Advertisment

தயாரிப்பு நிர்வாகி கருத்து... மதிக்காத இயக்குனர் ஆணவம் : கடைசியில் நடந்து இதுதான்!

போர்கள காட்சி படமாக்கப்பட்டபோது இயக்குனருக்கு தயாரிப்பு நிர்வாகி அட்வைஸ் கூறியதால் படப்பிடிப்பே நிறுத்தும் சூழல் உருவாகியுள்ளது.

author-image
WebDesk
New Update
Kanthan Karunai Sivakumar

கந்தன் கருணை

Listen to this article
0.75x 1x 1.5x
00:00 / 00:00

தயாரிப்பு நிர்வாகி படப்பிடிப்பில் தலையிட்டதால் கோபமாக சென்ற இயக்குனர் அடுத்த நாள் அவர் சொன்னது சரிதான் என்பதை உணர்ந்து வருத்தம் தெரிவித்துள்ளார் என்பமு பலரும் அறியாத ஒரு தகவல்.

Advertisment

1967-ம் ஆண்டு ஏ.பி.நாகராஜன் இயக்கத்தில் வெளியான படம் கந்தன் கருணை. சிவக்குமார் முருகன் வேடத்தில் நடித்திருந்த இந்த படத்தில், சிவாஜி கணேசன்ஜெமினி கணேசன், ஜெயலலிதா, கே.ஆர்.விஜயா, உள்ளிட்ட பல முன்னணி நடிகர்கள் நடித்திருந்தனர். கே.வி.மகாதேவன் இசையமைத்த இந்த படத்தை கண்ணாசனின் அண்ணன் ஏ.எல். சீனிவாசன் தயாரித்திருந்தார்.

இந்த படத்திற்கு தயாரிப்பு நிர்வாகியாக பணியாற்றியவர் ஏ.எல்.எஸ்.வீரய்யா. இந்த படத்தின் க்ளைமேக்ஸில் வரும் தேவர்கள்  அசுரர்கள் இடையேயான போர் காட்சியை ஸ்டூடியோவில் வைத்து படமாக்க திட்டமிட்ட இயக்குனர் ஏ.பி.நாகராஜன், அதற்காக சுமார் 1000 பேர் தேவை என்று கூறியுள்ளார். ஆனால் தயாரிப்பு நிர்வாகி, ஏ.எல்.எஸ்.வீரய்யா இந்த இடத்தில் 500 பேர் தான் நிற்க முடியும் என்று உதவி இயக்குனர்களிடம் கூறியுள்ளார்.

இதை கேட்ட அந்த உதவி இயக்குனர்கள், இது குறித்து இயக்குனர் ஏ.பி.நாகரானிடம் சொல்ல, அவர், ஏ.எல்.எஸ்.வீரய்யாவை அழைத்து நாளைக்கு படமாக்க வேண்டிய காட்சிகளை நீங்களே எடுத்துவிடுங்கள். நான் ஸ்டூடியோவுக்கு வரவில்லை என்று சொல்லிவிட்டு கோபமாக அங்கிருந்து கிளம்பியுள்ளார். இதை சற்றும் எதிர்பார்க்காத ஏ.எல்.எஸ்.வீரய்யா உடனடியாக ஏ.பி.நாகராஜன் அலுவலகத்திற்கு சென்றுள்ளார்.

அங்கு கோபம் தனியாமல் இருந்த அவரிடம், ஏ.எல்.எஸ்.வீரய்யா பேச, உங்களுக்கு என்ன வேலை, நாங்கள் எதை கேட்கிறோமோ அதை கொண்டு வருவது தான் உங்கள் வேலை. அதை விட்டு விட்டு படம் எப்படி எடுக்க வேண்டும் என்று எங்களுக்கு சொல்லித்தர வேண்டாம் என்று கூறியுள்ளார். இதை கேட்ட ஏ.எல்.எஸ்.வீரய்யா, சரி சார் நாளைக்கு 1000 பேரை கொண்டு வருகிறேன் என்று சொலலிவிட்டு சென்றுள்ளார்.

மறுநாள் சொன்னபடி 1000 பேரும் வந்துவிட, ஸ்டூடியோவுக்குள் 500 பேர் நிற்க வெளியில், 500 பேர் நின்றுள்ளனர். இதை பார்த்த ஏ.பி.நகராஜன், இவர்கள் ஏன் வெளியில் நிற்கிறார்கள். உள்ளே போகவேண்டியதானே என்று சொல்ல, உள்ளே இடமில்லை சார் என்று உதவி இயக்குனர்கள் கூறியுள்ளனர். அதன்பிறகு ஏ.எல்.எஸ்.வீரய்யா சொன்னது தான் சரி என்று தனது தவறை உணாந்த ஏ.பி.நகராஜன், ஏ.எல்.எஸ்.வீரய்யாவிடம் மன்னிப்பு கேட்டுள்ளளார்.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Sivaji Ganesan
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment