அப்பா சயின்டிஸ்ட்... அம்மா பி.எச்.டி... வெற்றிமாறன் சினிமாவுக்கு வந்த கதை

முதுகலை பட்டம் பெற்ற எனக்கு பி.எச்.டி பட்டம் பெற உறுதுணையாக இருந்தது என் மகன்தான். என்னை படிக்க வைத்ததே வெற்றிமாறன் தான்.

முதுகலை பட்டம் பெற்ற எனக்கு பி.எச்.டி பட்டம் பெற உறுதுணையாக இருந்தது என் மகன்தான். என்னை படிக்க வைத்ததே வெற்றிமாறன் தான்.

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
அப்பா சயின்டிஸ்ட்... அம்மா பி.எச்.டி... வெற்றிமாறன் சினிமாவுக்கு வந்த கதை

தமிழ் சினிமாவின் தற்போதைய முன்னணி இயக்குனராக வலம் வரும் வெற்றிமாறன் சினிமாவுக்கு வந்தது எப்படி என்பது குறித்து அவரது அம்மா மேகலா சித்திரைவேல் கூறியுள்ளார்.

Advertisment

கடந்த 2007-ம் ஆண்டு தனுஷ் நடிப்பில் வெளியான பொல்லாதவன் படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமானவர் வெற்றிமாறன். தென்னிந்திய சினிமாவில் பல துறைகளில் தனது முத்திரையை பதித்துள்ள இயக்குனர் பாலுமகேந்திராவின் சிஷ்யரான வெற்றிமாறன் முதல் படத்திலேயே பெரும் பிரபலமானார்.

பொல்லாதவன் பெரிய வெற்றிப்படமாக அமைந்த நிலையில், அடுத்ததாக 4 வருட இடைவெளிக்கு பிறகு மீண்டும் வெற்றிமாறன் தனுஷ் கூட்டணியில் வெளியான படம் ஆடுகளம். இந்த படத்திற்காக சிறந்த இயக்குனர் சிறந்த திரைக்கதை ஆசிரியர் என இரண்டு தேசிய விருதுகளை வென்ற வெற்றிமாறன் தமிழ் சினிமாவின் கவனிக்கப்படும் இயக்குனராக வளர்ந்தார்.

அதனைத் தொடர்ந்து விசாரணை, வட சென்னை, அசுரன், உள்ளிட்ட படங்களை இயக்கிய வெற்றிமாறன் தற்போது சூரி விஜய் சேதுபதி ஆகியோர் நடிப்பில் விடுதலை என்ற படத்தை இயக்கி வருகிறார். இந்த படத்தின் இறுதிக்கட்ட பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வரும் நிலையில், வெற்றிமாறன் அடுத்து யார் படத்தை இயக்குவார் என்ற எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.

Advertisment
Advertisements

இதனிடையே சமீபத்தில் யூடியூப் சேனல் ஒன்றுக்கு பேட்டி அளித்த வெற்றிமாறனின் அம்மா மேகலா சித்திரைவேல் தனது மகன் இயக்குனர் ஆனது எப்படி என்பது குறித்து பேசியுள்ளார்.

எனக்கு இரண்டு குழந்தைகள். முதலில் மகள் அவர் டாக்டராக இருக்கிறார். அடுத்து வெற்றிமாறன். எனது கவனர் ஒரு சைன்டிஸ்ட். மனிதர்களுக்கும் மிருகங்களுக்கும் வரும் புற்றுநோய் தொடர்பாக ஆராய்ச்சி செய்துள்ளார். உலகத்திலேயே இந்த ஆராய்ச்சியில் ஈடுபட்ட 2-வது டாக்டர் என் கணவர் சித்திரைவேல்.

பிள்ளைகளின் விருப்பத்திற்கு நான் துணை நிற்க மாட்டேன். என் மகன் சென்னை லயோலா கல்லூரியில் படித்தபோது அங்கு விசிட்டிவ் ப்ரபோசராக பாலுமகேந்திரா வந்திருக்கிறார். அப்போது கல்லூரியின் ஃபாதரை பார்த்து சுறுசுறுப்பான தமிழ் படிக்க தெரிந்த ஒரு பையன் இருந்தா சொல்லுங்க என்று சொன்னார். அப்போது அந்த .ஃபாதர் வெற்றிமாறனை பற்றி கூறியுள்ளார். ஆனாலும் பாலுமகேந்திரா அவரை எளிதாக உதவி இயக்குனராக சேர்த்துக்கொள்ளவில்லை.

வெற்றிமாறனுக்கு தமிழ் சரியாக படிக்க வராது. அவரை நன்றாக படிக்க வைத்து நாவல்கள் கதை புத்தகங்கள் படிக்க வைத்து சரியாக எழுத வைத்து அதன்பிறகு சேர்த்துக்கொண்டார். உதவி இயக்குனர் சங்கத்தில் சேர்வதற்காக 300 ரூபாய் என்னிடம் கேட்டபோது அப்பாவிடம் கேள் என்று சொன்னேன். ஆனால் வெற்றி சினிமாவுக்கு செல்வது அவரது அப்பாவுக்கு பிடிக்கவில்லை.

ஆனாலும் பையன் ஒருநாள் ஜனாதிபதி கையால் விருது வாங்குவான் அப்போது நாம் இருவரும் சென்று பார்ப்போம் என்று சொன்னேன். வெற்றியிடமும் இதையே சொன்னேன். ஆனால் உங்களுக்கு எப்போதும் விளையாட்டுதான் என்று அவர் சொல்வார். அதன்பிறகு பாலுமகேந்திராவிடம் உதவி இயக்குனராக சேர போவதாக அப்பாவிடம் வெற்றி சொன்னார்.

ஆனால் எடுத்த உடனேயே யார் அவன் என்று கேட்டார். அவருக்கு மூன்றாம் பிறை என்ற படம் பிடிக்கும். அப்போது அதை சொல்லி அந்த படத்தின் இயக்குனர்தான் என்று சொன்னபோது வாழ்த்தி அனுப்பினார். அதன்பிறகு வெற்றிமாறனுக்கு தேசிய விருது அறிவிக்கப்பட்டபோது எனக்கு வார்த்தையே வரவில்லை. இரவு 12 மணிக்கு வந்து என் காலில் விழுந்தான். அப்போது நான் அழுத என் கண்ணீர் துளி அவன் தலையில் விழுந்தது.

அதேபோல் முதுகலை பட்டம் பெற்ற எனக்கு பி.எச்.டி பட்டம் பெற உறுதுணையாக இருந்தது என் மகன்தான். என்னை படிக்க வைத்ததே வெற்றிமாறன் தான்.என்று உணர்ச்சி பொங்க கூறியுள்ளார்.

தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil/

Vetrimaaran

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us: