Advertisment

கண்ணதாசன் எழுதிய 4 பாடல்கள்... படத்தில் நடிக்க மறுத்து விலகிய கமல்ஹாசன் : காரணம் இதுதானா?

தான் நடிக்க ஒப்பந்தமாக படத்தில் கண்ணதாசன் 4 பாடல்கள் எழுதிய பின்னர் கமல்ஹாசன் நடிக்க மறுத்து படத்தில் இருந்து விலகியுள்ளார்.

author-image
WebDesk
New Update
Kannadasan Kamal Haasan

கண்ணதாசன் - கமல்ஹாசன்

Listen to this article
0.75x 1x 1.5x
00:00 / 00:00

பாடல்களே இல்லாமல் ஒரு படத்தில் நடிப்பதற்காக அட்வான்ஸ் தொகை வாங்கிக்கொண்டு ஒப்புக்கொண்ட நடிகர் கமல்ஹாசன், கண்ணதாசன் அந்த படத்திற்காக 4 பாடல்கள் எழுதியுள்ளார் என்ற தகவல் அறிந்து அந்த படத்தில் நடிக்க மறுத்துள்ளார்.

Advertisment

குடிசை என்ற படத்தை இயக்கியதன் மூலம் பிரபலமான இயக்குனர் ஜெயபாரதி 2 பேர் வானத்தை பார்க்கிறார்கள் என்ற கதையை எழுதியிருந்தார். போட்டோ ஸ்டூடியோ நடத்திக்கொண்டிருந்த எம்.ஆர்.ரமேஷ் என்பவர் இந்த கதையை படமாக்க விரும்பி அவரை அணுகியுள்ளார். அதே சமயம் இந்த படத்தில் கமல்ஹாசன் நாயகனாக நடித்தால் தான் நான் முதலீடு செய்யும் பணம் திரும்ப கிடைக்கும் என்று கூறியுள்ளார்.

அதன்படி, இருவரும் கமல்ஹாசனை சந்திக்க, கமல்ஹாசன் உடனடியாக இந்த படத்தில் நடிக்க ஒப்புக்கொண்டார். அதன்பிறகு தயாரிப்பாளராக எம்.ஆர்.ரமேஷ் தனது பாக்கெட்டில் இருந்து ரூ500 பணம் எடுத்து கமல்ஹாசனுக்கு அட்வான்சாக கொடுத்துள்ளார். கேட்டவுடன் ரூ500 மட்டுமே அட்வானஸ் வாங்கிக்கொண்டு இந்த படத்தில் நடிக்க கமல்ஹாசன் ஒப்புக்கொண்டார் என்றால் அதற்கு முக்கிய காரணம் இந்த படத்தின் திரைக்கதை தான்.

முதலில் பாடல்களே இல்லாத இந்த திரைக்கதையில் பாடல்களை சேர்ப்பது என்று படத்தின் தயாரிப்பாளர் எம்.ஆர்.ரமேஷ் முடிவு செய்து, கண்ணதாசனை வைத்து 4 பாடல்களை எழுதியுள்ளார். இதன்பிறகு பாடலுக்கான கம்போசிங்கும் தொடங்கியது. இந்த தகவலை கேள்விப்பட்ட கமல்ஹாசன் உடனடியாக கதாசிரியர் ஜெயபாரதியை வரவழைத்துள்ளார். கமல்ஹாசன் வர சொன்னதாக தெரிந்தவுடனே என்ன சொல்லப்போகிறார் என்பது ஜெயபாரதிக்கு யோசனையாக இருந்துள்ளது.

நேரில் வந்த ஜெயபராதியிடம், நான் இப்போது நடித்து வரும் அனைத்து படங்களிலும், பாடி ஆடிதான் நடிச்சிக்கிட்டு இருக்கேன். அது மாதிரி இல்லாம வித்தியாசமா நடிக்கனும் அப்படினுதான் உங்க கதையை நான் தேர்வு செய்தேன். திரும்பவும் இந்த படத்தில் 4 பாடல்கள் சேர்த்து என்னை ஆட வைத்தால், இந்த படத்தில் நான் நடிப்பதில் என்ன அர்த்தம் இருக்கிறது என்று கேட்டுள்ளார். மேலும் என்னை மன்னித்துவிடுங்கள் நான் இந்த படத்தில் நடிக்க மாட்டேன் என்று கூறியுள்ளார்.

அதே சமயம் ஜெயபாரதி, தேசிய விருதுக்காக இந்த படத்தை அனுப்பும்போது, பாடல்களை வெட்டிவிட்டு அனுப்பலாம் என்று கமல்ஹாசனை எவ்வளவோ சமாதானப்படுத்தியும் அவர் இந்த படத்தில் நடிக்க கடைசிவரை ஒப்புக்கொள்ளவே இல்லை.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Kannadasan
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment