/indian-express-tamil/media/media_files/2025/09/22/crizilada-2025-09-22-19-25-24.jpg)
நடிகரும், சமையல் கலைஞருமானா மாதம்பட்டி ரங்கராஜ் மீது கொடுத்த புகார் மீது காவல்துறை விசாரணை நடத்தி வரும நிலையில், முதற்கட்டமாக புகார் கொடுத்த ஜாய் கிரிசில்டாவிடமே போலீசார் விசாரணையை தொடங்கியுள்ளனர்.
விஜய் உள்ளிட்ட முன்னணி நடிகர்கள் நடித்த பல திரைப்படங்களில் ஆடை வடிவமைப்பாளராக பணியாற்றியுள்ள ஜாய் கிரிசில்டா, இவருக்கு ஏற்கனவே பொன்மகள் வந்தாள் படத்தின் இயக்குனர் ஜே.ஜே.பெட்ரிக்குடன் முதல் திருமணம் நடைபெற்று விவாகரத்தில் முடிந்தது. இதன் பிறகு தனிமையில் தனது மகனுடன் வசித்து வந்த ஜாய் கிரிசில்டா, கடந்த சில மாதங்களாக மாதம்பட்டி ரங்கராஜ் தன்னை திருமணம் செய்து கர்ப்பம் ஆக்கிவிட்டு ஏமாற்றிவிட்டதாக குற்றம்சாட்டி வருகிறார்.
மேலும் இது தொடர்பாக சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் கிரிசில்டா புகார் அளித்திருந்த நிலையில், இது குறித்து ஆதாரங்களையும் தனது சமூகவலைதள பதிவுகளில் வெளியிட்டு வருகிறார், இதனிடையே. 'மாதம்பட்டி பக்ஷசாலா' என்ற நிறுவனம் தங்கள், நற்பெயருக்கு களங்கம் விளைவிக்கும் வகையில் ஜாய் கிரிசில்டா சமூக வலைத்தளங்களில் அவதூறான கருத்துகளைப் பதிவிடுவதைத் தடுக்கக் கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு வழக்கு தொடர்ந்திருந்தது.
அதே சமயம் மாதம்பட்டி ரங்கராஜ் தன்னுடன் 2 வருடங்கள் குடும்பம் நடத்தியதாகவும், அவருடன் 2 ஆண்டுகள் வாழ்ந்ததில், 3 முறை கரு கலைப்ப செய்ததாகவும், கூறியுள்ள ஜாய் கிரசில்டா 4-வது முறையாக, தற்போது 7 மாதங்கள் கர்ப்பமாக இருப்பதாகவும், தற்போது அவர் தன்னை விட்டு பிரிந்து சென்றுவிட்டதாகவும், பிரிவதற்கு சில மாதங்களுக்கு முன்பு அவர் என்னை தாக்கியதில் தனக்கு காது கேட்காமல் போனதாகவும், கிரிசில்டா யூடியூப் சேனல் ஒன்றுக்கு அளித்த பேட்டியில் கூறியிருந்தார்.
இதனிடையே ஜாய் கிரிசில்டா மாதம்பட்டி ரங்கராஜ் மீது அளித்த புகாரின் அடிப்படையில் அவரிடம் 4 மணி நேரம் விசாரணை நடத்தப்பட்டுள்ளது, பெண்களுக்கு எதிரான குற்றப்பிரிவு துணை ஆணையர் அலுவலகத்தல் நடந்த இந்த விசாரணையில், கிரிசில்டா மாதம்பட்டி ரங்கராஜ் குறித்து 100-க்கு மேற்பட்ட வீடியோ மற்றும் புகைப்படங்களை ஆதாரமாக கொடுத்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இதனைத்தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய அவர். என் குழந்தைக்கு பாதுகாப்பு இல்லை என்பதை காவல்துறையினரிடம் தெரிவித்துள்ளேன். கடந்த 20 நாட்களுக்கு முன்பு சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் புகார் அளித்தேன், எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என்று கூறியுள்ளார்.
மேலும், கடந்த 2 வருடங்களாக என்ன நடந்தது என்பது குறித்து கேட்கப்பட்ட கேள்விகளுக்கு பதில் அளித்துள்ளேன். திருமணம் செய்வதாக கூறி மோசடியில் ஈடுபட்ட மாதம்பட்டி ரங்கராஜ் மீது காவல்துறை நடவடிக்கை எடுப்பார்கள். உண்மையாகவே மாதம்பட்டி ரங்கராஜ் என்னை திருமணம் செய்து கொண்டார். இது குறித்து தவறான செய்திகளை பரப்ப வேண்டாம் வேண்டாம் என்றும் கூறியுள்ளார்.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.