/indian-express-tamil/media/media_files/Zcer0zH5nRKbIWtHwVPD.jpg)
லியோ படம் பார்க்க வந்த மாற்றுத்திறனாளி விஜய் ரசிகர்
விஜய் நடிப்பில் லியோ திரைப்படம் ஐந்து மொழிகளில் இன்று உலகம் எங்கும் வெளியாகி உள்ளது. தமிழகத்தில் 9 மணி முதல் காட்சிகள் திரையிடப்பட்டது. அடுத்த காட்சி 12:30 மணியளவில் திரையிடப்படடது. இதில் கோவை சாந்தி திரையரங்கில் லியோ திரைப்படத்தை காண்பதற்கும் ரசிகர்கள் திரையரங்கில் குவிந்துலியோ லியோ என உற்சாக முழக்கங்களை எழுப்பினர்.
இதில் விஜயின் லியோ திரைப்படத்தை பார்ப்பதற்காக கோவை அம்மன்குளம் பகுதியை சேர்ந்த மருதாச்சலம் என்ற மாற்றுத்திறனாளி ரசிகர் மிகவும் உற்சாகத்துடன் திரையரங்கிற்கு மாற்றுத் திறனாளிகளுக்கான வாகனத்தில் வந்திருந்தார். அப்போது அவரும் அவருடன் வந்த நண்பரும் கூறுகையில், லியோ திரைப்படத்தின் முதல் அப்பேட் வந்ததிலிருந்து சுமார் ஒரு வருடகாலமாகவே இப்படத்தை காண்பதற்கு மிகவும் ஆவலுடன் இருந்ததாக தெரிவித்தனர்.
மேலும் மாற்றுத்திறனாளி என்பதால் தனக்கு டிக்கெட் இலவசமாகவே வழங்கப்பட்டதாக கூறிய அவர், விஜயை நேரில் காண வேண்டுமென கோரிக்கை விடுத்தார். தொலைக்காட்சி வாயிலாக விஜய் பார்த்தால் கண்டிப்பாக தங்களை அழைப்பார் என்ற நம்பிக்கை உள்ளது என்றும் தெரிவித்தனர்.
பி.ரஹ்மான்.கோவை மாவட்டம்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.