/indian-express-tamil/media/media_files/2025/08/16/panja-thanthiram-2025-08-16-22-45-57.jpg)
தமிழ் சினிமாவில் கமர்ஷியல் படங்களை இயக்கி ஹிட் கொடுத்து முன்னணி இயக்குனர்களில் ஒருவராக இருந்த கே.எஸ்.ரவிக்குமார் இயக்கததில் வெளியான பஞ்ச தந்திரம் படம் எவர்கிரீன் ஹிட் படமாக இன்றுவரை பேசப்பட்டு வருகிறது. ஆனால் படம் ரிலீஸ் ஆனபோது அது ஒரு தோல்விப்படம் என்று கே.எஸ்.ரவிக்குமாரே கூறியுள்ளார்.
1990-ம் ஆண்டு வெளியான புரியாத புதிர் என்ற படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமானவர் கே.எஸ்.ரவிக்குமார். தொடர்ந்து பல வெற்றிப்படங்களை இயக்கிய இவர், ஒரு கட்டத்தலி் கமல்ஹாசனின் அவ்வை சண்முகி, தெனாலி, ரஜினிகாந்தின் படையப்பா, முத்து உள்ளிட்ட வெற்றிப்படங்களை இயக்கியிருந்தார். ரஜினிகாந்த் – கமல்ஹாசன் இருவரையும் சேர்த்து வைத்து படம் இயக்குக்கும் வாய்ப்பு இவருக்கு மட்டும் தான் இருக்கிறது என்று பலர் பேசி வந்தனர்.
அந்த அளவுக்கு பெரிய ஹிட் படங்களை கொடுத்த கே.எஸ்.ரவிக்குமார் கமல்ஹாசனுடன் இணைந்து தெனாலி, அவ்வை சண்முகி, பஞ்ச தந்திரம், தவசவதாரம் உள்ளிட்ட படங்களை இயக்கியுள்ளார். இதில் தசவதாரம் படத்தை தவிர மற்ற 3 படங்களுமே காமெடிக்கு முக்கியத்துவம் கொடுத்து திரைக்கதை அமைக்கப்பட்டிருக்கும். தசவதாரம் சீரியஸ் படம் தான் என்றாலும் கூட, அதிலும் தனது சிக்னேச்சர் காமெடிகளை புகுத்தி அட்டகாசப்படுத்தியிருப்பார் கே.எஸ்.ரவிக்குமார்.
இந்த வரிசையில், கடந்த 2002-ம் ஆண்டு கமல்ஹாசன் – கே.எஸ்.ரவிக்குமார் கூட்டணியில் உருவான படம் பஞ்ச தந்திரம். 5 நண்பர்கள் இணைந்து ஒரு பிறந்த நாள் கொண்டாட்டத்தை நடத்தும்போது, பெரிய சிக்கலில் மாட்டிக்கொள்கிறார்கள். அதில் இருந்து அவர்கள் எப்படி மீண்டு வந்தார்கள் என்பது தான் இந்த படத்தின் கதை. சிம்ரன், ரம்யா கிருஷ்ணன், மணிவண்ணன் தேவயானி ஆகியோர் முக்கிய கேரக்டரில் இந்த படத்தில் நடித்திருந்தனர்,
படத்தில் கமலஹாசனின் நண்பர்களாக வரும் ஜெயராம், யூகி சேது, ஸ்ரீமன், ரமேஷ் அரவிந்த் ஆகியோரின் நடிப்பும், நடிகர் நாகேஷின் டைமிங் காமெடியும் பெரிய கவனம் பெற்றது. ஆனால் இந்த படம் வெளியானபோது அவ்வளவாக வரவேற்பை பெறவில்லை என்று இயக்குனர் கே.எஸ்.ரவிக்குமாரே ஒரு பேட்டியில் கூறியுள்ளார். அதில், பஞ்சதந்திரம் ரிலீஸ் ஆனபோது சரியாக போகவில்லை.
தயாரிப்பாளருக்கு அந்த படம் லாபத்தை கொடுக்கசவில்லை. முதற்கட்டம் சரியாக போகவில்லை என்றாலும், படம் பார்த்தவர்கள் அதிகம் பேசியதை தொடர்ந்து, 2-வது மற்றும் 3-வது கட்டத்தில் படம் பிக்கப் ஆகி வரவேற்பை பெற்றது. இந்த நிலைமை அப்போது இருந்தது. ஆனால் இப்போது, முதற்கட்டமாவே லேப்டாப்பில் பார்க்கிறார்கள். அப்போது 3 கட்டங்களாக ஓடி அதன்பிறகு தான் சி.டி.யில் படம் வரும்.
இவ்வாறு வரவேற்பை பெற்ற பஞ்ச தந்திரம் படம், ஒரு கட்டத்தில், உலகம் முழுவதும் பேசப்படும் ஒரு படமாக மாறியது. யாரை கேட்டாலும் எனக்கு சிடி இருக்கு. அந்த அளவுக்கு அந்த படம் ஃபேமஸ் ஆனது. ஆனால் ரிலீஸ் ஆன புதிதில் அந்த படம் அவ்வளவாக ரீச் ஆகவில்லை. அது ரிலீஸ் ஆன டைம் என்று ஒன்று இருக்கிறது. அதுக்கு பப்லிசிட்டி என்று ஒன்று இருக்கிறது. எல்லாம் இருந்தும். ரீச் ஆவதற்கு முன்பே, டக்குனு தியேட்டர்களில் இருந்து எடுத்துவிடுவார்கள். இப்படியெல்லம் இருந்தது என்று ரவிக்குமார் கூறியுள்ளார்.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.