தமிழ் சினிமாவில் என்றும் வாலிப கவிஞர் என்று பெயரேடுத்த வாலி, ஒரு முழு பாடலிலும் பெரும்பாலான ஆங்கில வார்த்தைகளை பயன்படுத்தி எழுதியிருப்பார் என்பது பலரும் அறியாத ஒரு தகவல். அந்த பாடல் என்ன? எந்த படத்தில் இடம்பெற்றது என்பதை பார்ப்போமா?
Advertisment
தமிழ் சினிமாவில் எம்.ஜி.ஆர் தொடங்கி இன்றைய சிம்பு வரை 5 தலைமுறை நடிகர்களுக்கு தனது பாடல்கள் மூலம் ஹிட் கொடுத்தவர் தான் கவிஞர் வாலி. தனது வாழ்வில் பல ஹிட் பாடல்களை கொடுத்துள்ள இவர் பல இயக்கனர்களின் படங்களில் பாடல்கள் எழுதியுளளார். அந்த வகையில், இயக்குனர் ஷங்கரின் முதல் படமான ஜென்டில்மேன் படம் தொடங்கி அனைத்து பாடத்திலும் பாடல்கள் எழுதியிருப்பார்.
அப்படி வெளியான ஒரு படம் தான் காதலன். கடந்த 1994-ம் ஆண்டு வெளியான இந்த படத்தில் பிரபுதேவா, நக்மா, ரகுவரன், வடிவேலு, மனேரமா, எஸ்.பி.பாலசுப்பிரமணியன் உள்ளிட்ட பலர் நடித்திருந்தனர். ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்த இந்த படத்திற்கு, வைரமுத்து, வாலி ஆகியோர் பாடல்கள் எழுதியிருந்தனர். இந்த படத்தில் வாலி 3 பாடல்களை எழுதியிருந்தார். இந்த 3 பாடல்களுமே ரசிகர்கள் மத்தியில் இன்றுவரை பெரிய வரவேற்பை பெற்று வருகிறது.
அந்த வகையில் ‘’முக்காப்புல்லா’’ பாடலை யாரும் மறக்க முடியாது. புரியாத வார்த்தைகளால் இந்த பாடல் தொடங்கினாலும், இடையில் பாடலின் 90 சதவீத வார்த்தைகள் ஆங்கிலத்தில் தான் இருக்கும். இந்த பாடலுக்கான டியூனை அமைத்த ஏ,ஆர்.ரஹ்மான், வாலியிடம் கொடுக்க அவர் பாடல் எழுதுவதற்கு முன்பே, பாடகர் மனோ வந்துவிடுகிறார். ஆனால், நீங்கள் போய் சாப்பிட்டுவிட்டு வாங்கள் நான் பாடல் எழுதி முடிக்கிறேன் என்று வாலி அவரை வெளியில் அனுப்பியுள்ளார்.
Advertisment
Advertisements
பாடகர் மனோ வெளியில் சென்று பரோட்டா சாப்பிட்டுவிட்டு வருவதற்குள் வாலி இந்த பாடலை எழுதி முடித்துள்ளார். 90 சதவீதம் ஆங்கில வார்த்தைகளால் நிரம்பிய இந்த பாடலை மனோ மற்றும் சொர்னலதா பாடியிருந்தனர். இந்த பாடல் இன்றைக்கும் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வருவது குறிப்பிடத்தக்கது.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“