New Update
/indian-express-tamil/media/media_files/uaVGtQcP0tHlAoa5FsOJ.jpg)
ஜவான் படத்திற்கு பிறகு அட்லி இயக்க உள்ள புதிய படம் குறித்து வெளியாகியுள்ள தகவல் இணையத்தில் வைரலாகி வருகிறது.
ஜவான் படத்திற்கு பிறகு இந்திய சினிமாவின் முன்னணி நடிகராக மாறியுள்ள இயக்குனர் அட்லி அடுத்து இயக்கும் படம் குறித்து அவ்வப்போது பல்வேறு தகவல்கள் வெளியாகி வரும் நிலையில், தற்போது புதிய தகவல் ஒன்று வெளியாகியுள்ளது.
பிரம்மாண்ட இயக்குனர் ஷங்கரின் உதவியாளர் என்ற அடையாளத்துடன் தமிழ் சினிமாவில் ராஜா ராணி என்ற படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமானவர் அட்லி. தொடர்ந்து, விஜய் நடிப்பில், தெறி, மெர்சல், பிகில் என தொடர் வெற்றிப்படங்களை கொடுத்த இவர், அடுத்து பாலிவுட்டில் ஷாருக்கான் நடிப்பில் ஜவான் என்ற படத்தை இயக்கியிருந்தார். சில ஆண்டுகளாக தயாரிப்பில் இருந்த இந்த படம் கடந்த ஆண்டு வெளியானது.
தென்னிந்திய சினிமாவின் முன்னணி நடிகையாக இருக்கும் நயன்தாரா, முன்னணி நடிகராக இருக்கும் விஜய் சேதுபதி, முன்னணி இசையமைப்பாளராக இருக்கும் அனிருத் ஆகிய மூவரும் பாலிவுட் சினிமாவில் அறிமுகமான இந்த படம், வீழ்ச்சியில் கிடந்த பாலிவுட் சினிமாவை வசூலில் தூக்கி நிறுத்தும் வகையில், ரூ1000 கோடிக்கு மேல் வசூலித்து புதிய சாதனையை படைத்தது.
இந்த வெற்றியின் மூலம் இந்திய சினிமாவில் கவனிக்கப்படும் இயக்குனராக மாறியுள்ள அட்லி, அடுத்து ஒரு இந்தி படத்தை இயக்க உள்ளதாகவும் இந்த படத்தையும் ஷாருக்கான தயாரித்து நடிக்க உள்ளதாகவும் கூறப்பட்ட நிலையில், அடுத்து சன்பிச்சர்ஸ் தயாரிக்கும் படத்தை இயக்க உள்ளதாகவும், இந்த படத்தில் அல்லு அர்ஜூன் நாயகனாக நடிக்க உள்ளதாகவும் தகவல்கள் வெளியானது. இதனால் அட்லி இயக்கும் அடுத்த படத்தில் யார் ஹீரோ என்ற குழப்பம் நீடித்து வருகிறது.
இதனிடையே தற்போது புதிய தகவல் ஒன்று வெளியாகியுள்ளது. அதன்படி, அட்லி இயக்கும் அடுத்த படத்தில் கமல்ஹாசன் மற்றும் சல்மான்கான் ஆகிய இருவரும் இணைந்து நடிக்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. ஆக்ஷன் த்ரில்லர் பாணியில் தயாராக உள்ள இந்த படத்தின் படப்பிடிப்பு, 25-ம் ஆண்டு பிற்பகுதியில் தொடங்கும் என்றும் கூறப்படுகிறது. இது குறித்து அதிகாரப்பூர்வ தகவல் விரைவில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.