அலுவலகத்தில் தங்க நகைகள் மாயம்: நடிகர் பார்த்திபன் புகார்; போலீசார் விசாரணை!

தனது அலுவலகத்தில் தங்க நகைகள் மாயமானதாக நடிகரும் இயக்குனருமான பார்த்திபன் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார்.

தனது அலுவலகத்தில் தங்க நகைகள் மாயமானதாக நடிகரும் இயக்குனருமான பார்த்திபன் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார்.

author-image
WebDesk
New Update
Actor Parthiban

தனது அலுவலகத்தில் இருந்து 12 சவரண் நகைகள் மாயமானதாக நடிகர் பார்த்திபன் சென்னை சைதாப்பேட்டை காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ள நிலையில், இது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Advertisment

தமிழ் சினிமாவில் பல வித்தியாசமான படங்களை கொடுத்து வெற்றி கண்டவர் பார்த்திபன். தற்போது இயக்கம் மற்றும் நடிப்பு என பிஸியாக இருந்து வரும் நடிகர் பார்த்திபன், பொன்னியின் செல்வன் முதல் மற்றும் 2-ம் பாகத்தில் நடித்திருந்தார். மேலும் சமீபத்தில் வெளியான டீன்ஸ் என்ற படத்தை இயக்கி நடித்திருந்தார். இந்த படம் பலரின் பாராட்டுக்களை பெற்றிருந்தது. பாடல் எழுதுவது, பாடல் பாடுவது என பார்த்திபன் பன்முக திறமையுடன் வலம் வருகிறார்.

மேலும் அவ்வப்போது சமூகம் சார்ந்த பிரச்னைகளுக்கு குரல் கொடுத்து வருகிறார். அந்த வகையில் சமீபத்தில், மத்திய அரசின் வந்து பாரத் ரயிலில் உணவு சரியில்லை என்று தான் புகார் அளித்துள்ளதாக அந்த புகாருடன் தனது சமூகலைதளத்தில் பதிவிட்டிருந்தார்,

இந்நிலையில், நடிகர் பார்த்திபன், தனது அலுவலகத்தில் இருந்து 12 சவரன் நடிகை மாயமானதாக சென்னை சைதாப்பேட்டை காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். இது குறித்து காவல்துறையினர் விசாரணை நடத்தியதில், பார்த்திபனின் உதவியாளர், கிருஷ்ணாவிடம் மாயமான நகைகள் இருப்பது தெரியவந்துள்ளது. இதனையடுத்து நடிகர் பார்த்திபன் தனது புகாரை வாபஸ் பெற்றுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. 

Advertisment
Advertisements

தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற  https://t.me/ietamil

R Parthipen

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us: