வாலியின் வாழ்க்கையில் மலர்ந்த காதல்... காரணமான எம்.ஜி.ஆர் பாடல் : இந்த ஹிட் பாடல் தெரியுமா?

கவிஞர் வாலி எம்.ஜி.ஆர் படத்திற்கு எழுதிய ஒரு பாடலை கேட்டு ரசிகையான பெண்னை திருமணம் செய்துகொண்டது பலரும் அறியாத ஒரு தகவல்

கவிஞர் வாலி எம்.ஜி.ஆர் படத்திற்கு எழுதிய ஒரு பாடலை கேட்டு ரசிகையான பெண்னை திருமணம் செய்துகொண்டது பலரும் அறியாத ஒரு தகவல்

author-image
WebDesk
New Update
Vaali MGR Classic

எம்.ஜி.ஆர் - கவிஞர் வாலி

Listen to this article
0.75x 1x 1.5x
00:00 / 00:00

எம்.ஜி.ஆர் படத்திற்கு 2 ஹிட் பாடல்களை எழுதிய வாலிக்கு, அந்த பாடல்கள் மூலம் அவரது ரசிகையான பெண்னை தனது வாழ்க்கை துணையாக மாற்றிக்கொண்டார் என்பது பலரும் அறியாத ஒரு தகவல்.

Advertisment

தமிழ் சினிமாவில் தனது வாழ்நாள் இறுதிவரை வாலிப கவிஞர் என்று அழைக்கப்பட்டவர் வாலி. எம்.ஜி.ஆர், சிவாஜி தொடங்கி இன்றைய தலைமுறை நடிகர்கள் வரை பலருக்கும் தனது வரிகள் மூலம் ஹிட் பாடல்களை கொடுத்த வாலி, தற்போது இல்லை என்றாலும் தனது பாடல்கள் மூலம் இன்றும் ரசிகர்கள் மனதில் நிலைத்திருக்கிறார் என்று சொல்லலாம்.

அதேபோல் எம்.ஜி.ஆர் படத்திற்கு பாடல் எழுதியதால் அவரது வாழ்க்கை துணை கிடைத்தது என்பது பலரும் அறியாத ஒரு தகவல். சினிமாவில் வாய்ப்பு தேடிக்கொண்டிருந்த வாலிக்கு ஒருவிதமாக நல்ல வாய்ப்பு கிடைத்து பிரபலமான நிலையில், 1965-ம் ஆண்டு வெளியான எம்.ஜி.ஆரின் எங்க வீட்டு பிள்ளை படத்தில் 2 பாடல்கள் எழுதியிருந்தார். எம்.ஜி.ஆர் இரட்டை வேடங்களில் நடித்திருந்த இந்த படத்தை, சாணக்யா என்பவர் இயக்கியிருந்தார்.

விஸ்வநாதன் – ராமமூர்த்தி இணைந்து இசையமைத்த இந்த படத்திற்கு வாலி ஆலங்குடி சோமு ஆகியோர் பாடல்கள் எழுதியிருந்தனர். இந்த படத்தின் அனைத்து பாடல்களுமே ரசிகர்கள் மத்தியில் வரவேற்பை பெற்றிருந்த நிலையில், வாலி எழுதிய 2 பாடல்களுக்கு பாராட்டுக்கள் குவிந்துள்ளது. அதில் ஒரு பாடல் ‘’நான் ஆணையிட்டால்’’. இந்த பாடலை முழுவதுமாக கேட்ட அறிஞர் அண்ணா, வாலிக்கு தனியாக பாராட்டுக்களை தெரிவித்திருந்தார்.

Advertisment
Advertisements

இந்த பாடலுக்கு பிறகு 2-வது குமரி பெண்ணின் உள்ளத்திலே என்ற பாடல் பெரும் வரவேற்பை பெற்றிருந்தது. இந்த பாடலின் மூலம் வாலியின் ரசிகையாக மாறிய ஒரு பெண், தினமும் வாலிக்கு கடிதம் எழுதியுள்ளார். உங்களின் ‘’குமரி பெண்ணின் உள்ளத்திலே’’ பாடல் எனக்கு மிகவும் பிடித்துள்ளது. நான் உங்களுக்கு ரசிகையாக மாறிவிட்டேன் உங்களை சந்திக்க வேண்டும் எப்போது என்ற சொல்லுங்கள் என்று கடிதம் எழுத தொடங்கியுள்ளார்.

தினமும் இந்த கடிதம் வருவதை பார்த்த கவிஞர் வாலி ஒருநாள், நீங்கள் என்னை நாளை சந்திக்கலாம் என்று பதில் அனுப்பியுள்ளார். அதன்படி அந்த ரசிகையை மறுநாள் வாலி சந்திக்க, இந்த சந்திப்பு பல மாதங்களாக தொடந்துகொண்டே இருந்துள்ளது. அதன்பிறகு இருவருக்கும் இடையே நட்பு உருவாக உரு கட்டத்தில் நட்பு காதலாக மாறி கவிஞர் வாலி அந்த ரசிகையை திருமணம் செய்துகொண்டார். அவர் தான் வாலியின் மனைவி ரமணி திலகம்.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Mgr vaali

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us: