இடம் பொருள் ஏவல் படத்தின் படப்பிடிப்பின்போது நடிகை மனிஷா யாதவிடம் அப்படத்தின் இயக்குனர் சீனுராமசாமி பாலியல் ரீதியாக நடந்துகொண்டதாக பிரபல சினிமா பத்திரிக்கையாளர் வலைப்பேச்சு பிஸ்மி கூறியிருந்த நிலையில், தற்போது இயக்குனர் சீனு ராமசாமி இதற்கு பதில் அளித்துள்ளார்.
திரைத்துறையில் நடிகைள் பாலியல் ரீதியான பல சீண்டல்களை சந்தித்து வருவது தொடர்ந்து நடைபெற்று வரும் நிலையில், அவ்வப்போது நடிகைகள் இது குறித்து பேசும்போது பல தகவல்கள் வெளியாகவது வழக்கமான ஒன்று. அந்த வகையில் பிக்பாஸ் நிகழ்ச்சியில் இருக்கும் நடிகை விசித்ரா 20 ஆண்டுகளுக்கு முன்பு தனக்கு ஏற்பட்ட கசப்பான அனுபவங்களை கூறியது தற்போது இணையத்தில் அதிகம் விவாதிக்கும் ஒரு விஷயமாக மாறியுள்ளது.
இதனைத் தொடர்ந்து பலரும் விசித்ராவுக்கு பாலியல் தொல்லை கொடுத்த அந்த நடிகர் இவர் தான் என்று ஒரு பெரிய நடிகரின் பெயரை குறிப்பிட்டு வரும் நிலையில், ஒரு யூடியூப் சேனலுக்கு பேட்டி அளித்த சினிமா பத்திரிக்கையாளர் வலைப்பேச்சு பிஸ்மி, சீனுராமசாமி இயக்கத்தில் தயராகி வெளியாகாமல் இருக்கும் இடம் பொருள் ஏவல் படத்தில் நடித்த நடிகை மனிஷா யாதவ்க்கு சீனுராமசாமி பாலியல் தொல்லை கொடுத்துள்ளார்.
இது குறித்து மனிஷா யாதவ் என்னிடம் கூறி கண்ணீர் சிந்தினார். அவரின் பேச்சுக்கள் மற்றும் சீனுராமசாமி அவருக்கு பாலியல் தொல்லை கொடுத்ததற்கான ஆதாரங்கள் என்னிடம் உள்ளது மாமனிதன் படம் எடுத்த இயக்குனர் சீனு ராமசாமியின் இன்னொரு முகம் இதுதான். அதன்பிறகு மனிஷா யாதல் சினிமாவை விட்டே சென்றுவிட்டார். என்று பிஸ்மி கூறியிருந்தார். இந்த வீடியோவை தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்ட புளுசட்டை மாறன், என்ன சீனுராமசாமி சார் இதுக்கு என்ன சொல்றீங்க மன்சூர் அலிகானுக்க மட்டும் தான் தண்டனையா என்று கேட்டிருந்தார்.
தற்போது இவர்கள் இருவருக்குமே பதில் அளிக்கும் வகையில் சீனுராமசாமி தனது ட்விட்டர் பக்கத்தில், ஒரு குப்பை கதை படத்தில் பத்திரிக்கையாளர் சந்திப்பில், பேசிய மனிஷா யாதவ் (இடம் பொருள் ஏவல் படத்திற்காக இயக்குனர் சீனு ராமசாமிக்கு நன்றி) வீடியோ க்ளிப்பை வெளியிட்டு, நான் அவரிடம் பாலியல் ரீதியாக நடந்துகொண்டிருந்தால் அவர் எதற்காக எனக்கு நன்றி சொல்ல வேண்டும் என்று பதிவிட்டுள்ளார். இந்த பதிவுகள் தற்போது இணையத்தில் வெளியாகியுள்ள நிலையில், இது குறித்து மனிஷா யாதவ் கருத்து தெரிவிப்பாரா என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“