/indian-express-tamil/media/media_files/2025/09/21/manorama-kushi-2025-09-21-15-23-51.jpg)
விஜய் நடிப்பில் வெளியான ஹிட் படங்களில் ஒன்றாக இன்றுவரை ரசிகர்கள கொண்டாடி வரும குஷி படத்தில், வரும் கட்டிப்புடி, கட்டிப்புடிடா பாடல், பெரிய வரவேற்பை பெற்றிருந்தது. இந்த பாடல், உருவாக ஒரு பழைய பாடல் தான் இன்ஸ்பிரேஷன் என்று படத்தின் இயக்குனர் எஸ்.ஜே.சூர்யா கூறியுள்ளார்.
பழைய க்ளாசிக் படங்களை ரீ-ரிலிஸ் செய்யும் வழக்கம் அவ்வப்போது நடந்த வரும் ஒர நிகழ்வு. இந்த வகையில் வெளியான விஜயின் கில்லி திரைப்படம் ரூ10 கோடிக்கு மேல் வசூலித்து ரீ-ரிலீஸில் பெரிய வெற்றியை பெற்றது. அதேபோல் சச்சின் படமும் ரீ-ரிலீஸ் ஆகி பெரிய வரவேற்பை பெற்றிருந்த நிலையில், அடுத்தடுத்து விஜய் படங்கள் ரீ-ரிலீஸ் ஆக தொடங்கியுள்ளன. அந்த வகையில், அடுத்து குஷி படம் ரீ-ரிலீஸ் ஆக உள்ளது.
அஜித் நடிப்பில் வாலி என்ற மெகாஹிட் படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமான எஸ்.ஜே.சூர்யா 2-வது இயக்கிய படம் குஷி. விஜய், ஜோதிகா, மும்தாஜ், விவேக், ஷாம், விஜயகுமார், நாகேந்தரபிரஷாத் உள்ளிட்ட பலர் நடித்திருந்த இந்த படத்திற்கு தேவா இசையமைத்திருந்தார். படத்தின் பாடல்கள் அனைத்தும் ரசிகர்கள் மத்தியில் பெரிய வரவேற்பை பெற்றிருந்தது. படத்தின் க்ளைமேக்ஸ் இதுதான் என இயக்குனர் எஸ்.ஜே.சூர்யா ஓப்பனாக சொல்லிவிட்டு அதன்பிறகு தான் கதையை தொடங்குவார்.
படத்தில் விஜய்- ஜோதிகா இடையேயான மோதல், ஈகோ என பல காட்சிகள் பெரிய அளவில் வரவேற்பை பெற்றிருந்தது. அந்த வகையில் படத்தில் விஜய் மும்தாஜ் இணைந்து ஆடிய கட்டிப்புடி கட்டிப்புடிடா பாடல், இன்றைக்கும் ட்ரெண்டிங்கில் இருக்கிறது. இதற்கு அந்த பாடலின் வரிகளும், அதற்கு விஜய் மும்தாஜ் கொடுத்த எணர்ஜியான ஆட்டமும் தான். கவிஞர் வைரமுத்து படத்திற்கான பாடல்களை எழுத தேவா இசை அமைத்திருந்தார். தற்போது குஷி ரீ-ரலீஸ் நிகழ்ச்சியில் பேசிய இயக்குனர் எஸ்.ஜே.சூர்யா இந்த பாடல் உருவன விதம் குறித்து பேசியுள்ளார்.
இந்த படத்தை ரசிகர்களில் ஒருவராக நான் இப்போது தான் ரசித்தேன். படத்தில் வரும் கட்டிப்புடி கட்டிப்புடிடா பாடல் இப்போதும் பலரின் கவனத்தை ஈர்க்கிறது. அந்த பாடலை ரசித்து பார்க்கிறார்கள். படத்தின் பாடல்கள் பதிவின்போது ‘செந்தமிழ் தேன் மொழியாள்’ என்ற பழைய பாடலை சொல்லி இதே மாதிரி ஒரு பாடல் போட வேண்டும் என்று சொன்னேன். அந்த பாடலுக்கான டியூனில்தான் இந்த கட்டிப்புடி கட்டிப்புடிடா பாடல் அமைந்துள்ளது. நல்ல பொயட்டிக்கான மெலடி பாடல் அதனால் அனைவருக்கும் பிடித்திருக்கிறது என்று கூறியுள்ளார்.
1958-ம் ஆண்டு கண்ணதாசன் தயாரிப்பில், டி.ஆர்.மகாலிங்கம், நடிப்பில் வெளியான மாலையிட்ட மங்கை என்ற படத்தில் தான் ‘செந்தமிழ் தேன் மொழியாள்’ பாடல் இடம் பெற்றுள்ளது. கண்ணதாசன் எழுதிய இந்த பாடலுக்கு மெல்லிசை மன்னர்கள் எம்.எஸ்.விஸ்வநாதன், ராமமூர்த்தி இசையமைத்திருந்தனர். நடிகை ஆச்சி மனோரமா அறிமுகமான முதல் திரைப்படம் இதுதான் என்பது குறிப்பிடத்தக்கது.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.