Advertisment

அண்ணன் அமீர் சொல்வது உண்மை... ஞானவேல் ராஜாவுக்கு சசிகுமார் கண்டனம்

பருத்தி வீரன் படம் தொடர்பான பிரச்சனையில் இயக்குனர் அமீருக்கு ஆதரவாக பேசியுள்ள இயக்குனரும் நடிகருமான சசிகுமார் ஞானவேல் ராஜாவின் கருத்தை கண்டிப்பதாக கூறியுள்ளார்.

author-image
WebDesk
New Update
Sasi Ameer Gnanave

ஞானவேல்ராஜா - சசிகுமார் - அமீர்

பருத்தி வீரன் பட விவகாரத்தில் இயக்குனர் அமீர் தயாரிப்பாளர் ஞானவேல் ராஜா இடையே விவாதம் ஏற்பட்டுள்ள நிலையில், அமீர் அண்ணன் சொல்வது உண்மை என்று ஞானவேல்ராஜாவின் குற்றச்சாட்டுக்கு இயக்குனரும் நடிகருமான சசிகுமார் கூறியுள்ளார்.

Advertisment

தமிழ் சினிமாவில் தற்போது முன்னணி நடிகராக இருக்கும் கார்த்தி 2007-ம் ஆண்டு வெளியான பருத்தி வீரன் படத்தின் மூலம் நடிகராக அறிமுகமானார். இந்த படம் தமிழ் சினிமாவில் பெரிய வெற்றிப்படமாக அமைந்த நிலையில், படத்தில் நாயகியாக நடித்த பிரியாமணிக்கு தேசிய விருது கிடைத்தது. இந்த படம் முதலில் இயக்குனர் மற்றும் தயாரிப்பாளராக அமீர் தொடங்கியுள்ளார்.

அதன்பிறகு ஸ்டூடியோ கிரீன் ஞானவேல் ராஜா படத்தை தனது பெயருக்கு மாற்றிக்கொண்டதாகவும் அதற்கு உரிய தொகை தனக்கு தராததால் அமீர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளதாகவுமு் தகவல் வெளியாகிள்ளது. சமீபத்தில் நடைபெற்ற கார்த்தி 25 படத்தின் நிகழ்ச்சியில் கார்த்தி நடித்த அனைத்து படங்களின் இயக்குனர்களும் பங்கேற்றிருந்த நிலையில், அவரின் முதல் பட இயக்குனரான அமீர் மட்டும் நிகழ்ச்சியில் பங்கேற்கவில்லை.

இது பற்றி கார்த்தியிடம் கேட்டபோது அவருக்கு அழைப்பு விடுத்தோம் ஆனால் வரவில்லை என்று கூறியிருந்தார். அதேபோல் அமீரிடம் கேட்டபோது அவர் அலுவலகத்தில் வேலை செய்யும் ஒருவரை விட்டு என்னை அழைத்தார்கள். அந்த நிகழ்ச்சிக்கு போக எனக்கு பிடிக்கவில்லை என்று கூறியிருந்தார். அப்போது தான் பருத்தி வீரன் படம் தொடர்பான இருவருக்கும் இடையே மோதல் இருப்பதும் நீதிமன்றத்தில் வழக்கு நிலுவையில் இருப்பதும் தெரியவந்தது.

தொடர்ந்து பல யூடியூப் சேனல்களில் பேசி வரும் தயாரிப்பாளர் ஞானவேல் ராஜா, அமீர்தான் தன்னை ஏமாற்றிவிட்டதாக கூறி வரும் நிலையில், அமீர்க்கு ஆதரவாக பலரும் யூடியூப் சேனல்களில் ஞானவேல் ராஜாவை கடுமையாக விமர்சித்து வருகின்றனர். அந்த வகையில் தனது குருநாதருக்கு ஆதரவாக களமிறங்கியுள்ள நடிகரும் இயக்குனருமான சசிகுமார் வெளியிட்டுள்ள ட்விட்டர் பதிவு தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.

இந்த பதிவில், அண்ணன் அமீர் குறித்து ஞானவேல் ராஜாவின் கருத்தை வன்மையாக கண்டிக்கிறேன். பருத்தி வீரன் படத்தின் இறுதிக்கட்ட படப்பிடிப்பிற்கான முழு தொகையையும் அண்ணன் அமீருக்கு நானே கடனாக கொடுத்தேன். எங்களுக்கான பணம் செட்டில் செய்யப்படாமலே படம் ரிலீஸ் செய்யப்பட்டது. அவர் சொல்வது உண்மை என்று பதிவிட்டுள்ளார். இந்த பதிவு தற்போது வைரலாகி வரும் நிலையில், பலரும் அமீருக்கு ஆதரவாக கருத்து தெரிவித்து வருகின்றனர்.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Sasikumar
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment