ஒளிப்பதிவாளராக இருந்து இயக்குனராக மாறிய கே.வி.ஆனந்த் மறைந்துவிட்ட நிலையில், சமீபத்தில் நடைபெற்ற அவரின் மகள் திருமணத்திற்கு நடிகர் சூர்யா வராதது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இது குறித்து பிரபலம் ஒருவர் வெளியிட்டுள்ள ட்விட்டர் பதிவு வைரலாகி வருகிறது.
1994-ம் மலையாளத்தில் வெளியான தென்மாவின் கொம்பெத் என்ற படத்தின் மூலம் ஒளிப்பதிவாளராக அறிமுகமானவர் கே.வி.ஆனந்த். அதனைத் தொடர்ந்து தமிழில் பல படங்களுக்கு ஒளிபரப்பதிவாளராக பணியாற்றிய இவர், 2005-ம் ஆண்டு வெளியான கனா கண்டேன் என்ற படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமானார். அதனைத் தொடர்ந்து கோ, அயன், மாற்றான், அனேகன், கவண் உள்ளிட்ட சில படங்களை இயக்கியுள்ளார்.
கடைசியாக கடந்த 2019-ம் ஆண்டு சூர்யா நடிப்பில் வெளியான மாற்றன் படத்தை இயக்கிய கே.வி.ஆனந்த், தனது அடுத்த படத்திற்கு தயாராகி வந்த நிலையில், கடந்த 2021-ம் ஆண்டு மாரடைப்பு காரணமாக மரணமடைந்தார். அவரின் மரணம் தமிழ் சினிமா வட்டாரத்தில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
இதனிடையே நேற்று சென்னையில் கே.வி.ஆனந்த் மகள் திருமணம் நடைபெற்றது. இந்த திருமணத்தில் நடிகர் விஜய் சேதுபதி, ஜீவா கலந்துகொண்ட புகைப்படங்கள் இணையத்தில் வெளியான நிலையில், நடிகர் சூர்யா, மற்றும் தனுஷ் ஆகியோர் பங்கேற்கவில்லையா என்று நெட்டிசன்கள் கேள்வி எழுப்ப தொடங்கிவிட்டனர்.
குறிப்பாக அயன், மாற்றான், காப்பான் என கே.வி.ஆனந்த் சூர்யா நடிப்பில் 3 படங்களை இயக்கியிருந்தார். இதில் அயன் படம் சூர்யாவின் சினிமா கெரியவரில் அவருக்கு பெரிய வெற்றிப்படமாக அமைந்தது. இன்றளவும் பேசப்படும் ஒரு படமாக மாறியுள்ளது. இதனால் நெட்டிசன்கள் மத்தியில் சூர்யா ஏன். கே.வி.ஆனந்த் மகள் திருமணத்தில் பங்கேற்கவில்லை என்று நெட்டிசன்கள் கேள்வி எழுப்பி வருகின்றனர்.
இது குறித்து ஜெயம் எஸ்.கே. கோபி தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில்,
"தமிழ் சினிமாவில் புகழ்மிக்கவர்கள் உயிரோடு இருக்கும் வரைதான் அவர்களுக்குன்டான மரியாதை நட்பு அன்பு எல்லாம் கிடைக்கும்..
அந்த புகழ்மிக்கவர்கள் இறந்தவுடன் ஒரு சில நன்றியுள்ளவர்களை தவிர அனைவரும் அவர்களை மறந்துவிடுவார்கள்.
இதுதான் சினிமா டிசைன்...
அந்த வகையில் மறைந்த இயக்குநர் ஒளிப்பதிவாளர் திரு KV ஆனந்த் அவர்களின் மகள் திருமண வரவேற்பு விழா இன்று நடந்தது..
KV ஆனந்த் சார் இயக்கத்தில் நடித்த பல ஹிரோக்கள் வரவில்லை..ஆனால் விஜய்சேதுபதி தனது பிஸியான கால்ஷீட்களிலும் நேரத்தை ஓதுக்கி இந்த விழாவிற்கு வந்து மணமக்களை வாழ்த்தினார்.இந்த நன்றி மறவாத குணம்தான் சேதுவின் தனித்துவம்.
நல்ல மனம் வாழ்க." என பதிவிட்டுள்ளார்.
பஎ
என கே.வி. ஆனந்த் படங்களில் கலை இயக்குநராகவும் ஒரு சில படங்களில் வில்லன் வேடத்திலும் நடித்த கலை இயக்குநர் கிரண் "ஆமாம்.. நம்பமுடியவில்லை தான் ஆனால் இது தான் உண்மை என புரிந்தது. என்ன செய்வது, அவ்வளவு தான் உலகம் போல என நினைத்து மனதை தேற்றிக்கொள்ள மட்டுமே முடிந்தது என கூறியுள்ளார்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“