Advertisment

மதுவை தொடாதீர்கள்... எச்சரித்த கவிஞர் : முதல் முறை குடிக்க கண்ணதாசன் சொன்ன பொய்!

ராமச்சந்திரபுரம் என்ற ஊரில் இருந்து வெளியாகும் திருமகள் என்ற பத்திரிக்கையில் பணியிடம் காலியாக இருப்பதாக செய்தி அறிந்து அந்த பத்திரக்கையில் பணியாற்ற தொடங்கியுள்ளார் கண்ணதாசன்.

author-image
WebDesk
New Update
Kannadasan TR

கவியரசர் கண்ணதாசன்

Listen to this article
0.75x 1x 1.5x
00:00 / 00:00

கண்ணதாசன் முதன் முதலாக மது அருந்த சென்றபோது, கவிஞர் ஒருவர், மதுவை தொடாதீர்கள் என்று எச்சரித்தபோதும், நாளை முதல் தொடமாட்டேன் என்று சொல்லிவிட்டு கண்ணதாசன் குடிக்க தொடங்கியுள்ளார்.

Advertisment

சினிமா பாடல்கள் மூலம் தனக்கான ரசிகர்கள் கூட்டத்தை ஏற்படுத்திக் கொண்ட முக்கிய கவிஞர் கண்ணதாசன். சாதாரணமாக இல்லாமல் தன் வாழ்க்கையில் சந்தித்த அனுபவங்கள் கஷ்டங்கள்மகிழ்ச்சி என அத்தனை உணர்ச்சிகளையும் பாடல்கள் மூலம் வெளிப்படுத்திய கண்ணதாசன்இயக்குனர் தயாரிப்பாளர்கதாசிரியர்உள்ளிட்ட பல திறமைகளை உள்ளடக்கி இருந்தார்.

அதேபோல் மனித வாழ்க்கையின் அத்தனை உணர்ச்சிகளையும் பாடலாக வெளிப்படுத்தியுள்ள கண்ணதாசனின் வரிகள் விரக்தியில் உள்ள அனைவருக்கும் ஆறுதலாகவும்மகிழ்ச்சியில் உள்ள பலருக்கும் மேலும் மகிழ்ச்சியை தரக்கூடியதாகவும் உள்ளது. அதேபோல் க்ளாசிக் சினிமாவை எடுத்துக்கொண்டால் கண்ணதாசனின் பாடல்கள் தனி இடம் பிடித்திருக்கும் என்ற நிலை இன்றளவும் உள்ளது.

பாடல்கட்டுரைகதைதிரைக்கதைபடம் இயக்குவதுதயாரிப்பாளர் என பன்முறை திறமை கொண்ட கவியரசர் கண்ணதாசன்தனது வரிகள் மூலம் பலரின் சோகங்களுக்கு ஆறுதல் கூறியுள்ளார் என்று சொல்லலாம். அதே சமயம் கண்ணதாசன் கவிஞராக ஆவதற்கு முன்பு பல கம்பெனிகளில் பத்திரிக்கை ஆசிரியர், உதவி ஆசிரியர் பிழை திருத்துவபவர் என பல பணிகளில் ஈடுபட்டுள்ளார்.

அந்த வகையில் ராமச்சந்திரபுரம் என்ற ஊரில் இருந்து வெளியாகும் திருமகள் என்ற பத்திரிக்கையில் பணியிடம் காலியாக இருப்பதாக செய்தி அறிந்து அந்த பத்திரக்கையில் பணியாற்ற தொடங்கியுள்ளார் கண்ணதாசன். பிழை திருத்துபவராக முதலில் வேலைக்கு சேர்ந்த கண்ணதாசன், முதல் நாளே தனது ஆர்வமிகுதியில் பல பிழைக்களை பத்திரிக்கையில் திருத்தியுள்ளார். இதன் காரணமாக அவர் மீது அந்த பத்திரிக்கை அதிபருக்கு நம்பிக்கை அதிகமானர்.

இதன் காரணமாக தலையங்கம் எழுதும் பணியும் அவருக்கு வழங்கப்பட்டது. அப்படி ஒருநாள் இந்திய ராணுவம் வெற்றி பெற்று திரும்பியதை வரவேற்கும் விதமாக கண்ணதாசன் எழுதிய தலையங்கம், அந்த பத்திரிக்கை ஆசிரியரின் மனதை வெகுவாக கவர்ந்தது. இதனால் அவருக்கு அந்த பத்திரிக்கையின் ஆசிரியர் பணி வழங்கப்பட்டது. அதன்பிறகு தனது எழுத்துப்பணியை தொடங்கிய கண்ணதாசன், அந்த பத்திரிக்கையில், கவிதை கட்டுரை, சிறுகதை என எழுத தொடங்கியுள்ளார்.

ஒரு கட்டத்தில் அந்த பத்திரிக்கையில் வேலை பார்த்த ஒருவர் வேலையை விட்டு வெளியேற்றப்படடதால், அவருக்கு ஆறுதல் அளிக்கும் வகையில் கண்ணதாசனும் அந்த பத்திரிக்கையில் இருந்து வெளியேறினார். அன்றுமுதல் அந்த பத்திரிக்கை வெளியாவது நின்று போனது. அதன்பிறகு சென்னைக்கு வந்த அவர், ஒரு நண்பரின் வற்புறுத்தலின்பேரில், அறிஞர் அண்ணாவின் பேச்சை கேட்கும், வாய்ப்பு கிடைத்துள்ளது. அந்த பேச்சை கேட்ட கண்ணதாசன் அன்றில் இருந்து அண்ணாவின் ரசிகராக மாறியிருந்தார்.

அதன்பிறகு ஒருநாள் நண்பர்களுடன் மதுவிடுதிக்கு சென்றுள்ளார் கண்ணதாசன். அங்கே கம்பதாசன் இருக்க, அவருக்கு கண்ணதாசனை அறிமுகம் செய்து வைத்துள்ளனர். அப்போது கம்பதாசன், உங்களுக்கு குடிப்பழக்கம் இருக்கிறதா என்று கேட்க, இதுவரை இல்லை இன்று தான் முதலில் குடிக்க போகிறேன் என்று கூறியுள்ளார். இதை கேட்ட கம்பதாசன் மதுவை தொடாதீர்கள். அது உங்களை விடாது என்று சொல்ல, நாளை முதல் இதை தொடவே மாட்டேன் என்று கண்ணதாசன் குடித்துள்ளார்.

அப்படி சொல்லிவிட்டு குடிக்க தொடங்கிய கண்ணதாசன், தன் வாழ்நாளின் இறுதிவரை இந்த பழக்கத்தை விடவே இலலை என்பது அனைவருக்கும் தெரிந்த ஒன்று. 

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Tamil Cinema News
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment