/indian-express-tamil/media/media_files/2025/08/22/anna-kamraj-2025-08-22-14-26-57.jpg)
இன்றைக்கு ஒரு படம் நடித்து ஹிட்டாகிவிட்டாலே வருங்கால முதல்வரே என்று போஸ்டர் அடிக்கிறார்கள். ஆனால் அன்று, நேரு, காமராஜர் அழைத்தும் கூட, அரசியலுக்கு வர மறுத்த சூப்பர் ஸ்டார் நடிகர் ஒருவர் இருக்கிறார் என்று பா.ஜ.க.வின் ராம சீனிவாசன் கூறியுள்ளார்.
தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர்களில் ஒருவராக இருக்கும் விஜய் தமிழக வெற்றிக் கழகம் என்ற புதிய அரசியல் கட்சி தொடங்கி அடுத்து வரும் தமிழக சட்டசபை தேர்தலில் போட்டியிட உள்ளார். இதற்காக கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் விக்கிரவாண்டி வி.சாலை கிராமத்தில் தனது கட்சியின் முதல் மாநாட்டை நடத்திய விஜய், நேற்று (ஆகஸ்ட் 21) மதுரையில் 2-வது மாநாட்டை நடத்தினார். இந்த இரு மாநாடுகளிலும் அவர் பா.ஜ.க.வை தனது கொள்ளை எதிரி என்று அறிவித்துள்ளார்.
விஜயின் இந்த பேச்சுக்கு ஆதரவும் எதிர்ப்பும் குவிந்து வரும் நிலையில், பா.ஜ.க.பிரமுகர் ராம சீனிவாசன், அளித்த பேட்டி ஒன்றில் தமிழ் சினிமாவின் முதல் சூப்பர் ஸ்டார் நடிகர் குறித்து பேசியுள்ளார். இது தொடர்பாக அவர் அளித்த பேட்டியில், தமிழ் சினிமாவின் முதல் சூப்பர் ஸ்டார் தியாகராஜ பாகவதர். அவர் ரயிலில் ஏறி சென்றால், அனைத்து ஸ்டேஷன்களிலும் ரயில்கள் நின்று சொல்லும். அவரை பார்க்க கூட்டம் குவியும். அப்போது நடைமேடை டிக்கெட்டுகள் ஒரு பைசா தான் இருக்கும். ஆனால் ரூ500-க்கு டிக்கெட்டுக்ள விற்கும் அளவுக்கு கூட்டம் வரும்.
ஒருமுறை, நேரு தமிழகத்திற்கு வந்திருந்தபோது, அவரை பார்க்க கூட்டம் குவிந்தது. அப்போது அருகில் தியாகராஜ பாகவதரும் வந்திருந்தார். ஆனால் நேருவுக்க வந்த கூட்டத்தை விடவும் இவருக்கு கூட்டம் அதிகமாக இருந்தது. இதை பார்த்த நேரு அவரை பற்றி காமராஜரிடம் விசாரித்துள்ளார், அப்போது காமராஜர் அவர் ஒரு சினிமா ஸ்டார் என்ற சொல்ல, இவ்வளவு செல்வாக்கு உள்ளவரை ஏன் இன்னும் காங்கிரஸ் கட்சியில் சேர்க்காமல் இருக்கிறீர்கள், உடனடியாக சேருங்கள். அவர் என்ன பதவி கேட்டாலும் கொடுத்துவிடலாம் என்ற கூறியுள்ளார்.
அதன்படி காமராஜரிடம் இருந்து தியாராஜ பாகவதருக்க அழைப்பு போக அவரோ, நான் நடிகன், பாடகன், அவ்வளவு தான். இதுதான் என் வேலை. அரசியலில் உங்களை போன்ற, சுதந்திரத்திற்காக பாடுபட்டவர்கள் தான் ஈடுபட வேண்டும் என்று கூறி அந்த வாய்ப்பை மறுத்துள்ளார். அதேபோல் அண்ணாவுக்கும் தியாகராஜபாகவதருக்கும் நெருங்கிய நட்பு இருந்தது. தான் எழுதிய சொர்க்க வாசல் கதையில் தியாகராஜ பாகவதர் தான் நடிக்க வேண்டும் என்று அண்ணா சொன்னார். ஆனால் அந்த கதை நாத்தீகம் சார்ந்த கதை.
கதையை கேட்ட தியாகராஜ பாகவதர் இந்த கதையில் நடிக்க முடியாது என்று கூறியுள்ளார். இதற்கு அண்ணா காரணம் கேட்க, நாத்தீக கதையில் நான நடிக்க மாட்டென் என்ற கூறியுள்ளார். இதை கேட்ட அண்ணா, நான் நாத்தீகன் தானே இதை தான் நான் எழுத முடியும் என்று சொல்ல, நான் ஆஸ்தீகம் நான் இதில் எப்படி நடிக்க முடியும் என்று தியாகராஜ பாகவதர் கேட்டுள்ளார் என்று ராம சீனிவாசன் கூறியுள்ளார்.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.