Advertisment

ஊருக்கே ஸ்டார் ஆனாலும் அப்பாவுக்கு பிள்ளை... நடிகர் விஜயை விமர்சிக்கும் நெட்டிசன்கள்

சுமார் 70 படங்களுக்கு மேல் இயக்கியுள்ள எஸ்.ஏ.சந்திரசேகர், தற்போது நாள் கடவுள் இல்லை என்ற படத்தை இயக்கியுள்ளார்.

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
ஊருக்கே ஸ்டார் ஆனாலும் அப்பாவுக்கு பிள்ளை... நடிகர் விஜயை விமர்சிக்கும் நெட்டிசன்கள்

இயக்குநர் எஸ்.ஏ.சந்திரசேகர் தனது மகன் விஜய் இல்லாமல் தனது பிறந்த நாளை கேக் வெட்டி கொண்டாடியது தொடர்பாக புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகின்றன.

Advertisment

80-90களில் தமிழ் சினிமாவின் முன்னணி இயக்குநர்களில் ஒருவராக வலம் வந்தவர் எஸ்.ஏ.சந்திரசேகர். எழுத்தாளர் இயக்குநர் தயாரிப்பாளர் நடிகர் என பன்முக திறமை கொண்ட எஸ்.ஏ.சி, 1978-ம் ஆண்டு வெளியான அவள் ஒரு பச்சை குழந்தை படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் இயக்குநராக தனது பயணத்தை தொடங்கினார்.

அதன்பிறகு தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர்கள் பலரை வைத்து பல வெற்றிப்படங்களை கொடுத்த எஸ்.ஏ.சி, விஜயகாந்தை வைத்து பல படங்களை இயக்கி வெற்றி கண்டவர். மேலும் நடிகர் ரஜினிகாந்தை நான் சிகப்பு மனிதன் படத்தில் சைலண்ட் கில்லராக அவதாரம் எடுக்க வைத்திருப்பார்.

தமிழ் மட்டுமல்லாது தெலுங்கு கன்னடம் ஹிந்தி உள்ளிடட மொழிகளில் சுமார் 70 படங்களுக்கு மேல் இயக்கியுள்ள எஸ்.ஏ.சந்திரசேகர், தற்போது நாள் கடவுள் இல்லை என்ற படத்தை இயக்கியுள்ளார். இந்த படத்தில் சமுத்திரக்கனி நாயகனாக நடித்துள்ளார். 40 வருடங்களாக சினிமாவில் தனது ஆளுமையை செலுத்தி வரும் எஸ்.ஏ.சந்திரசேகர் தற்போது யார் இந்த எஸ்.ஏ.சி என்ற பெயரில் யூடியூப் சேனல் தொடங்கிய அவர், தனது வாழ்க்கையில் நடந்த சுவாரஸ்யமாக நிகழ்வுகளை பகிர்ந்து வருகிறார்.

மேலும் தற்போது தமிழ் சினிமாவின் அடையாளங்களில் ஒருவராக இருக்கும் தளபதி விஜய்யை அறிமுகப்படுத்திய பெருமை எஸ்.ஏ.சிக்கு உண்டு. விஜய் திரைத்துறைக்கு அறிமுகமான புதிதில் தனது அப்பா எஸ்.ஏ.சி இயக்கிய படங்களில் தான் அதிகம் நடித்து வந்தார். அதன்பிறகே மற்ற இயக்குநர்களின் படங்களில் நடித்து தற்போது முன்னணி நடிகராக வலம் வருகிறார்.

இந்நிலையில், கடந்த ஜூலை 2-ந் தேதி எஸ்.ஏ.சந்திரசேகர் தனது 77-வது பிறந்த நாளை கொண்டாடினார். இந்த நாளில் அவர் தனது மனைவியுடன் கேக் வெட்டி பிறந்த நாளை கொண்டாடிய புகைப்படம் இணையத்தில் வைரலாக பரவியது. இதற்கு பலரும் வாழ்த்து தெரிவித்த நிலையில், இந்த புகைப்படத்தில் விஜய் இல்லை என்பது பலரையும் அதிர்ச்சிக்குள்ளாக்கியது. மேலும் விஜயின் பிள்ளைகள் கூட இந்த புகைப்படத்தில் இல்லாதது சர்ச்சையை ஏற்படுத்தியது

இந்த புகைப்படத்தை அதிகமாக ‘ஷேர் செய்து வரும் நெட்டிசன்கள் பலரும் இருப்பது ஒரு பையன். அவர் இல்லாமல் தனியா பர்த்டே கொண்டாடுகிறார் பாவம். ஊருக்கே ஸ்டார் ஆனாலும் அப்பாவுக்கு பிள்ளை என்பதை மறந்துவிட வேண்டாம் என்று நடிகர் விஜய்யை விமர்சித்து வருகின்றனர்.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“

Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment