வசனம் எழுதியிருந்தார். இந்த படத்தில் இந்திரன் சந்திரன் என இரு கேரக்டர்களில் நடித்திருந்தார் ரஜினிகாந்த். இதில் இந்திரன் கேரக்டரை தனது மகளுக்கு திருமணம் செய்து வைக்க, தேங்காய் சீனிவாசன் நினைப்பார். ஆனால் அவரது மகள், சந்திரனை காதலிப்பார். இது குறித்து மகளிடம் நேரடியாக பேசாமல், குறிப்பால் உணர்த்தும் வகையில், விசு தனது வசனத்தில் மூலம் வளையாடி இருப்பார்.

Advertisment
Advertisements

தேங்காய் சீனிவாசன் சாப்பிடும்போது அவரது மகள் சாப்பிட வருவார். அப்போது வெண்டைக்காய் அவளுக்கு போடு என்று சொல்ல, மகளே வேண்டாம் என்று சொல்வார். அதற்கு தேங்காய் சீனிவாசன், வெண்டைக்காய்க்கு என்ன குறைச்சல் என்று கேட்க, குழகுழனு அதுவும் என்று சொல்ல, அப்படி இருந்தாலும் அது எல்லாம் மூளை என்று தேங்காய் சீனிவாசன் சொல்ல, அதை மூளை இல்லாதவர்களை சாப்பிட சொல்லுங்கள் என்று அவரது மகள் சொல்வார். இப்படி சொல்லும்போதே தெரிகிறது உன் மனதில் வேறு எதோ காய் நினைத்திருக்கிறாய் என்று தேங்காய் சீனிவாசன் சொல்வார்.

எனக்கு காலிஃபிளவர் ரொம்ப பிடிக்கும் என்று மகள் சொல்ல, சுட்டுடுவேன் எனக்கு தெரியாமல் காலிஃபிளவர் இந்த வீட்டுக்குள் வந்தால் சுட்டுடுவென் என்று சொல்லிவிட்டு, காலிஃபிளவர் பார்க்கத்தான் அழகா இருக்கும் ஆனா உள்ளே எல்லாம் புழு என்று சொல்வார். இப்படி மறைமுகமாக தங்கள் மனதில் என்ன இருக்கிறது என்பதை இருவரும் சொல்வது போல் அந்த வசனம் அமைந்திருக்கும். இது குறித்து நடிகர் மணிகண்டன் பேசிய ஒரு வீடியோ பதிவு இணையத்தில் வைரலாகி வருகிறது. 

Tamil Cinema News

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us: