/indian-express-tamil/media/media_files/2025/08/31/crixilada-2025-08-31-15-08-53.jpg)
தன்னை திருமணம் செய்து கர்ப்பமாக்கிவிட்டு, இப்போது தன்னுடன் வாழ மறுப்பதாகவும், அரை தொடர்புகொள்ள முடியவில்லை என்றும் காஸ்யூம் டிசைனர் ஜாய் கிரிசில்டா நடிகர் மாதம்பட்டி ரங்கராஜ் மீது புகார் அளித்திரந்த நிலையில், தற்போது ஒரு வீடியோ ஆதாரம் ஒன்றையும் வெளியிட்டுள்ளர்.
தமிழ் சினிமாவில், மெஹந்தி சர்க்கஸ், பென்குயின் என 2 படங்களில் நடித்திருந்தாலும், பிரபலங்களின் வீடுகளில் சமையல் செய்து பலரின் இதயங்களை வென்றவர் தான் மாதம்பட்டி ரங்கராஜ். தற்போது விஜய் டிவியின் குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் நடுவராக பங்கேற்று வரும் இவர், அடுத்து ஒரு படத்தில் நடிக்க தயாராகி வருவதாகவும், கடந்த சில மாதங்களுக்கு முன்பு இந்த படத்திற்கான பூஜை போடப்பட்டதாகவும் தகவல்கள் வெளியாகி பலரின் கவனத்தை ஈர்த்தது.
அதே சமயம், மாதம்பட்டி ரங்கராஜூவின் புதிய பட அறிவிப்பை விடவும், அவரது 2-வது திருமணம் தொடர்பான தகவல்கள் தான் தற்போது இணையத்தில் காட்டுத்தீயாக பரவி வருகிறது. தனது காஷ்டியூம் டிசைனராக் பணியாற்றிய ஜாய் கிரிசில்டாவை மாதம்பட்டி ரங்கராஜ் திருமணம் செய்துகொண்டதாக தகவல்கள் வெளியானது. ஆனால் இதை பற்றி இருவருமே உறுதி செய்யாத நிலையில், சமீபத்தில் கிரிசில்டா திருமண புகைப்படங்களை வெளியிட்டு பலருக்கும் அதிர்ச்சியை கொடுத்திருந்தார். இந்த பதிவுகள் வைரலாக பரவியது.
அதே சமயம், கிரிசில்டா மட்டுமே இதுகுறித்து பேசி வரும் நிலையில், ரங்கராஜ் இந்த தகவல் குறித்து எவ்வித விளக்கமும் அளிக்கவில்லை. அதே சமயம், அவர் தனது காஷ்டியூம் டிசைனரை மாற்றியதாக புகைப்படங்களை வெளியிட்டிருந்தார். திருமண புகைப்படங்கள் வெளியான சில நாட்கள் கழித்து தனது மனைவி ஸ்ருதியுடன் திருமண நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்றிருந்த ரங்கராஜ், மனைவி அருகில் இருந்தாலும் அவர் பக்கமே திரும்பாமல் இருந்த வீடியோ இணையத்தில் வேகமாக பரவி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
இதனிடையே கடந்த இரு தினங்களுக்கு முன்பு, ரங்கராஜ் தன்னை திருமணம் செய்து கர்ப்பமாக்கிவிட்டு ஏமாற்றிவிட்டார் என்று ஜாய் கிரிசில்டா புகார் அளித்துள்ளார். இது தொடர்பான தகவல்கள் பலரும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்திய நிலையில், இந்த புகார் குறித்து ரங்கராஜ் இதுவரை எந்த விளக்கமோ அல்லது பதிலோ அளிக்கவில்லை. அதே சமயம், கிரிசில்டா ரங்கராஜ் தொடர்பான ஆதாரங்களை வெளியிட்டு வருகிறார். அந்த வகையில் தற்போது ரங்கராஜ் தனக்கு அனுப்பிய வீடியோ பதிவு ஒன்றை கிரிசில்டா தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.
அந்த வீடியோவில் பேசும் ரங்கராஜ், ஹேய் என்னடி பண்ற, பொண்டாட்டி, மிஸ்யூ, லவ்யூ, வீட்டுக்கு போய் சாப்டு, குளிச்சிட்டு, ட்ரெஸ் மாத்திக்கிட்டு வந்துட்டேன், இன்டர்வியூ முடிஞ்சிடுச்சி, 4 மணிக்கு அந்த மீட்டிங் இருக்கு, 3.30க்கு வீட்டுக்கு கிளம்புகிறேன். காபி குடித்தேன். மிஸ்யூ, லவ்யூ, என்று முத்தம் கொடுத்துள்ளார். கணவர், ராஹா ரங்கராஜ் அப்பாவின் சேட்டைகள் என்று கிரிசில்டா பதிவிட்டுள்ளார்.
மேலும் இந்த பதிவில், இந்த வீடியோவை எனது கணவர் ரங்கராஜ் எனக்காகப் பதிவு செய்தார். அவர் வேலை காரணமாக மிகவும் பரபரப்பாக இருந்தபோது இதைச் செய்தார். இதன் பதிப்புரிமைகள் எனக்குச் சொந்தம். தன் குழந்தையைச் சுமந்த பெண்ணையே ஏமாற்றும் ஒருவன், யாரையும் ஏமாற்றுவான் என்று பதிவிட்டுள்ளார். இந்த பதிவு தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.