Advertisment

கஷ்டப்பட்டு பாடுனா... இப்படியா பண்ணுவீங்க... ரஜினி பட இயக்குனரை கடிந்துகொண்ட எஸ்.பி.பி

எஸ்.பி.பாலசுப்ரமணியன் கடந்த 1969-ம் ஆண்டு தமிழில் ஹோட்டல் ரம்பா என்ற படத்தின் மூலம் பாடகராக அறிமுகமானார். இந்த படம் வெளியாகவில்லை

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
SPB

பாடகர் மற்றும் நடிகர் எஸ்.பி. பாலசுப்ரமணியன்

தமிழ் சினிமாவில் தனது இனிமையான குரல் மூலம் பல ஹிட் பாடல்களை கொடுத்தவர் எஸ்.பி.பாலசுப்ரமணியன். 1966-ம் ஆண்டு தெலுங்கில் வெளியான ஸ்ரீ ஸ்ரீ ஸ்ரீ மரியாதை ராமண்ணா என்ற படத்தின் மூலம் பாடகராக அறிமுகமான எஸ்.பி.பி 1969-ம் ஆண்டு தமிழில் ஹோட்டல் ரம்பா என்ற படத்தின் மூலம் அறிமுகமானார். இந்த படத்தில் எம்.எஸ்.வி இசையில், அத்தானோடு இப்படி இருந்து என்ற பாடலை பாடியிருந்தார். ஆனால் இந்த படம் கைவிடப்பட்டது.

Advertisment

அதனைத் தொடர்ந்து தமிழில், சாந்தி நிலையம் என்ற படத்தில் இடம்பெற்ற இயற்கை என்னும் இளையகன்னி என்ற பாடல் மூலம் மீண்டும் தமிழ் சினிமாவில் பாடகராக அறிமுகமானார். இந்த பாடல் எஸ்.பி.பி.க்கு பெரிய வெற்றியை கொடுத்த நிலையில், அடுத்தடுத்து படங்களில் ஹிட் பாடல்களை பாடியிருந்தார். எம்.ஜி.ஆர் சிவாஜி, ஜெமினி கணேசன், முத்துராமன், ரஜினிகாந்த் கமல்ஹாசன் தொடங்கி இன்றைய இளம் நடிகர்கள் பலருக்கும் தனது குரலால் ஹிட் பாடல்களை கொடுத்துள்ளார் எஸ்பிபி.

அதேபோல் மெல்லிசை மன்னர் எம்.எஸ்.வி தொடங்கிய இளையராஜா, ஏ.ஆர்.ரஹ்மான், கீரவாணி, தேவா, வித்யாசாகர், சங்கர் கணேஷ் அனிருத் உள்ளிட்ட பல இசையமைப்பாளர்களின் இசையில் பாடல்களை கொடுத்தள்ள எஸ்.பி.பி படத்தின் காட்சிக்கு ஏற்ப தனது குரலை மாற்றி பாடி பல ஹிட் பாடல்களை கொடுத்துள்ளார். ஹீரோ மாறுவேடத்தில் வில்லன் முன்பு டான்ஸ் ஆடுகிறார் என்றால் அதற்கு தகுந்தார்போல் எஸ்.பி.பி தனது குரலில் வித்தியாசம் காட்டி பாடுவார்.

மேலும் பல படங்களில் டப்பிங் கலைஞராகவும் பணியாற்றியுள்ள எம்.பி.பி.சிற்பிக்குள் முத்து என்ற படத்தில் கமல்ஹாசனுக்கு குரல் கொடுத்திருந்தார்.  பல படங்களில் நடிகராகவும் முத்திரை பதித்துள்ள எஸ்.பி.பி. ரஜினி படத்தின் தான் கஷ்டப்பட்டு குரலை மாற்றி பாடிய ஒரு பாடல் படமாக்கப்பட்ட விதம் குறித்து கோபப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது. 1983-ம் ஆண்டு ரஜினிகாந்த், ராதா, ஜெய்சங்கர், சில்க் சுமிதா, தியாகராஜன் உள்ளிட்ட பலர் நடிப்பில் வெளியான படம் பாயும் புலி.

பஞ்சு அருணாச்சலம் எழுதிய இந்த படத்தை எஸ்.பி.முத்துராமன் இயக்கி இருந்தார். இந்த படத்தில் இடம்பெற்ற ஆடிமாசம் காத்தடிக்க என்ற பாடலை எஸ்.பி.பி பாடியிருந்தார். படத்தின் கதைப்படி வில்லன் கும்பலிடம் வேலை செய்யும் ரஜினிகாந்த் இந்த பாடலுக்கு நடனமாடுவது போல் காட்சி இருக்கும். அதற்காக எஸ்.பி.பி தனது குரலை மாற்றி இந்த பாடலை பாடியிருப்பார். ஆனால் பாடல் படமாக்கும்போது ரஜினிகாந்த் எந்த கெட்டப்பும் இல்லாமல் சாதாரணமாக இந்த பாடலை பாடமாக்கியிருப்பார்கள்.

இந்த பாடல் காட்சியை பார்த்த எஸ்.பி.பி. இதற்காக வா நான் கஷ்டப்பட்டு பாடினேன். இதுக்குதான் என்னை அப்படி பாடி வைச்சீங்களா? இதுக்கு நான் சாதாரணமாகவே பாடியிருப்பேனே என்று இயக்குனரிடம் கோப்பட்டு பேசினாராம்.  

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Singer Sp Balasubramaniam
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment