/indian-express-tamil/media/media_files/2025/09/17/sivaji-ganesan-2025-09-17-13-49-17.jpg)
நடிப்பில் பல வித்தியாசங்களை காட்டி நடிகர் திலகமாக வலம்வ ந்த சிவாஜி கணேசன், தனது கடைசிகாலத்தில் பேசிய வார்த்தைகள் என்ன என்பது குறித்து நடிகரு சிவக்குமார் ஈரோடு புத்தக விழாவில் பேசிய வீடியோக்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது.
தமிழ் சினிமாவில் நடிப்பு பல்கலைகழகம் என்று அழைக்கப்பட்டவர் சிவாஜி கணேசன். 1952-ம் ஆண்டு வெளியான பராசக்தி படத்தின் மூலம் தனது திரையுலக பயணத்தை தொடங்கிய சிவாஜி, 1999-ம் ஆண்டு பூப்பறிக்க வருகிறோம் என்ற படத்தில் முக்கிய கேரக்டரில் நடித்திருந்தார். இதுதான் அவரின் கடைசி படம். அதற்கு முன்னதாக கே.எஸ்.ரவிக்குமார் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடித்த படையப்பா படத்தில் அவரின் அப்பா கேரக்ரில் நடித்திருந்த சிவாஜி, 2001-ம் ஆண்டு மரணமடைந்தார்,
தனது திரையுலக பயணத்தில் பல நடிகர்களுடன் இணைந்து நடித்துள்ள சிவாஜியுடன் நடிகர் சிவக்குமார் 16 படங்கள் இணைந்து நடித்துள்ளார். குறிப்பாக இவர்கள் இருவரும் இணையத்த உயர்ந்த மனிதன் படம் பெரிய வெற்றிப்படமாக இன்றும் கொண்டாடப்பட்டு வருகிறது, இதனிடையே 2018-ல் ஈரோடு புத்தக திருவிழாவில் பங்கேற்ற நடிகர் சிவக்குமார் சிவாஜியின் கடைசி காலக்கட்டம் குறித்து பேசியுள்ளார். அதில் சிங்கப்பூர் சென்ற சிவாஜி, அங்கேயே இறந்திருக்கலாம். திரும்பி வந்துவிட்டேன். இப்போ எப்படி சாக போகிறேன் என்று தெரியவில்லை என் கூறியுள்ளார்.
இது குறித்து பேசிய சிவக்குமார், ஆர்.வி.உதயகுமார் இயக்கத்தில் பிரபுவும், நானும் நடித்த உறுதிமொழி திரைப்படம் தேக்கடியில் ஷூட்டிங் நடந்தது. அப்போது என் தோல்மேல் கைப்போட்டு பேசிக்கொண்டிருந்த சிவாஜி, நான் இப்போ தேக்கடிக்கு கெஸ்டா வந்திருக்கேன்டா என்று சொன்னார். இதை கேட்ட நான் என்ன இப்படி சொல்றீங்க, நீங்க பண்ண மிச்சத்தை நான் நாங்க பண்ணிட்டு இருக்கோம். நீங்க சாப்பிட்டு எச்சில் சோற்றை தான் நாங்கள் சாப்பிடுகிறோம். நீங்கள் போட்ட வேஷத்தை எங்களால் போட முடியுமா, நீங்கள் பேசிய தமிழை எங்களால் பேச முடியுமா?
உங்களுக்கு சமமமா இங்கு யாரும் இல்லை. நாங்கள் இருக்கும்வரை இங்கு ஒருவன் பிறக்கப்போவதும் இல்லை. ஒரே சிவாஜி கணேசன் தான். மறுநாள் என் மகள் அந்த கெஸ்ட்ஹவுஸ் மூன்பு ஊஞ்சல் ஆடும்போது சிவாஜியை பார்த்து குட் மார்னிங் அங்கிள் என்று சொன்னாள். அப்போது அவர், உன் அப்பன் என் தம்பி நான் உனக்கு பெரியப்பா என்று சொன்னார். அப்போது அவள் சரிங்க பெரியப்பா என்று சொன்னாள். அதன்பிறகு சிங்கப்பூர் சிகிச்சைக்காக சென்ற சிவாஜி இறந்துவிட்டதாகவும், சவப்பெட்டி செய்வதாகவும் சொன்னார்கள். அப்போது என் மகள் பெரியப்பா சாகமாட்டார் பா என்று சொன்னாள். அதேபோல் அவர் நல்லபடியாக திரும்பி வந்தார்.
வந்தவுடன் நான் என் மனைவி மகள் பிருந்தா மூவரும் சென்றுபார்த்தோம். பிருந்தா அவருக்கு பொக்கே கொடுத்தாள். அதன்பிறகு என்னிடம் பேசிய சிவாஜி, நாமலெல்லாம் ஒன்அப்பான் எ டைம் ஆக்டர் டா. உலகம் நம்மை மறந்துவிட்டது டா என்று சொன்னார். அவர் மனதில் அவ்வளவு வலி. சிங்கப்பூரில் என் படங்களை பார்த்து பலரும் கொண்டாடுகிறார்கள். ஆனால் ஏன்டா நான் அங்கு சாகவில்லை, திரும்பி வந்துட்டேன் டா எப்படி சாகப்போகிறேன் என்று தெரியவில்லை, கொண்டாடுபவர்களுக்கு மத்தியில் இறப்பது தான் ஒரு கலைஞனுக்கு பெருமை என்று சொன்னதாக சிவக்குமார் கூறியுள்ளார்.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.