என்னயா டைலாக் இது... என்னால பேச முடியாது; முதல் ஷாட்டில் முளைத்த சண்டை: விக்ரமன் எழுதிய வசனம் இதுதான்!

பூவே உனக்காக படம் விஜய்க்கும், சூர்யவம்சம் படம் சரத்குமாருக்கும், சூர்யாவுக்கு உன்னை நினைத்து, என அவர்களின் திரை வாழ்வில் முக்கிய படங்களை கொடுத்த பெருமை இயக்குனர் விக்ரமனுக்கு உண்டு.

பூவே உனக்காக படம் விஜய்க்கும், சூர்யவம்சம் படம் சரத்குமாருக்கும், சூர்யாவுக்கு உன்னை நினைத்து, என அவர்களின் திரை வாழ்வில் முக்கிய படங்களை கொடுத்த பெருமை இயக்குனர் விக்ரமனுக்கு உண்டு.

author-image
WebDesk
New Update
Vikraman

தமிழ் சினிமாவில் இசைஞானி என்று அழைக்கப்படும் இளையராஜா முதன் முதலில் படத்திற்கு இசைமைக்க தொடங்கும்போது கரண்ட் இல்லாமல் போய்விட்டது. ஆனாலும் அந்த படம் வெற்றியடைந்து அவர் முன்னணி இசையமைப்பாளராக மாறினார். ஆனால் அது செண்டிமெண்ட் இல்ல என்று இயக்குனர் விக்ரமன் கூறியுள்ளார்.

Advertisment

தமிழ் சினிமாவில் ஃபீல்குட் திரைப்படங்களை இயக்கி அனைவரையும் திரும்பி பார்க்க வைத்தவர் இயக்குனர் விக்ரமன். 1990-ம் ஆண்டு வெளியான புது வசந்தம் என்ற படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமான இவர் முதல் படத்திலேயே 2 தமிழக அரசின் சிறந்த இயக்குனர் மற்றும் சிறந்த படத்திற்கான விருதை பெற்றிருந்தார். அதனைத் தொடர்ந்து, பெரும்புள்ளி கோகுலம், நான் பேச நினைப்பதெல்லாம், பூவே உனக்காக சூர்ய வம்சம், உன்னை நினைத்து, வனத்தைப்போல உள்ளிட்ட பல வெற்றிப்படங்களை கொடுத்தார்.

இதில் பூவே உனக்காக படம் விஜய்க்கும், சூர்யவம்சம் படம் சரத்குமாருக்கும், சூர்யாவுக்கு உன்னை நினைத்து, என அவர்களின் திரை வாழ்வில் முக்கிய படங்களை கொடுத்த பெருமை இயக்குனர் விக்ரமனுக்கு உண்டு. மூத்த நடிகரான விஜயகாந்த் 2 வேடங்களில் நடித்து பெரிய வெற்றியை கொடுத்த படம் வானத்தை போல. அதேபோல் மாதவனுக்கு ப்ரியமான தோழி என பெரிய வெற்றியை தேடி கொடுத்தவர் இயக்குனர் விக்ரமன்.

இவர் கடைசியாக கடந்த 2014-ம் ஆண்டு நினைத்தது யாரோ என்ற படத்தை இயக்கி இருந்தார் அதன்பிறகு படங்கள் இயக்குவதை நிறுத்திவிட்ட விக்ரமன் திடீரென சினிமாவை விட்டு விலகிய நிலையில், சமீப காலமாக யூடியூப் சேனல்களுக்கு பேட்டி அளித்து வருகிறார், அந்த வகையில் சினிமாவில் செண்டிமெண்ட் எப்படி என்பது குறித்து விக்மரன் பேசிய பழைய வீடியோ ஒன்று தற்போது ட்ரெண்டாகி வருகிறது.

Advertisment
Advertisements

இந்த வீடியோவில், என் முதல் படமான 'புதுவசந்தம்', இயக்குனர் ஆகிவிட்டேன். முதல் நாள், முதல் காட்சி. நான் என்ன செய்தேன் என்பது இன்றும் என் நினைவில் பசுமையாக உள்ளது. "உன்னை எல்லாம் செருப்பால் அடிக்கணும்டா" என்று என்பது தான் நான் எடுத்த முதல் டைலாக். இதை வினு சக்ரவர்த்தி சார் பேசவே மாட்டேன் என்ற சொன்னார். இங்கிருந்து ஒரு நல்ல வசனத்தை எடு. நீ பெருசா வருடா, ஜெயிச்சிருவடா என்று பாசிட்டீவா எடு என்று சொன்னார். ஆனால் நான் அவரை சமாளித்து பேச சொல்லி எடுத்துவிட்டேன்.

அதன்பிறகு, எனக்கு ஒரு பாடல் பதிவு இருந்தது. எஸ். ராஜ்குமார் "ரெடி, டேக், ரோலிங்" என்றார். "டேக்" என்று சொன்னபோது மின்சாரம் தடைப்பட்டது. அப்போது நான் மிகவும் வருத்தமடைந்தேன். பொறியாளர், "சார், இது சிறந்த சென்டிமென்ட் சார். இளையராஜா சார் கூட ரோலிங் சொல்லும்போது மின்சாரம் தடைப்பட்டது. அந்த படம் பெரிய அளவில் ஓடி வெற்றி பெற்றது. அதே மாதிரி, படம் சூப்பராக ஓடும்," என்றார்.

அவர் சொன்னது போலவே, 'புதுவசந்தம்' படமும் வெற்றி பெற்றது. அதேபோல, 'பெரும்புள்ளி' படப் பாடல் பதிவின்போதும் மின்சாரம் தடைபட்டது. ஆனால் அந்த படம் படுதோல்வியை சந்தித்தது. இதிலிருந்து என்ன தெரிகிறது? சினிமாவுக்கும் சென்டிமென்ட்டுக்கும் சம்பந்தமே இல்லை என்று விக்ரமன் கூறியுள்ளார்.

Tamil Cinema News

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us: