Advertisment
Presenting Partner
Desktop GIF

படக்குழுவினரை சிறை பிடித்த பொதுமக்கள்: படப்பிடிப்பை ரத்து செய்த முத்தையா; அருள்நிதி அதிர்ச்சி!

பொதுமக்கள் ஒன்று திரண்டு எதிர்ப்பு தெரிவித்ததால், இயக்குனர் கொம்பன் முத்தையா தனது படத்தின் படப்பிடிப்பை ரத்து செய்துள்ளார்.

author-image
WebDesk
New Update
 Arulnithi Mjh

கொம்பன் முத்தையா இயக்கத்தில் அருள்நிதி நடித்து வரும் புதிய படத்தின் படப்பிடிப்பு, மதுரையில் நடைபெற்ற நிலையில், படப்பிடிப்பு நடத்த பகுதி மக்கள் இதற்கு எதிர்ப்பு தெரிவித்தால், படப்பிடிப்பு பாதியில் ரத்து செய்யப்பட்டுள்ளது.

Advertisment

சசிகுமார் நடிப்பில் வெளியாக குட்டிப்புலி என்ற படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமானவர் முத்தையா. அதனைத் தொடர்ந்து கார்த்தி நடிப்பில் கொம்பன் என்ற படத்தை இயக்கியிருந்தார். இந்த இரு படங்களுமே அவருக்கு பெரிய வெற்றிப்படங்களாக அமைந்த நிலையில், அடுத்து விஷால் நடிப்பில் மருது, சசிகுமார் நடிப்பில் கொடிவீரன், கௌதம் கார்த்திக் நடிப்பில் தேவராட்டம் உள்ளிட்ட படங்களை இயக்கியிருந்தார்.

மேலும், விக்ரம் பிரபு நடிப்பில் அவர் இயக்கிய புலிக்குத்தி பாண்டி திரைப்படம் நேரடியாக தொலைக்காட்சியில் ஒளிபரப்பானது. இதனையடுத்து தனது மகனை வைத்து ஒரு படத்தை இயக்கி முடித்துள்ள முத்தையா, அடுத்ததாக அருள்நிதி நடிப்பில் ஒரு படத்தை இயக்கி வருகிறார். இந்த படத்தின் படப்பிடிப்பு மதுரை மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் நடைபெற்று வரும் நிலையில், இன்று மதுரை அரிட்டாபட்டியில் படப்பிடிப்பு நடைபெற்றுள்ளது.

ஏற்கனவே அந்த பகுதியில், டங்ஸ்டன் சுரங்கம் அமைப்பதற்காக மத்திய அரசு அனுமதி அளித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இதன் காரணமாக அந்த பகுதி முழுவதும், பாதுகாக்கப்பட்ட பல்லூயிர் மண்டலம் என்று அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், இதற்கு எதிர்ப்பு தெரிவித்து மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இதனிடையே, முத்தையா தனது படப்பிடிப்புக்காக அந்த பகுதியில், வெடி பொருட்கள், மற்றும் ராட்சத கிரேன்கள் ஆகியவற்றை கொண்டு வந்துள்ளார்.

Advertisment
Advertisement

வெடிகுண்டு வெடிக்கும் காட்சிகள் மற்றும் சண்டை காட்சிகளை படமாக்க இருந்ததாக தகவல் வெளியாகியுள்ளது. இதனை பார்த்த பொதுமக்கள், டங்ஸ்டன் சுரங்கம் அமைப்பதற்காக தான் இவர்கள் வந்திருக்கிறார்கள் என்று எண்ணி, எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். மேலும் படக்குழுவினரை சிறைபிடித்த பொதுமக்கள், இந்த இடத்தில் சினிமா படப்பிடிப்பு நடத்த கூடாது என்றும், உடனடியாக இங்கிருந்து வெளியேற வேண்டும் என்றும் கூறியுள்ளனர்.

இதனைத் தொடர்ந்து அப்பகுதிக்கு வந்த காவல்துறையினர், பொதுமக்களிடம் பேசி சமாதானம் செய்ததை தொடர்ந்து, படக்குழுவினர் விடுவிக்கப்பட்ட நிலையில், மக்களின் பேச்சுக்கு மதிப்பு கொடுத்த இயக்குனர் முத்தையா, அங்கு நடக்க இருந்த படபடிபபிடிப்பை ரத்து செய்துவிட்டு, திரும்பியுள்ளார். இந்த தகவல் தற்போது சினிமா வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற  https://t.me/ietamil

Arulnithi
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment