எம்.ஜி.ஆர் படத்திற்கு வசனம்... பாதியில் விலகிய கண்ணதாசன் : தேவரின் முதல் படத்திற்கு வந்த சோதனை

க்ளாசிக் சினிமாவை எடுத்துக்கொண்டால் கண்ணதாசனின் பாடல்கள் தனி இடம் பிடித்திருக்கும் என்ற நிலை இன்றளவும் உள்ளது.

க்ளாசிக் சினிமாவை எடுத்துக்கொண்டால் கண்ணதாசனின் பாடல்கள் தனி இடம் பிடித்திருக்கும் என்ற நிலை இன்றளவும் உள்ளது.

author-image
WebDesk
New Update
MGR Kannadasa

எம்.ஜி.ஆர் - கண்ணதாசன்

சினிமா பாடல்கள் மூலம் தனக்கான ரசிகர்கள் கூட்டத்தை ஏற்படுத்திக் கொண்ட முக்கிய கவிஞர் கண்ணதாசன். சாதாரணமாக இல்லாமல் தன் வாழ்க்கையில் சந்தித்த அனுபவங்கள் கஷ்டங்கள்மகிழ்ச்சி என அத்தனை உணர்ச்சிகளையும் பாடல்கள் மூலம் வெளிப்படுத்திய கண்ணதாசன், இயக்குனர் தயாரிப்பாளர்கதாசிரியர்உள்ளிட்ட பல திறமைகளை உள்ளடக்கி இருந்தார்.

Advertisment

அதேபோல் மனித வாழ்க்கையின் அத்தனை உணர்ச்சிகளையும் பாடலாக வெளிப்படுத்தியுள்ள கண்ணதாசனின் வரிகள் விரக்தியில் உள்ள அனைவருக்கும் ஆறுதலாகவும்மகிழ்ச்சியில் உள்ள பலருக்கும் மேலும் மகிழ்ச்சியை தரக்கூடியதாகவும் உள்ளது. அதேபோல் க்ளாசிக் சினிமாவை எடுத்துக்கொண்டால் கண்ணதாசனின் பாடல்கள் தனி இடம் பிடித்திருக்கும் என்ற நிலை இன்றளவும் உள்ளது.

பாடல்கட்டுரைகதைதிரைக்கதைபடம் இயக்குவது, தயாரிப்பாளர் என பன்முறை திறமை கொண்ட கவியரசர் கண்ணதாசன்தனது வரிகள் மூலம் பலரின் சோகங்களுக்கு ஆறுதல் கூறியுள்ளார் என்று சொல்லலாம். அப்படி மனித உணர்வுகளை வைத்து பாடல்கள எழுதிய கண்ணதாசன், தேவர் பிலிம்ஸ் தயாரித்த முதல் படத்திற்கு வசனம் எழுதியுள்ளார் என்பது பலரும் அறியாத ஒரு நிகழ்வு.

1956-ம் ஆண்டு சாண்டோ எம்.எம்.ஏ. சின்னப்ப தேவர் தனது தேவர் பிலிம்ஸ் நிறுவனத்தின் சார்பில் தயாரித்த முதல் படம் தாய்க்கு பின் தாரம். எம்.ஏ.திருமுகம் இயக்கிய இந்த படத்தில், எம்.ஜி.ஆர், பானுமதி, கண்ணதாம்பா, பாலையா உள்ளிட்ட பலர் நடித்திருந்தனர். கே.வி.மகாதேவன்இந்த படத்திற்கு இசையமைத்திருந்தார். இந்த படம் எம்.ஜி.ஆர் மற்றும் சின்னப்பதேவர் இருவருக்குமே பெரிய வெற்றிப்படமாக அமைந்தது.

Advertisment
Advertisements

இந்த படத்திற்கு எஸ்.அய்யாப்பிள்ளை என்பவர் வசனம் எழுதியிருந்தார். ஆனால் இந்த படத்திற்கு முதலில்ல வசனம் எழுதியவர் கவியரசர் கண்ணதாசன் தான். படத்திற்கு 20 காட்சிகளுக்கான வசனத்தை எழுதிய அவர், அய்யாப்பிள்ளை என்பரை அழைத்து சென்று தேவரிடம், எனக்கு சில பிரச்சனைகள் இருக்கு, அதனால் இதற்கு மேல் என்னால் வசனம் எழுத முடியாது. எனக்கு பதிலாக இவர் எழுதுவார் என்று சொல்லிவிட்டு வந்துள்ளார்.

அதன்பிறகு அய்யாப்பிள்ளை வசனத்தில் வெளியான தாய்க்கு பின் தாரம் பெரிய வெற்றிப்படமாக அமைந்த நிலையில், கண்ணதாசன் எழுதிய 20 காட்சிகளுக்கான வசனத்தை எம்.ஜி.ஆர், சின்னப்ப தேவர் இருவருமே கடைசி வரை பாராட்டி பேசியதாக கண்ணதாசனின் மகன் அண்ணாதுரை கண்ணதாசன் தெரிவித்துள்ளார்.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Kannadasan Mgr

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us: