scorecardresearch

அழுகாட்சியா வேண்டாம்… அது கமல் நடிப்பு… ரஜினிகாந்த் பற்றி கே.எஸ் ரவிக்குமார் ப்ளாஷ்பேக்

ரஜினி மாஸ் என்றால், கமல் க்ளாஸ். கமல்ஹாசன் படங்கள் வெளியாகும்போது யாரும் அதிகம் கண்டுகொள்ளமாட்டார்கள். ஆனால் அடுத்த சில வருடங்கள் கழித்து அந்த படம் போல் வருமா என்று கேட்பார்கள்.

KS RAvikumar
கமல்ஹாசன் – கே.எஸ்ரவிக்குமார் – ரஜினிகாந்த்

தமிழ் திரையுலகில் இரு பெரும் துருவங்கள் என்றால் எம்.ஜி.ஆர் – சிவாஜிக்கு பிறகு தற்போது ரஜினிகாந்த் – கமல்ஹாசன் என்றுதான் சொல்வார்கள். இருவரும் நடிப்பில் வித்தியாசம் காட்டினாலும் இருவருக்கும் இருக்கும் ரசிகர்கள் பட்டாளம் ஏராளம். அதேபோல் இவர்கள் படங்கள் வெளியாகும் போது ரசிகர்கள் திருவிழா போல் கொண்டாடுவது வழக்கம்.

இயக்குனர் பாலச்சந்தர் எஸ்.பி.முத்துராமன் இவர்களுக்கு பிறகு ரஜினி கமல் இருவரின் படங்களையும் அதிகமாக இயக்கிய பெருமைக்கு சொந்தக்காரர் இயக்குனர் கே.எஸ்.ரவிக்குமார். ரஜினிக்கு முத்து படையப்பா லிங்கா ஆகிய படங்கள் என்றால் கமல்ஹாசனுக்கு அவ்வை சண்முகி, தெனாலி, தசவதாரம் என பல வெற்றிப்படங்களை கொடுத்துள்ளார்.

இவர்கள் இருவரையும் மாறி மாறி இயக்கி இருந்தாலும் நடிப்பில் இருவருமே வித்தியாசம் காட்டுவார்கள். என்று கே.எஸ்.ரவிக்குமார் கூறியுள்ளார். ரஜினி மாஸ் என்றால், கமல் க்ளாஸ். கமல்ஹாசன் படங்கள் வெளியாகும்போது யாரும் அதிகம் கண்டுகொள்ளமாட்டார்கள். ஆனால் அடுத்த சில வருடங்கள் கழித்து அந்த படம் போல் வருமா என்று பேசுவார்கள்.

கமலின் நாயகன், குணா உள்ளிட்ட படங்கள் அப்படித்தான். இதில் நாயகன் படம் அப்போதே பெரிதாக பேசப்பட்ட படம். ஆனால் நாயகனுடன் வெளியான ரஜினியின் மனிதன் படம் நல்ல வசூல் செய்தது. ஆனால் இப்போது கமல்ஹாசனின் நாயகன் படம் பேசப்படுவது போல் ரஜினியின் மனிதன் படம் பேசப்படுவதில்லை இது ரஜினிக்கு லேட்டாக்கத்தான் புரிந்தது.

அதன்பிறகுதான் தனது படங்கள் மாஸாக இருந்தாலும் அதில் புதிதாக எதாவது இருக்க வேண்டும் என்று பாட்ஷா முத்து படையப்பா போன்ற படங்களை கொடுத்தார். இதில் படையப்பா படத்தில் அழுவும் காட்சி ஒன்றில் ரஜினிகாந்த் நடிக்கவே முடியாது என்று சொல்லிவிட்டார் நான் அழுதா நன்றாக இருக்குமா என்று கேட்டார். நீங்கள் கமல் மாதிரியான நடிப்பை என்னிடம் எதிர்பாக்கிறீர்கள். அதன்பிறகு நீங்கள் ஒரு மாஸ் ஹீரோ நீங்கள் அழுதால் ஆடியன்ஸ் கூட நல்லா கனெக்ட் ஆகும் என்று சொன்னபிறகு நடித்தார்.

அதுதான் சித்தாராவுக்கு சாப்பாடு ஊட்டும் காட்சி அந்த காட்சி ஒரு ஷாட்டில் எடுக்கப்பட்டது. அப்போது ரஜினி உண்மையானவே அழுதார். கிளிசர் பயன்படுத்தாமல் அவரது கண்களில் கண்ணீர் வந்தது. அதேபோல் கமல் படங்களை இயக்கும்போது மாஸாக எதாவது சொன்னால் அதான் அவர் பண்றாரே நான் வேற பண்ணணுமா என்று கேட்பார். கமல் எப்போதுமே புதிதாக எதையாவது செய்ய வேண்டும் என்று நினைப்பவர். அந்த மாதிரிதான் தெனாலி படத்தில் தனது கதையை சொல்லும் சீனில் கமல் உண்மையாகவே அழுதார். இது ஒரே ஷாட்டில் எடுக்கப்பட்டது. இதுபோன்ற காட்சிகள் தான் கமலுக்கு பிடிக்கும் என கே.எஸ்.ரவிக்குமார் கூறியுள்ளார்.

தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில்  பெற https://t.me/ietamil

Stay updated with the latest news headlines and all the latest Entertainment news download Indian Express Tamil App.

Web Title: Tamil cinema director ks ravikumar flashback about rajinikanth kamal haasan