/indian-express-tamil/media/media_files/2025/08/13/vijay-mh-2025-08-13-16-26-02.jpg)
தமிழ் சினிமாவில் பல்வேறு விமர்சனங்களை கடந்து, இன்று உச்ச நட்சத்திரமாக வளர்ந்து, தற்போது அரசியல் கட்சி கட்சி தொடங்கியுள்ள நடிகர் விஜய்க்கு, வாய்ப்பு கோரி அவரது தந்தை எஸ்.ஏ.சி பிரபல இயக்குனரை சந்தித்துள்ளார். ஆனால் அவரே நீங்களே ஒரு இயக்குனர் உங்க படத்தில் நடிக்க வைக்கலாமே என்று திருப்பி அனுப்பியுள்ளார்.
தமிழ் சினிமாவில் உச்சம் தொட்ட நடிகர்களில் முக்கியமானவர் விஜய். 1992-ம் ஆண்டு வெளியான நாளைய தீர்ப்பு என்ற படத்தின் மூலம் நாயகனாக அறிமுகமான இவர், அதற்கு முன்பே தனது அப்பா எஸ்.ஏ.சி இயக்கிய படங்களில் குழந்தை நட்சத்திரமாகவும், இளம்வயது விஜயகாந்த் கேரக்டரிலும் நடித்துள்ளார். சிறுவயதில் இவர் நடித்த பல படங்கள் பெரிய வெற்றியை பெற்றுள்ளது. ஆனாலும் இவர் நாயகனாக நடித்த நாளைய தீர்ப்பு திரைப்படம் தோல்விப்படமாக அமைந்தது.
இந்த படத்திற்காக ரூ70 லட்சம் செலவு செய்த எஸ்.ஏ.சி, அடுத்து ஒரு படத்திற்கு கதையை எழுதி அந்த படத்தில் கேமியோ ரோலில் நடிக்க விஜயகாந்திடம் தேதி கேட்டுள்ளார். அவரும் நடிக்க ஒப்புக்கொண்டதை தொடர்ந்து செந்தூர பாண்டி திரைப்படம் தயாராகியுள்ளது கௌதமி விஜயகாந்துக்கு ஜோடியாக நடித்த இந்த படத்தில் விஜயகுமார், மனோரமா, பொன்னம்பலம் உள்ளிட்ட பலர் நடித்திருந்தனர். படமும் பெரிய வெற்றிப்படமாக அமைந்த நிலையில், விஜய் ரசிகர்கள் மத்தியில் பிரபலமானார்.
அதனைத் தொடர்ந்து அப்பாவின் இயக்கத்தில், ரசிகன், விஷ்ணு, உள்ளிட்ட சில படங்களில் நடித்த விஜய், வெளி இயக்குனர்களில் படங்களிலும் நடிக்க தொடங்கினார். அந்த வகையில் நடித்த புவே உனக்காக,காதலுக்கு மரியாதை உள்ளிட்ட படங்கள் பெரிய வெற்றிப்படங்களாக அமைந்தது. ஒரு கட்டத்தில் ஆக்ஷன் ஹீரோவாக அவதாரம் எடுத்த விஜய், காமெடி, ஆக்ஷன், காதல் என பலவிதமான கேரக்டர்களில் நடித்து வெற்றி கண்டார். கடைசியாக தி கோட் என்ற படத்தில் நடித்திருந்த விஜய், தற்போது ஜனநாயகன் படத்தில் நடித்து முடித்துள்ளார்.
தற்போது தமிழக வெற்றிக் கழகம் என்ற அரசியல் கட்சியை தொடங்கியுள்ள விஜய், சினிமாவில் இருந்து விலகி, வரும் சட்டசபை தேர்தலில் போட்டியிட உள்ளார். இதனிடையே விஜய் சினிமாவில் நாயகனாக நடிக்க வேண்டும் என்பதால், பல இயக்குனர்களை சந்தித்து எஸ்.ஏ.சி தனது மகனுக்காக வாய்ப்பு தேடியுள்ளார். அந்த வகையில் ஒருமுறை, விஜயுடன் பாரதிராஜா வீட்டுக்கு சென்றஎஸ்.ஏ.சி, பையன் கிராமத்து கதையில் உங்க இயக்கத்தில் தான் நடிக்க வேண்டும் என்று விரும்புகிறான். நீங்க தான் வாய்ப்பு கொடுக்க வேண்டும் என்று கூறியுள்ளார்.
இதை கேட்ட பாரதிராஜா, ஏன் நீங்களே ஒரு இயக்குனர் தானே, நீங்களே உங்கள் படத்தில் நடிக்க வைக்கலாமே என்று விஜய் மற்றும் அவரது அப்பா எஸ்.ஏ.சி. இருவரையும் திருப்பி அனுப்பியுள்ளார். தற்போது விஜய் தமிழ் சினிமாவின் உச்சநட்சத்திரமான அதிக ரசிகர்கள் பட்டாளம் வைத்துள்ள நடிகர்களில் ஒருவராக இருந்து வருகிறார். இது குறித்து பாரதிராஜாவே ஒரு பேட்டியில் கூறியுள்ளார். இதுபற்றி ஒருமுறை விஜயிடம் நான் உன்னை திருப்பி அனுப்பிவிட்டேன் என்று பாரதிராஜா சொல்ல, இன்னும் என் மைண்டில் இருக்கிறது சார் என்று விஜய் பதில் கூறியுள்ளார்.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.