Advertisment

எம்.எஸ்.வி போட்ட ஒரே டியூன்... கண்ணதாசன் எழுதிய 2 மெகாஹிட் பாடல்கள் : காமராஜருக்கும் ஒரு பாட்டு இருக்கு!

மனிதனின் அத்தனை உணர்ச்சிகளுக்கும் தனது வரிகள் மூலம் உயிர் கொடுத்த கண்ணதாசன், இசையமைப்பாளர் எம்.எஸ்.விஸ்வநாதனுடன் இணைந்து பல ஹிட் பாடல்களை கொடுத்துள்ளார்.

author-image
WebDesk
New Update
MSV Kannadasan Thangai Movie

கண்ணதாசன் - எம்.எஸ்.விஸ்வநாதன்

Listen to this article
0.75x 1x 1.5x
00:00 / 00:00

தமிழ் சினிமாவில் தனது பாடல்கள் மூலம் உச்சம் தொட்ட பெருமைக்கு சொந்தக்காரரான கவியரசர் கண்ணதாசன், ஓரே மெட்டுக்கு 3 வெவ்வேறு பாடல்களை எழுதி அசத்தியவர் என்பது பலரும் அறியாத ஒரு தகவல்.

Advertisment

தமிழ் சினிமாவில், கவிஞர், எழுத்தாளர், இயக்குனர், திரைக்கதை ஆசிரியர், தயாரிப்பாளர் என பன்முக திறமை கொண்டவர் தான் கண்ணதாசன். மனிதனின் அத்தனை உணர்ச்சிகளுக்கும் தனது வரிகள் மூலம் உயிர் கொடுத்த கண்ணதாசன், இசையமைப்பாளர் எம்.எஸ்.விஸ்வநாதனுடன் இணைந்து பல ஹிட் பாடல்களை கொடுத்துள்ளார். அந்த வகையில் எம்.எஸ்.வி இசைத்த ஒரே மெட்டில் கண்ணதாசன் 2 வெவ்வேறு பாடல்களை எழுதியுள்ளார்.

பாகப்பிரிவினை – தாழையாம் பூ முடிச்சு

சிவாஜி கணேசன் சரோஜா தேவி இணைந்து நடித்த படம் பாகப்பிரிவினை. இந்த படத்தில் ஒரு கை ஒரு கால் விளங்காத சிவாஜி கணேசனை சரோஜா தேவி காதலித்து திருமணம் செய்துகொள்வார். இவர்கள் இருவரும் இணைந்து பாடுவது போன்று அமைந்த பாடல் தான் தாழையாம் பூ முடிச்சு என்ற பாடல். இந்த பாடலில், சிவாஜி தனது குறைகளை நினைத்து கவலையில் பாடுவதும், அவருக்கு ஆறதல் சொல்லும் வகையில் சரோஜா தேவி பாடுவது போன்றும் கண்ணதாசன் எழுதியிருப்பார்.

காதலிக்க நேரமில்லை – காதலிக்க நேரமில்லை

புதுமை இயக்குனர் ஸ்ரீதர் இயக்கத்தில் வெளியான க்ளாசிக் படம் காதலிக்க நேரமில்லை. வயதான தோற்றத்தில் வரும் முத்துராமன் பாடும், காதலிக்க நேரமில்லை என்ற பாடலை சீர்காழி கோவிந்தராஜன் பாடியிருந்தார். எம்.எஸ்.விஸ்வநாதன் இசையில் இந்த பாடலை கவியரசர் கண்ணதாசன் எழுதியிருந்தார். இந்த பாடலும், தாழையாம் பூ முடிச்சு பாடலில் டியூனில் அமைந்திருக்கும்.

பாகப்பிரிவினை பாடல் அன்பின் வெளிப்பாடாக இருந்த நிலையில், காதலிக்க நேரமில்லை பாடல், ஒரு கொண்டாட்டத்தின் உச்சமாக இருக்கும். ஒரு காதலன் மாறுவேடத்தில் வந்து தனது காதலியை பார்த்து கிண்டலாக பாடுவது போல் இந்த பாடலை கண்ணதாசன் எழுதியிருப்பார்.

காமராஜரின் உன்னைப்போல் தலைவர் உண்டோ

இந்த பாடலை எழுதியது யார் என்பது தெரியாத நிலையில், பாடலை பாடியவர் டேப் ராதாமோகன். தாழையாம் பூ முடிச்சு, காதலிக்க நேரமில்லை ஆகிய பாடல்களின் வரிசையில் அமைந்த இந்த பாடலும் அதே மெட்டில் தான் அமைந்திருக்கும். முதல் 2 பாடல்கள் படத்தில் அமைந்திருந்தாலும், கடைசி பாடல் அரசியல் பாடலாக கர்ம வீரர் காமராஜரை பற்றிய ஒரு பாடலாக இருக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Kannadasan
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment